மழை, பெரும் மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மா–பள்ளம் பிரச்சினை என்ன? நீர் தேங்குவது ஏன்? (2)
அதிகமாக உள்ள ஏரி நீரை திறந்து விட்டுதான் தீர்வு காண வேண்டுமா?: அதிகப்பட்சமாக ஆவடியில் 19 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆகவே, முன்பு போல, இத்தண்ணீர் பள்ளமான இடங்களுக்குத் தான் சென்று தேங்கும். மேற்கு மாம்பலம் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதற்கு மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சனையே காரணம்[1]. சென்னையில் மாம்பலம் பகுதியில் இருந்து வரும் மழைநீர், அடையாறு வழியாக வங்காள விரிகுடாவிற்கு செல்லும். ஆனால், அடையாறு ஆற்றுக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்படுவதன் காரணமாக மழைநீர் அதிகமாக வந்து தேங்கும் நிலை உருவாகி உள்ளது[2].
பழையமாம்பலம் – அதே சோகக் கதை தான்: பழைய மாம்பலம் ஏரிக்கரைத் தெரு, புஷ்பவதி அம்மாள் தெரு போன்ற தெருக்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது[3]. தவிர மற்ற பகுதிகளிலும் சாலை, தெருக்கள் எல்லாம் வெள்ளக்காடாக உள்ளது[4]. மேற்கு மாம்பலம், தி. நகரில் பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சினையே மழை நீர் தேங்க காரணம் என்று கமிஷனர் தெரிவித்தார். சென்னையில் மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழ்தளத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் 30-11-2023 அன்று இரவு அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்து விடிய, விடிய தவித்தனர். வீடுகளுக்குள் நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர்.
பழைய/மேற்கு/கீழை மாம்பலம் பிரச்சினை பழைய கதைதான்: மேற்கு மாம்பலத்தில் இருக்கும் நான்கு சுரங்கப் பாதைகளிலும் நீர் தேங்கி, போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. ரங்கராஜபுரம், துரைசாமி ரோடு, மேட்லி ரோடு, அரங்கநாதன் சாலை என்ற சுரங்கப் பாதைகளில் மழைநீர் நிறந்தது. உடனடியாக அங்கிருக்கும் மோட்டார்களின் மூலம் தண்ணீரை இறைத்து அப்புறப் படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஏனெனில், அந்நீரை எங்கு இறைப்பது என்பது தான் பிரச்சினை. எங்கு இறைத்தலும், பள்ளமான இடத்தில் தான் சென்று சேரும். பிரச்சினை தொடரும். இவையெல்லாம், கால்வாயில் இறைத்து, அதன் மூலம், கடலுக்குள் சென்று கலக்குமாறு அமைத்திருக்கப் பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் தான், பள்ளங்களில் இருக்கும் நீரை அப்புறப்படுத்த முடிகிறது. இதற்காக, அங்கங்கு ”பம்பிங் ஸ்டேஷன்” களும் இருக்கின்றன. ஆனால், இந்த சுரங்கப் பாதைகளில் மழைநீர் நிறைந்து, தேங்கி கிடந்தது[5]. கனமழையால் சென்னை தியாகராய நகர் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் 2 நாட்களாக தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டுள்ளது[6]. இதேபோல, பிருந்தாவனம் தெரு, தம்பையா ரோடு, ஏரிக்கரை என்று அருகில் இருக்கும் தெருக்களில் நீர் தேங்கியது, வீடுகளிலும் நீர் நுழைந்தது[7]. பிறகு, நீர் இறைக்கப் பட்டு, நிலைமை கொஞ்சம்-கொஞ்சமாக சீரடைந்தது[8].
மா.சுப்பிரமணியன் ஆய்வு, ஊடகக்காரர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் 30-11-2023 அன்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து முதல்வருடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கடந்த 12 மணி நேரத்தில் சென்னையின் மழையளவு சராசரியாக 10 -11 செ.மீ பதிவாகியிருக்கிறது என்றாலும், கொளத்தூர், அடையாறு பகுதிகளில் 25 செ.மீ அளவு கனமழை பெய்திருக்கிறது. ஆனால், முதல்வரின் மழைநீர் வடிகால் திட்டம் இன்று பெருமளவில் கைகூடியிருக்கிறது. மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 800 கி.மீ மழைநீர் வடிகால் கால்வாய் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு கட்டப்பட்ட 2,100 கி.மீ மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரப்பட்டிருக்கிறது[9]. சென்னையில் இருக்கும் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர்நிலைப் பகுதிகளும் தூர்வாரப்பட்டிருக்கின்றன[10]. அதனால், மழைநீர் வேகமாக வெளியேறிக்கொண்டிருக்கிறது[11].
