2023 மிக்ஜாம்புயல் 2015ஐமீறிசென்னைமக்களைபாதித்தது – விஞ்ஞானம்–தொழிற்நுட்பங்கள்முன்னேறியும்பேரிடர்எதிர்ப்பு–தடுப்பு–கட்டுப்பாட்டுமுறைகள் ஏன் பலனிக்கவில்லை? (3)
பாதிக்கப்பட்டமக்களின்கோரிக்கை: நிவாரணப் பணி என்ற பெயரில், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், படகுகளை எடுத்துச் சென்று, போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவதால், மீட்பு பணி தாமதமாவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூறியதாவது: :வீடுகளைசுற்றிமழைநீர்தேங்கிநிற்பதால், வெளியில்செல்லமுடியவில்லை. மொபைல்போன்இணைப்புஇல்லை; மின்சாரம்இல்லை. குடிநீர்மற்றும்உணவுக்குசிரமப்படும்நிலைஉள்ளது. தண்ணீர்வடிந்தபகுதிகளில், பொருட்கள்விலைகடுமையாகஉள்ளது. விலையைகட்டுப்படுத்த, அரசுதுரிதநடவடிக்கைஎடுக்கவேண்டும்.மழைநீர்சூழ்ந்துள்ளபகுதியில்உள்ள, அனைத்துவீடுகளுக்கும்உடனடியாககுடிநீர், உணவுகிடைக்கஏற்பாடுசெய்யவேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிலஇடங்களுக்குஆவின்பால்இலவசமாகசப்ளைஎன்றுஅறிவிப்பு: செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்பகுதி மக்களுக்கு நாளை (7 ம் தேதி) 20 ஆயிரம் ஆவின் பால்பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்து உள்ளார்[1]. 15 வது மண்டல மழை நிவாரணப்பணி பொறுப்பாளரான அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்[2].
1960களிலிருந்துநிலைமாறவில்லை: இந்த 21ம் நூற்றாண்டிலேயே, இத்தனை விஞ்ஞான-தொழிற்நுட்ப முன்னேற்ற வசதிகள் இருந்தாலும், சில நாட்களில் பெய்த மழையில் சிங்காரச் சென்னையில் உள்ள மக்கள் பலவிதங்களிலும் அவதியுற்றதை கவனிக்கலாம். 1960களிலிருந்து சென்னையில் வசித்து, பல புயல்கள், பெரும் மழை, சுழற்காற்று, வெள்ளம் என்றெல்லாம் பார்த்து, அனுபவித்து அவதியுற்று, ஏன் பொருட்சேதமும் ஏற்பட்டு, இன்றும் இத்தகைய அலங்கோலங்களைப் பார்க்கும் பொழுது, ஆட்சி, அதிகாரம், மக்கள்-தொடர்பு சேவை பொறுப்பு முதலியவற்றில் இருப்பவர்கள் இந்த 60-70 ஆண்டுகளில் தரமிழந்து, மோசமாகி விட்டார்கள் என்று தான் தெரிகிறது. அவர்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளாமல், வாய்-சவடால் மூலம் ஏமாற்றி வந்ததும் மெய்ப்பிக்கப் படுகிறது. இவர்கள் எல்லோருமே நன்றாக சகல வசதிகளுடன் வீடுகளில் இருந்து வருவதால், நிச்சயமாக கஷ்டப் படும் பொது மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை, கவலை கொள்ளமாட்டார்கள் என்பதும் வெளிப்படுகிறது. அக்கஷ்டங்களை அனுபவிக்காத வரைக்கும் அவர்களுக்கு அந்த உணர்வும் வராது. வேண்டுமென்றால், வாய்பேச்சில் சமாளிக்கப் பார்ப்பார்கள்.
மழைநீர், வெள்ளநீர்கட்டுப்படுத்தும், முறைப்படுத்தும்மற்றும்கற்றும்–நீக்கும்வழிகளில்முன்னேற்றம்இல்லை: மழைத் தண்ணீர் தாழ்வாக உள்ள பகுதிகளில் சாலைகளில் தேங்குவது, வீடுகளில் நுழைவது, சுரங்கப்பாதைகளில் நீர் நிற்பது, போக்குவரத்து பாதிப்பது, பொது போக்குவரத்து நிறுத்தப் படுவது, முதலியவை தொடர்ச்சியாக மழைகாலங்களில் நடந்து வருகிறது என்றால், அத்துறைகளில் உள்ள பொறுப்பானவர்கள் ஏன் முன்னேற்றம் அடையவில்லை, பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்ற முக்கியமான கேள்விகள் எழுகின்றன. அதிலும் குறிப்பிட்ட இடங்கள், சுரங்கப்பாதைகள், சாலைகள் மட்டும் திரும்ப-திரும்ப பாதிக்கப் படுவது, அவர்களது இயலாமை மட்டுமல்லாது, இது வரை செய்து வந்த பணிகளின் மீதும் சந்தேகம் எழுகின்றது. இது வரை பலநூறு கோடிகள் செலவழிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், அதே இடங்களில் அதே பிரச்சினைகள் மறுபடி-மறுபடி ஏற்படுகின்றன. இதனால், பெரும் பேச்சு, அறிக்கைகள், ஊடகங்களில் திணிக்க்ப்படும் வாக்குறுதிகள் எல்லாமே பொய்த்து போய் விடுகின்றன.
