2023 மிக்ஜாம் புயல் 2015ஐ மீறி சென்னை மக்களை பாதித்தது – விஞ்ஞானம்–தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் ஏன் பாடம் கற்க முடியவில்லை? (2)
அதிக விலைக்கு விற்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப் படும்: சென்னையில் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்[1]. அதிகளவு பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்[2]. ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்[3]. ஆவின் பாலின் தேவை 4 மடங்கு அதிகரித்துள்ளது[4]. சென்னையில் வழக்கமாக 15 லட்சம் லிட்டர் பால் தேவை இருக்கும் நிலையில் தற்போது 60 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது[5]. இருப்பினும் ஆவின் பால் விநியோகத்தை சீராக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பால் அனுப்பி வைக்கப்படுகிறது[6]. ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பில் உள்ளது. ஆவின் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு தடையின்றி விற்பனை செய்ய வேண்டும். பால் சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். அதேபோல் ஆவின் முகவர்கள், விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பால் விநியோகம் பாதிப்பு பற்றி அரசு அதிகாரிகளின் விளக்கம்: இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறும்போது, “அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் மழைநீர் பாதிப்பு ஏற்பட்டது. இதுதவிர, மழையால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால், பால் விநியோகம் பாதித்தது. புதன்கிழமை ஆவின்பால் விநியோகம் சீராகிவிடும்” என்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டிப் போட்ட, ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ஒரு லிட்டர் பால், 200 ரூபாய்; குடிநீர் கேன், 250 ரூபாய்; படகில் மீட்க, 2,500 ரூபாய். வெள்ளக்காடாக கிடக்கும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் நிலவரம் இதுதான். வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு, ஒரு வேளை உணவு கிடைப்பது கூட அரிதாகிப் போன நிலையில், நிவாரணம் என்ற பெயரில் போட்டோவுக்கு மட்டும், ‘போஸ்’ கொடுக்கும் அரசியல் மற்றும் சுய விளம்பரப் பிரமுகர்களால், மீட்புப்பணிகள் தாமதமாகி வருகின்றன.
மழைநீர் நிற்குமிடங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு: வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், முடிச்சூர் உட்பட பல பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை, வெள்ளம் புகுந்துள்ளது. தரை தளத்தில் வசிப்போர், மேல் தளங்களில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். புயல் முன்னெச்சரிக்கையாக, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், இரண்டு நாட்களுக்கு தேவையான குடிநீர், அரிசி, காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்திருந்தனர். தற்போது, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். வெள்ள நீர் வடியாததால், வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை. இதனால், பால், குடிநீர், காய்கறிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாலுக்கு மக்கள், மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் பரிதாப நிலை காணப்படுகிறது. ஆனால், வழக்கம்போல் பால் வினியோகம் நடப்பதாக, ஆவின் தரப்பிலும் அதன் அமைச்சராலும் சொல்லப்படுகிறது.
சேவை செய்கிறோம் என்று விளம்பரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் முதலியோர்: கள நிலவரமே தெரியாமல் அதிகாரிகளும், அமைச்சர்களும் இருப்பதாக, பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரு பக்கம், அரசியல்வாதிகள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பால் பாக்கெட்டுகளை முகவர்களிடம் மொத்தமாக வாங்கிக் கொள்கின்றனர். இதனால், வீடுகளுக்கு பால் கிடைக்கவில்லை. இவர்கள் பெரும்பாலும் விளம்பரத்திற்காக சேவை செய்வடு போலவே தெரிகிறது. ஏனெனில் கொடுக்கும்பொழுது செல்வி எடுத்துக் கொள்வது, போட்டோ-வீடியோ எடுப்பது, பேட்டி காண்பது போன்றவையும் சேர்ந்துள்ளது. குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பால் வினியோகம் முற்றிலும் தடையாகி உள்ளது. ஆவின் மட்டுமின்றி, தனியார் பால் பாக்கெட்டுகளும் கிடைக்காததால், விலை தாறுமாறாக ஏறி விட்டது[7]. ஒரு லிட்டர் பால், 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது[8].