மா.சுப்பிரமணியன் தொடர்ந்து விளக்கம் அளித்தது: “செம்பரப்பாக்கத்திலிருந்து 3,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டாலே, அடையாறு கரையோர குடிசைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்[12]. ஆனால், தற்போது 6,000 கன அடி நீர் வெளியேற்றிய பிறகும் அந்தப் பகுதி பாதிக்கப்படவில்லை என்றால், தூர்வாரும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதுதான் அதற்குக் காரணம் [13]. சைதாப்பேட்டை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ஆய்வுசெய்தோம். அங்கிருக்கும் பல்வேறு குடிசைப் பகுதி மக்களுக்குப் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை[14]. ஆனால், மேற்கு மாம்பலம் கால்வாயில், செம்பரம்பாக்கத்திலிருந்து திறந்துவிடப்படும் 6,000 கன அடி நீர் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டிருப்பதால், அதை 4,000 கன அடி நீராகக் குறைக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்[15]. அதனால் மாம்பலம் பகுதியில் மட்டும் சிறு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் படிப்படியாகக் குறையும். இன்னும் 1, 2, 3, 4-ம் தேதிகளில் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது[16]. எனவே, தற்போது எங்கெல்லாம் மழையின் தீவிர பாதிப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உரிய பாதுகாப்புப் பணியை மேம்படுத்தவும், பாதாளச் சாக்கடை அடைப்புகளைச் சரிசெய்வதற்கான பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்[17]. நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் பிரச்னைகளை சீர்செய்வதற்கானப் பணிகள் வேகப்படுத்தப்பட்டிருக்கின்றன,” எனத் தெரிவித்தார்[18].
© வேதபிரகாஷ்
02-12-2023
[1] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையின் முக்கிய பகுதியில் வடியாத மழைநீர்.. காரணம் இதுதான்.. மாநகராட்சி ஆணையர் கொடுத்த விளக்கம்!, By Vignesh Selvaraj Published: Thursday, November 30, 2023, 12:26 [IST]
[2] https://tamil.oneindia.com/weather/chennai-corporation-commissioner-explains-about-why-rain-water-stagnant-in-some-places-561473.html?story=1
[3] தினத்தந்தி, தகர்த்தெடுத்த கனமழை.. மிதக்கும் மே.மாம்பலம்.. தண்ணீரால் மக்கள் கண்ணீர் , By தந்தி டிவி 30 நவம்பர் 2023 3:37 PM.
[4] https://www.thanthitv.com/news/tamilnadu/heavy-rains-people-are-crying-because-of-the-water-230157
[5] NEWS18-TAMIL, நியூஸ்18 தமிழ்நாடு செய்தி எதிரொலி – ரங்கராஜபுரம் சுரங்கப் பாதையில் மழைநீர் அகற்றம் | Chennai Rain, LAST UPDATED: DECEMBER 01, 2023, 10:13 IST.
[6] https://tamil.news18.com/videos/tamil-nadu/news18-tamil-nadu-news-echo-rainwater-removal-in-rangarajapuram-tunnel-chennai-rain-1254736.html
[7] தினத்தந்தி, புரட்டி அடித்த மழை;மிதந்த மே.மாம்பலம்– மாநகராட்சியின் நான் ஸ்டாப் ஆக்சன்–மொத்த ஏரியாவும் க்ளியர், By தந்தி டிவி, 1 டிசம்பர் 2023 10:22 AM.
[8] https://www.thanthitv.com/latest-news/torrential-rain-mild-may-mambalam-corporations-non-stop-action-whole-area-clear-230340?infinitescroll=1
[9] அத்திரிக்கை.காம், அதிகனமழை பெய்ததே தண்ணீர் தேங்க காரணம் – மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் 16000 மாநகராட்சி ஊழியர்கள்!, ராதாகிருஷ்ணன் தகவல்…, NOV 30, 2023
[10] https://patrikai.com/chennai-water-stagnation-reason-is-heavy-rain-16000-municipal-corporation-employees-are-working-to-dispose-of-rain-water-radhakrishnan-information/
[11] லோகலாப், ஆபத்தான நிலையில் அலுவலகம் செல்லும் குடியிருப்பு வாசிகள், By ஜீவன், Dec 01, 2023, 18:12 IST.
[12] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/thiruvallur/madhavaram/dwellers-going-to-office-in-dangerous-conditions-12117514
[13] நியூஸ்.360, கனமழையால் மேற்கு மாம்பலம் பகுதி பாதிப்பு… ஊத்தும் பேய் மழை.. வாட்ஸ் அப் நம்பர் அறிவித்த மாநகராட்சி!!, Author: Udayachandran RadhaKrishnan, 30 November 2023, 11:39 am
[14] https://www.updatenews360.com/trending/west-mambalam-area-affected-due-to-heavy-rain-corporation-announced-whatsapp-number-301123/
[15] மாலைமலர், மழைநீர் வடிகால் பணிகள் பலன் அளித்துள்ளது – கனமழையையும் எதிர்கொள்ள தயார்!, By மாலை மலர், 30 Nov 2023 12:58 PM (Updated: 30 Nov 2023 2:15 PM).
[16] https://www.maalaimalar.com/news/state/ma-subramanian-says-rainwater-drainage-works-have-yielded-results-690841
[17] விகடன், மழை முன்னெச்சரிக்கைப் பணி: “முதல்வர் நேற்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை” – அமைச்சர் சேகர் பாபு, V.M. மன்சூர் கைரி, Published: 30-11-2023 at 2 PM; Updated: 30-11-2023 at 2 PM
[18] https://www.vikatan.com/government-and-politics/politics/chennai-rain-minister-msupramanian-and-sekar-babu-press-meet-at-chennai