21ம்நூற்றாண்டிலேயேநவீனவசதிசேவைகள்முடங்குவதுகேவலமானவிசயம்; மின்சாரம் இல்லை, இன்டெர்நெட் இல்லை, மொபைல் சேவை (நெட்வொர்க்) இல்லை என்று ஒருபக்கம் விஞ்ஞான-தொழிற்நுட்ப முன்னேற்றங்கள் இளித்து விட்டன. இவற்றுடன் சம்பத்தப் பட்டவர்களின் இயலாமை அவர்களது உதவாக்கரை தன்மையினைத் தான் அப்பட்டமாக மெய்ப்பித்துள்ளது. இந்த ஒருவாரத்தில் 29-11-2023 / 30-11-2023 மற்றும் டிசம்பர் 4 முதல் 6 வரை ஏற்பட்டுள்ள இழப்பிற்கு, சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் என்ன இழப்பீடு கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ 5-12-2023 அல்லது 06-12-2023 அன்று மின்சார சப்ளை வந்து, மொபைலுக்கு சார்ஜ் போட்டு, புகார் கொடுத்தாலும், “நாங்கள் பிரியாரிடி பேசிஸில் வேலை செய்கிறோம், ஐந்து மணி நேரம் ஆகும்,” என்று பதில் கொடுத்தது தான். 10 மணி நேரங்கள் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை. அதாவது, மக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு இரண்டு நாட்கள் வைக்கப் பட்டிருக்கிறார்கள். 07-12-2023 அன்று வருமென்று எதிர்பார்க்கப் படுகிறது என்கின்றனர்.
மின்சாரவெட்டு, தடைபோன்றவைதொடர்வது: மின்சாரத்தை வைத்து வியாபாரம் செய்வது, அரசியல் விளையாடுவது என்றெல்லாம் ஒரு பக்கம் இருக்கும்நிலையில், இப்படியும் நடப்பது வேடிக்கை தான். மின்சாரத்தை நம்பித்தான், இன்றைக்கு எல்லா மக்களும் வாழ்கிறார்கள். மின்சாரம் இல்லையென்றால், நீர் கிடைக்காது; நீர் கிடைக்கவில்லை என்றால் என்னாகும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. வீட்டு உபயோகப் பொருட்கள்-கருவிகள் வேலை செய்யாது; சமைக்க மிக்க கஷ்டப் பட வேண்டியிருக்கும். இரவில் பேன் / மின்-விசிறி இல்லாமல் தூங்க முடியாது; கொசுக்கள் கடிக்கும்; குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெருங்கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள். பிறந்த குழந்தைகள், மாத குழந்தைகள், சிறு குழந்தைகள் அழுது கொண்டே இருக்கும். இதனால்,பெற்றோர்களும் கவலையுன் அவர்களைத் தேற்றிக் கொன்டிருக்க வேண்டும். ஒரு இரவு இப்படி கழித்து, இன்னொரு இரவையும் அது போல கழிப்பது என்பது, பெரிய கொடுமை.
பால்விநியோகம்நிறுத்தம்–பாதிப்பு, ரேஷன்முறையில்கொடுப்பதுமுதலியன: இன்னொரு பக்கம் பால் சப்ளை இல்லை. ஒட்டு மொத்த சென்னைவாசிகள் ஆவின் பாலை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பால் விநியோகம் இல்லை. அதாவது, அங்கங்கு இருக்கும் டிபோக்களுக்கே பால் வரவில்லை என்கிறார்கள். 06-12-2023 அன்று பெரிய வரிசையில் நின்று அரை லிட்டர் பால் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பால் விற்பவர்களும் அடாவடித் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அதிக விலைக்கு விற்பது, மீதி சில்லரை சரியாகக் கொடுக்காதது என்றெல்லாம் செய்துள்ளனர். இத்தனை அவதி, கஷ்டம், துன்பம் என்றெல்லாம் இருக்கும் நிலையிலும், இவ்வாறெல்லாம் நடந்து கொள்ள இவர்களுக்கு எப்படி மனம் இருக்கிறது என்பது ஆய்வுக்குரியது. லட்சக் கணக்கில் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என்று கஷ்டப் பட்டுள்ளனர். பிறகு என்ன சித்தாந்தம் பேசி என்ன செய்து சாதிக்கப் போகிறார்கள்.