பாலைத் தொடர்ந்து, குடிநீர் விலையும் ஏறிவிட்டது: அதேபோல், குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது[9]. மழைக்கு முன்பு, 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட, 25 லிட்டர் குடிநீர் கேன், 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது[10]. காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பல கடைகளில் தண்ணீர் புகுந்ததால், பொருட்கள் சேதமடைந்துள்ளன. இன்னமும் முழு அளவில் கடைகள் திறக்கப்படவில்லை. ஒன்றிரண்டு கடைகள் திறந்திருக்கும் நிலையில், பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. இதனால், அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நடந்து செல்ல முடியாத பகுதிகளுக்கு, படகுகள் வழியாக சென்று, உணவு பொட்டலங்கள் வழங்குவது, வெளியில் வர விரும்புவோரை அழைத்து சென்று, நிவாரண முகாம்களில் தங்க வைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், முப்படை வீரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், அவர்கள் செல்லாத பகுதிகளுக்கு, சிலர் தனிப்பட்ட முறையில் படகுகளை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் ஒரு குடும்பத்தை மீட்க, 2,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
அதிகமாக வாங்கி வைக்க வேண்டாம் என்று அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை: பேரிடா் காலத்தைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருள்களைக் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா எச்சரித்தார்[11]. இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது[12]: “அத்தியாவசியப் பொருள்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். பால் விநியோகத்தைப் பொருத்தவரை சென்னையில் 19 லட்சம் லிட்டா் வழக்கமாக விநியோகிக்கப்படும்[13]. புதன்கிழமை 14 லட்சம் லிட்டா் வழங்கப்பட்டது. வியாழக்கிழமைமுதல் இயல்பான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்படும்[14]. 8 மாவட்டங்களிலிருந்து 6,650 கிலோ பால் பவுடா் விநியோகிக்கப்படுகிறது. 50 ஆயிரம் குடிநீா் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. சென்னை குடிநீா் வாரியம் மூலம் 15 ஆயிரம் 20 லிட்டா் கேன்கள் தயாரித்து விநியோகிக்கப்படுகிறது. 34,000 ரொட்டி பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. வியாழக்கிழமை 50,000 ரொட்டி பாக்கெட்டுகள் பெங்களூரிலிருந்து வரவழைக்கப்படும். தேவைக்கு மேல் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்கள் வாங்கி வைக்க வேண்டாம்[15]. குடிநீா், பால் விநியோகத்தில் தேவைக்கும், கையிருப்புக்கும் இடையே அதிக இடைவெளி உள்ளது[16]. வியாபாரிகள் குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டாம்[17]. அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கக் கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.[18]
© வேதபிரகாஷ்
07-12-2023
[1] நக்கீரன், ‘பதற்றமடைந்து அதிக பால் பாக்கெட்டுகளை வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்‘ – அமைச்சர் வேண்டுகோள், நக்கீரன் செய்திப்பிரிவு Photographer, Published on 06/12/2023 | Edited on 06/12/2023.
[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/people-should-not-panic-and-buy-more-milk-packets-and-stock-minister-mano
[3] தினகரன், சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல், December 7, 2023, 4:51 am
[4] https://www.dinakaran.com/special-attention-avin-milk-powder-minister-mano-thangaraj/
[5] தமிழ்.ஒன்.இந்தியா, வெள்ளத்தில் கிடைத்தவரை லாபம் .. பாலுக்கு கூடுதல் விலை.. நடவடிக்கை பாயும்.. மனோ தங்கராஜ் வார்னிங், By Jeyalakshmi C, Published: Wednesday, December 6, 2023, 10:56 [IST].
[6] https://tamil.oneindia.com/news/chennai/minister-mano-thangaraj-warns-of-strict-action-if-milk-is-sold-at-a-higher-price-563515.html
[7] தினமலர், ஒரு லிட்டர் பால், 200 ரூபாய்; குடிநீர் கேன், 250 ரூபாய்; படகில் மீட்க, 2,500 ரூபாய். மாற்றம் செய்த நாள்: டிச 06,2023 23:38
[8] https://m.dinamalar.com/detail.php?id=3497645
[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கேன் தண்ணீர் ரூ. 200… அரை லிட்டர் பால் ரூ. 100; ஆத்திரம் அடைந்த செம்மஞ்சேரி பொதுமக்கள் சாலை மறியல், WebDesk, Dec 07, 2023 04:31 IST.
[10] https://tamil.indianexpress.com/tamilnadu/floods-affected-semmancheri-people-road-block-protest-need-basic-facilities-1812977
[11] தினமணி, கூடுதல் விலைக்கு பொருள்கள்:தலைமைச் செயலா் எச்சரிக்கை, By DIN | Published On : 07th December 2023 01:09 AM | Last Updated : 07th December 2023 01:09 AM
[12] https://www.dinamani.com/tamilnadu/2023/dec/07/chief-secretary-warns-of-additional-cost-of-goods-4118299.html
[13] எக்ஸ்சாம்.டெய்லி, பால், தண்ணீர் பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை– முக்கிய எச்சரிக்கை!!, By Sivarangani -December 6, 2023.
[14] https://tamil.examsdaily.in/strict-action-to-take-if-milk-and-water-bottle-sale-in-extra-amount-in-tamilnadu/
[15] தமிழ்.நியூஸ்.18, “அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை” – தலைமைச் செயலர் எச்சரிக்கை, LAST UPDATED : DECEMBER 6, 2023, 3:00 PM IST.
[16] https://tamil.news18.com/tamil-nadu/strict-action-if-essential-commodities-are-sold-at-higher-prices-1259931.html
[17] நியூஸ்.7.தமிழ், “ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!, by Web Editor, December 5, 2023
[18] https://news7tamil.live/aavinpal-will-be-given-free-tomorrow-too-chief-secretary-shivdas-meena-information.html