பொதுப்பணித் துறை, குடிநீர்-வடிகால் வாரியம், சாலைத்துறை, மின்சார வாரியம், இத்தறைகளுக்கு அமைச்சர்கள், பெரிய-பெரிய அதிகாரிகள், தொழிற்நுட்ப வல்லுனர்கள், பலநிலைகளில் வேலை செய்யும் லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள் என்று எல்லோரும் பொறுப்பேற்பார்களா?
இந்த 60-70 ஆண்டுகளில் அவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள். விஞ்ஞான-தொழிற்நுட்பங்க்ளை அறிந்து தத்தமது சேவைகளில் சிறந்தார்கள்?
பொது மக்கள் முன்னர் வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், தத்தம் கார்களில் வலம் வருவார்களா?
இணைப்புகளுக்கு லஞ்சம் கேட்பார்களா?
கொடுக்கவில்லை என்றால், இணைப்புகள் கொடுப்பார்களா? 2024ல் இவையெல்லாம் நடக்காமல் இருக்குமா?
கொஞ்சம் மனிதத்தன்மை இருந்தாலே, ஒவ்வொரு மனிதனும் கொஞ்சமாவது, மனசாட்சியுடன் யோசிப்பான், அயோக்கியத் தனம் செய்ய யோசிப்பான், லஞ்சம் வாங்கத் தயங்குவான்……ஆனால், நடந்து கொண்டு தானே இருக்கின்றன… இன்னும் சில நாட்களில் எல்லாமே சரியாகி, இயல்பு நிலைகளுக்கு வந்து விட்டால், பிழைப்புக்கு-வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால், மறந்தும் விடுவர். டிவி-மொபை சேவை தொடங்கியவுடன் டிவி-சீரியல், சினிமா என்றும் பார்க்க ஆரம்பித்து விடுவர். அரசியல்வாதிகள், சிலை திறப்பு, மணிமண்டம் கட்ட அடிக்கல் நாட்டுவது என்று கிளம்பி விடுவர்.
அதிகவிலைக்குவிற்பவர்களின்மீதுநடவடிக்கைஎடுக்கப்படும்: சென்னையில் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்[1]. அதிகளவு பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்[2]. ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்[3]. ஆவின் பாலின் தேவை 4 மடங்கு அதிகரித்துள்ளது[4]. சென்னையில் வழக்கமாக 15 லட்சம் லிட்டர் பால் தேவை இருக்கும் நிலையில் தற்போது 60 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது[5]. இருப்பினும் ஆவின் பால் விநியோகத்தை சீராக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பால் அனுப்பி வைக்கப்படுகிறது[6]. ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பில் உள்ளது. ஆவின் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு தடையின்றி விற்பனை செய்ய வேண்டும். பால் சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். அதேபோல் ஆவின் முகவர்கள், விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பால்விநியோகம்பாதிப்புபற்றிஅரசுஅதிகாரிகளின்விளக்கம்: இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறும்போது, “அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் மழைநீர் பாதிப்பு ஏற்பட்டது. இதுதவிர, மழையால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால், பால் விநியோகம் பாதித்தது. புதன்கிழமை ஆவின்பால் விநியோகம் சீராகிவிடும்” என்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டிப் போட்ட, ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ஒரு லிட்டர் பால், 200 ரூபாய்; குடிநீர் கேன், 250 ரூபாய்; படகில் மீட்க, 2,500 ரூபாய். வெள்ளக்காடாக கிடக்கும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் நிலவரம் இதுதான். வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு, ஒரு வேளை உணவு கிடைப்பது கூட அரிதாகிப் போன நிலையில், நிவாரணம் என்ற பெயரில் போட்டோவுக்கு மட்டும், ‘போஸ்’ கொடுக்கும் அரசியல் மற்றும் சுய விளம்பரப் பிரமுகர்களால், மீட்புப்பணிகள் தாமதமாகி வருகின்றன.
மழைநீர்நிற்குமிடங்களில்அத்தியாவசியபொருட்களுக்குதட்டுப்பாடு: வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், முடிச்சூர் உட்பட பல பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை, வெள்ளம் புகுந்துள்ளது. தரை தளத்தில் வசிப்போர், மேல் தளங்களில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். புயல் முன்னெச்சரிக்கையாக, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், இரண்டு நாட்களுக்கு தேவையான குடிநீர், அரிசி, காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்திருந்தனர். தற்போது, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். வெள்ள நீர் வடியாததால், வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை. இதனால், பால், குடிநீர், காய்கறிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாலுக்கு மக்கள், மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் பரிதாப நிலை காணப்படுகிறது. ஆனால், வழக்கம்போல் பால் வினியோகம் நடப்பதாக, ஆவின் தரப்பிலும் அதன் அமைச்சராலும் சொல்லப்படுகிறது.
சேவைசெய்கிறோம்என்றுவிளம்பரத்தில்ஈடுபடும்அரசியல்வாதிகள்முதலியோர்: கள நிலவரமே தெரியாமல் அதிகாரிகளும், அமைச்சர்களும் இருப்பதாக, பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரு பக்கம், அரசியல்வாதிகள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பால் பாக்கெட்டுகளை முகவர்களிடம் மொத்தமாக வாங்கிக் கொள்கின்றனர். இதனால், வீடுகளுக்கு பால் கிடைக்கவில்லை. இவர்கள் பெரும்பாலும் விளம்பரத்திற்காக சேவை செய்வடு போலவே தெரிகிறது. ஏனெனில் கொடுக்கும்பொழுது செல்வி எடுத்துக் கொள்வது, போட்டோ-வீடியோ எடுப்பது, பேட்டி காண்பது போன்றவையும் சேர்ந்துள்ளது. குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பால் வினியோகம் முற்றிலும் தடையாகி உள்ளது. ஆவின் மட்டுமின்றி, தனியார் பால் பாக்கெட்டுகளும் கிடைக்காததால், விலை தாறுமாறாக ஏறி விட்டது[7]. ஒரு லிட்டர் பால், 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது[8].
பாலைத்தொடர்ந்து, குடிநீர்விலையும்ஏறிவிட்டது: அதேபோல், குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது[9]. மழைக்கு முன்பு, 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட, 25 லிட்டர் குடிநீர் கேன், 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது[10]. காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பல கடைகளில் தண்ணீர் புகுந்ததால், பொருட்கள் சேதமடைந்துள்ளன. இன்னமும் முழு அளவில் கடைகள் திறக்கப்படவில்லை. ஒன்றிரண்டு கடைகள் திறந்திருக்கும் நிலையில், பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. இதனால், அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நடந்து செல்ல முடியாத பகுதிகளுக்கு, படகுகள் வழியாக சென்று, உணவு பொட்டலங்கள் வழங்குவது, வெளியில் வர விரும்புவோரை அழைத்து சென்று, நிவாரண முகாம்களில் தங்க வைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், முப்படை வீரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், அவர்கள் செல்லாத பகுதிகளுக்கு, சிலர் தனிப்பட்ட முறையில் படகுகளை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் ஒரு குடும்பத்தை மீட்க, 2,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
அதிகமாகவாங்கிவைக்கவேண்டாம்என்றுஅதிகாரிகள்மக்களுக்குஎச்சரிக்கை: பேரிடா் காலத்தைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருள்களைக் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா எச்சரித்தார்[11]. இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது[12]: “அத்தியாவசியப்பொருள்கள்அனைவருக்கும்சென்றுசேரவேண்டும். பால்விநியோகத்தைப்பொருத்தவரைசென்னையில் 19 லட்சம்லிட்டா்வழக்கமாகவிநியோகிக்கப்படும்[13]. புதன்கிழமை 14 லட்சம்லிட்டா்வழங்கப்பட்டது. வியாழக்கிழமைமுதல்இயல்பானஅளவுக்குபால்விநியோகம்செய்யப்படும்[14]. 8 மாவட்டங்களிலிருந்து 6,650 கிலோபால்பவுடா்விநியோகிக்கப்படுகிறது. 50 ஆயிரம்குடிநீா்பாட்டில்கள்வழங்கப்படுகின்றன. சென்னைகுடிநீா்வாரியம்மூலம் 15 ஆயிரம் 20 லிட்டா்கேன்கள்தயாரித்துவிநியோகிக்கப்படுகிறது. 34,000 ரொட்டிபாக்கெட்டுகள்வழங்கப்படுகின்றன. வியாழக்கிழமை 50,000 ரொட்டிபாக்கெட்டுகள்பெங்களூரிலிருந்துவரவழைக்கப்படும். தேவைக்குமேல்உணவுஉள்ளிட்டஅத்தியாவசியப்பொருள்களைபொதுமக்கள்வாங்கிவைக்கவேண்டாம்[15]. குடிநீா், பால்விநியோகத்தில்தேவைக்கும், கையிருப்புக்கும்இடையேஅதிகஇடைவெளிஉள்ளது[16]. வியாபாரிகள்குடிநீா்உள்ளிட்டஅத்தியாவசியப்பொருள்களைகூடுதல்விலைக்குவிற்கவேண்டாம்[17]. அத்தியாவசியப்பொருள்களைப்பதுக்கக்கூடாது. இதுபோன்றசெயல்களில்ஈடுபட்டால்கடும்நடவடிக்கைஎடுக்கப்படும்,” என்றார்.[18]
[1] நக்கீரன், ‘பதற்றமடைந்துஅதிகபால்பாக்கெட்டுகளைவாங்கிஇருப்புவைக்கவேண்டாம்‘ – அமைச்சர்வேண்டுகோள், நக்கீரன் செய்திப்பிரிவு Photographer, Published on 06/12/2023 | Edited on 06/12/2023.
[11] தினமணி, கூடுதல்விலைக்குபொருள்கள்:தலைமைச்செயலா்எச்சரிக்கை, By DIN | Published On : 07th December 2023 01:09 AM | Last Updated : 07th December 2023 01:09 AM
[15] தமிழ்.நியூஸ்.18, “அத்தியாவசியபொருட்களைஅதிகவிலைக்குவிற்றால்கடும்நடவடிக்கை” – தலைமைச்செயலர்எச்சரிக்கை, LAST UPDATED : DECEMBER 6, 2023, 3:00 PM IST.
05-12-2023 மற்றும் 06-12-2023 நாட்களில்சென்னைமக்களின்அவதி: சென்னைவாசிகளுக்கு மழை, பெரும்-மழை, சூறாவளி, சூறைக்காற்று, வெள்ளம், சாலைகளில் தண்ணீர் தேங்குவது-ஓடுவது; ஏரிகளைத் திறந்து விடுவதால் வெள்ளம் புகுவது, தாழ்வான இடங்களில் வெள்ளம் பாய்வது, வீடுகளில் நீர் வருவது-தேங்குவது, மின்சாரம் துண்டிப்பு, என்பனவெல்லாம் புதியதல்ல. 1950-60களிலிருந்து கவனித்து வருவர்களுக்கு நன்றாகத் தெரிந்த விசயம் தான். ஆனால், 2015ற்குப் பிறகும், அதே நிலை அல்லது அதை விட மோசமான நிலை தொடர்வது திகைப்பாக உள்ளது. இப்பொழுது டிசம்பர் 2023ல் தொடர்மழை காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய தேவையான ஆவின்பால் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டனர்[1]. மேலும், சில இடங்களில் அதிக விலைக்கு பழைய பால் பாக்கெட்டுகளை வாங்கி செல்லும் நிலையும் ஏற்பட்டது[2]. இப்படி கொஞ்சம்-கொஞ்சமாக செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. துரதிருஷ்டவசமாக, இம்முறை ஊடகங்களே விவரங்களை மறைப்பது வேதனையாக உள்ளது. ஏனெனில், இதனால், கஷ்டப் பட்ட, தொடர்ந்து சொல்லொனா இன்னல்களை அனுபவித்து வரும்பொது மக்களின் நிலை, அவர்களது இழப்பு மாறப் போவதில்லை.
05-12-2023 மற்றும் 06-12-2023 நாட்களில்ஆவின்பால்விநோகம்இலாமல்இருந்தது: `மிக்ஜாம்’ புயல் காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 முதல் 5 அடிகள் வரை மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வாக உள்ள வீடுகளில் நீர் புகுந்துள்ளது. மழைநீர் வடியாத நிலையில், பல இடங்களில் போக்குவரத்து முடங்கி, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் கடும்அவதிப்பட்டனர். குறிப்பாக, குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெரும் இன்னலை சந்தித்தனர். சென்னையில் வியாசர்பாடி, எம்கேபி நகர்பகுதி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, செனாய்நகர், கோயம்பேடு, அம்பத்தூர், மயிலாப்பூர் உட்படபல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. இங்கு பழைய மாம்பலம் ஏன் விடுபட்டது என்று தெரியவில்லை. சென்னையில் ஆவின் பாலைபொருத்தவரை 14.75 லட்சம் லிட்டர் பால் தினசரி விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தொடர்மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்களில் 05-12-2023 அன்று காலையில் பால் விநியோகம் மிகக்குறைவாகவே இருந்தது.
ரேஷன்முறையில்ஆவின்பால்விற்கப்பட்டநிலை: சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் சாலை முழுதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது[3]. பல சுரங்கபாதைகளில் நீர் நிரம்பியதால் மூடப் பட்டன. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே போக்குவரத்து தடைபட்டுள்ள காணத்தால் சென்னை முழுதும் பால் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிகிறது[4]. ஒரு சில இடங்களில் மட்டுமே பால் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பாலை வாங்க பொதுமக்கள் நெடுந்தொலைவு வரை வரிசையில் காத்திருந்தனர். ஆவின் பால் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட் விநியோகமும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறும்போது, “ஆவின் பால் மட்டுமின்றி தனியார் பால் பாக்கெட்டும் கிடைக்கவில்லை. சில இடங்களில் அதிக விலைக்கு பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பால், பழைய பாக்கெட் என்பதால், திரிந்து கெட்டுப்போனது. எனவே, அத்தியா வசிய தேவையான பாலை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
தமிழகபால்வளத்துறைஅமைச்சர்மனோதங்கராஜ்செய்தஆய்வு: ஒரு பக்கம் இவ்வாறு இர்க்கும்நிலையில், தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார் என்ற செய்திகளும் வந்துள்ளன. சிலபால் பூத்துகளுக்குச் சென்றார். பார்வையிட்டார், என்றெல்லாம் செய்திகள் உள்ளன. இருப்பினும், அவர் என்ன, எத்தகைய ஆய்வு செய்தார் என்று தெரியவில்லை பால் விநியோகம் பாதிக்கப்பட்டதற்கு அமைச்ச்சரும் அதிகாரிகளும் பல காரணங்களைக் கூறினர்.
ஆவின் தொழிற்சாலைகளில் வேலையாட்கள் குறைவாக வேலை செய்தனர். அதாவது, மழை என்பதால் வரமுடியவில்லை.
பால் விநியோக வண்டிகள் சாலைகளில் செல்ல முடியவில்லை. சாலை குண்டு-குழி, நீர் தேக்கம், ஒரு இடத்தில் வண்டி கவிழ்ந்தது முதலியன.
சப்ளை-டிமான்ட் பிரச்சினை – அம்பத்தூர்-சோழிங்க நல்லூர்-மாதவரம் தொழிற்சாலைகளிலிருந்து உற்பத்தி, விநியோகம் குறைந்தது;
குறிப்பாக அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது
அதிக விலைக்கு டிப்போ-காரர்கள், கடைக்காரர்கள் விற்றது;
மக்கள் அதிகமாக வாங்கி வைத்துக் கொண்டது….
தமிழகபால்வளத்துறைஅமைச்சர்மனோதங்கராஜ்விளக்கம்: ஆவின் பால் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்[5]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத மழையால் பால் உற்பத்தியிலும், விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது[6]. குறிப்பாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்த நிலையில் வாகன போக்குவரத்து மிகப்பெரிய சவாலாக இருந்தது[7]. சென்னை மாநகரை பொறுத்தவரையில் வெளி மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு சென்னை அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது[8]. தனியார் பால் நிறுவனங்களை பொறுத்த வரையில் அவர்களும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பால் கொண்டு வருவது வழக்கம்[9]. சென்னை பெருநகர் பகுதியில் கால்நடை இல்லாத காரணத்தால் பால் உற்பத்தி செய்யப்படுவதில்லை[10]. இந்த சூழ்நிலையில் தான் 2 நாட்கள் ஆவின், தனியார் பால் விநியோகஸ்தர்கள் கூட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பால் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிட்டது[11]. அதிலும் குறிப்பாக அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது[12]. அதனால் போர்கால நடவடிக்கை மேற்கொண்டு பால் விநியோகத்தை சீரமைத்து தற்போது ஓரளவுக்கு பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பால் தேவையில் இடைவெளி ஏற்படாமல் தவிர்ப்பதற்கு பால் பவுடர் விநியோகமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் பொதுமக்கள் பால் தொடர்ந்து கிடைக்காதோ என்ற அச்சத்தில் அதிகமான பால் வாங்கும் நிலை உள்ளது. அதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
[1] தமிழ்.இந்து, தொடர்மழைஎதிரொலியால்விநியோகம்பாதிப்பு: சென்னையில்பால்கிடைக்காமல்மக்கள்அவதி, Published : 06 Dec 2023 07:42 AM; Last Updated : 06 Dec 2023 07:42 AM.
[7] சமயம், நிலைமைசீராயிடுச்சு.. நாளைமுதல்ஆவின்பால்விநியோகத்தில்எந்ததடையும்இருக்காது.. மனோதங்கராஜ்சொன்னகுட்நியூஸ்!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 6 Dec 2023, 4:48 pm.
[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Avian milk : பதற்றமடைந்துதேவையைவிடஅதிகமாகபால்வாங்கிஇருப்புவைக்கவேண்டாம்– மனோதங்கராஜ், Ajmal Khan, First Published Dec 6, 2023, 8:51 AM IST; Last Updated Dec 6, 2023, 8:51 AM IST
சேகர்பாபுகொடுத்தவிளக்கம்: அதைத் தொடர்ந்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “வடசென்னையில், முதல்வர்ஸ்டாலின்பொறுப்பேற்றபிறகுகொசஸ்தலைமழைநீர்வடிகாலுக்காகக்கால்வாய்அமைக்கப்பட்டிருக்கிறது[1]. சென்னையில்சாலை 5,500 கி.மீநீளம்இருந்தாலும், சென்னையைச்சுற்றிபழையகால்வாய்களைஇடித்துஅகலப்படுத்தி, புதியகால்வாய்களைஏற்படுத்தியதில் 1,450 கோடிசெலவுசெய்யப்பட்டிருக்கிறது[2]. அடையாற்றில் வரும் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரால் மாம்பலம் கால்வாயில் நீர் வெளியேறாதது தெரியவந்தது[3]. இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க அறிவுறுத்தினார்[4]. இவ்வாறு இவர்கள் பேசியது, அரசு-ரீதியில் தான் இருந்ததே தவிர, தொடரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் போக்கில் இல்லை.
மின்சாரத்தால்பாதிக்கப்பட்டு, இரண்டுபேர்உயிரிழப்பு: தியாகராயநகர் பகுதியில் பாண்டிபஜார் சிவஞானம் சாலை, பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை ஆகியவணிக பகுதிகளிலும் மழைநீர் தேங்கிபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை புது பெருங்களத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (23), நேற்று முன்தினம் இரவு மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலை வழியாகக் கொட்டும் மழையில் சாலையில் தேங்கிய நீரில் செல்போனில் பேசியபடி சென்றார். அப்போது அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்[5]. தியாகராயநகர் வாணி மஹால் முன்புறம் உள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மின்விளக்கு கம்பத்தின் அருகே, மின்சாரம் தாக்கி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இசாசுல் (19) உயிரிழந்தார்[6]. “லோடு” அதிகமாகிறது என்று இப்பொழுதெல்லாம் பத்து வீடுகளுக்கு இடையில் ஒரு மின்சார கேபிள் இணைப்புப் பெட்டிகள் வைக்கப் பட்டு வருகின்றன. மின்சார துண்டிப்புப் பிரச்சினை வந்தால், அங்கங்கு ஆர்த்து, சரிசெய்யலாம் என்ற நோக்கில் இவை வைக்கப் படுகின்றன. ஆனால், இவையெல்லாமே அவசரம்-அவசரமாக வைக்கப் பட்டவைப் போலத் தான் இருக்கின்றன. கேபிள்கள், கேபிள் இணைப்புகள் முதலியவை தெரிவது போலத் தான் இருக்கின்றன. சரியாக கதவுகள் மூடப் படுவதில்லை. சாலை இருக்கும் அதே உயரத்தில் இருப்பதாலும், தொடர்ந்து சாலை உயர்த்தப் படுவதாலும், அவை கீழே செல்கின்றன. இதனால், தண்ணீரில் முழுகும் நிலை ஏற்படுகிறது. இதுதான் னின் கசிவு, ஷாக்க்கிற்கு காரணமாகிறது.
Photo courtesy – The Hindu
1950-60களிலிருந்துதொடர்ந்துஇருக்கும்பிரச்சினை: மழைக்காலத்தில் 1950களிலிருந்து, அப்பொழுது மாம்பலம் இப்பொழுது மேற்கு மாம்பலம் என்று அழைக்கப்படுகின்ற இடத்தில், ஒவ்வொரு ஆண்டிலும் பொதுவாக மழை நீர் தெருக்குறளில் தேங்கி நிற்கும். குறிப்பாக மூன்று, ஐந்து, ஏழு என்றெல்லாம் விட்டு ஆண்டுகளில் மழையினால் அதிக நீர் வரும். வெள்ளம், பெருவெள்ளம், புயல், சுனாமி போன்ற காலங்களிலும் இயற்கையாகவும் மற்றும் சென்னை சுற்றியுள்ள ஏரிகளில் நீர்நிலை தேக்கம் அதிகமாக இருக்கும் பொழுது, அந்த நீரை திறந்து விடுவதாலும் இத்தகைய வெள்ளம் இப்பகுதியில் ஏற்படுகிறது. இதனால் நிச்சயமாக வீடுகளில் 1940-60 என்று பார்த்தால், அக்காலகட்டத்தில் கட்டியுள்ள வீடுகளில் முதலில் ஒரு அடி, 2 அடி 3 அடி என்று, 2000 ஆண்டுகளில் 5 அடிக்கு நீர் தங்க ஆரம்பித்தது. இதனால், அத்தகைய பழைய வீடுகளில் வசித்தவர்கள், பெரும்பாலான மக்கள் மிகவும் அவதிப்பட்டு தான் வந்திருக்கின்றனர். ஏனென்றால் அத்தகைய நீர் வரும்போது அவர்கள் வீடுகளில் இருக்கும் எல்லா பொருள்களுமே மூழ்கிவிட்டு நாசமாகின்றன அதிலிருந்து மீட்கப்படுகின்ற பொருட்கள் என்பது நிச்சயமாக ஒரு 30 இருந்து 50 சதவீதம் கூட உருப்படியாக இருக்காது.
Photo courtesy – The Hindu
“மாபள்ளம்,” ஏரிக்கரைத்தெருபிரிந்திருக்கிறது, ஆறியிருக்கிறது, ஆனால், மழையில்சேர்ந்துவிடுகிறது: மாம்பலம் என்பது “மா பள்ளம்” அதாவது இங்கு கிழக்குப் பக்கத்தில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியானது சைதாப்பேட்டை, மாம்பலம் நுங்கம்பாக்கம் வரை பரவி பெரிதாக இருந்தது. அதனால்தான், மாம்பலத்தில் இருந்து ஆரம்பிக்கும் இந்த “ஏரிக்கரை தெரு” என்பது நுங்கம்பாக்கம் வரைக்கும் சென்றது. பிறகு நுங்கம்பாக்கம், மாம்பலம் இடைப்பட்ட பகுதியில் வீடுகள், தெருக்கள், ரயில் தடங்கள் என்று வளர்ச்சி ஏற்பட்ட பொழுது, அது தனித்தனியாக பிரிந்தது, அதாவது “ஏரிக்கரைத் தெரு” இங்கும் உள்ளது, அங்கும் உள்ளது. எனவே இது ஏரிக்கரையில் பகுதியில் அமைந்திருந்த இடமானதால் பள்ளமாக தான் இருந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதாவது 1920 முப்பது நாற்பதுகளில் இந்த இடங்களை வாங்கி வீடு கட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த காலத்தில் அதாவது சுமார் நூறாண்டுகள் முன்பு கட்டப்பட்ட வீடுகள் இப்பொழுது நிச்சயமாக ஐந்து முதல் ஏழு அடி வரை தெருவின் அந்த நிலைக்கு கீழே தான் உள்ளன. அதனால் தான் பழைய வீடுகள் 2000 ஆண்டிலிருந்து ஒவ்வொரு மழை காலத்திலும் மூழ்கி வருகின்றன. ஆனால் நூறாண்டுகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும், டிரைனேஜ் என சொல்லப்படுகின்ற கழிவுநீர்-மழை நீர் எல்லாம் முறையாக நிலத்தடிக்குச் செல்லுத்தப் பட்டு, குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு, வெளியேற்றும் முறை சரியாக செய்யப் படவில்லை.
Photo courtesy – The Hindu
கிழக்குஉயர்ந்து, மேற்குதேய்ந்தவிதம்: 1947க்கு – விடுதலைக்கு முன்னர் தெருக்களில் பூமிக்கு அடியில் பதிக்கப் பட்ட அதே குழாய்கள் தான் இப்பொழுதும் பயன் படுத்தப் படுகின்றன. “வெள்ளக் காரன் காலத்தில் போடப் பட்ட பைப்பு” என்றும் வயதான மக்கள் கூருகின்றனர். இந்த 100 ஆண்டுகளில் மாம்பலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது கிழக்கு பக்கம் மட்டும் தியாகராய நகர் /டி.நகர் / தி.நகர் என்று மற்றும் மேற்கு பக்கம் மேற்கு மாம்பலம் என்றும் அழைக்கப்படுகிறது. எல்லாவித வளர்ச்சி அதே போல கிழக்கு பக்கத்தில் அதிகமாக இருந்து வருகிது, ஆனால் மேற்கு பக்கம் குறைவாகவே உள்ளது. “சரவணா ஸ்டோர்ஸ், குமரன், பொத்தீஸ்” என்றால் இந்தியா முழுவதும் தெரிந்துள்ளது. ஆனால் அசோக் நகர் என்ற குடியிருப்பு உருவானதால், அதை சுற்றிலும் முக்கியமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரமுகர்கள், பணக்காரர்கள் என்று இடம் வாங்கி, அதிகமாக வீடுகள் கட்டிக் கொண்டு, குடியேறியுள்ள படியால், அங்கு இருப்பவர்கள் தி.நகர் மற்றும் மவுண்ட் ரோடு செல்ல இந்த மேற்கு மாம்பலம் வழியாகத்தான் செல்ல வேண்டி இருந்தது. அதனால் தான் 1960களில் துரைசாமி ரோடு சப்வே அதாவது தரைக்கீழ் சொல்லும் பாலமாக இருந்தது, அமைக்கப்பட்டது, ஆகையால் இந்த அப்பகுதியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மிக சாதாரணமாக இருக்கிறது.
Photo courtesy – The Hindu
குடிநீர்–கழிவுவடிகால்வாரியம்ஏன்முறையாகவேலைசெய்யவில்லை?: இது ஒரு பக்கம் இருக்க, நமது பழைய பிரச்சனைக்கு செல்வதானால், இந்த நூறாண்டுகளில் இத்தனை வளர்ச்சிகளில், தெருக்களும் போடப்படுகின்றன. அவற்றின் உயரமும் அதிகமாகி வருகிறது. அதாவது ஒவ்வொரு தடவையும் “ரோடு” போடும் போதும், மூன்று ஐந்து இஞ்சுகள், அங்குலங்கள் உயரமாகி, சென்ற 50-100 ஆண்டுகளில் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது எனலாம். ஆனால் அதே நிலையில் 1920-30 களில் பதிக்கப்பட்ட அந்த குழாய்கள், அதே அளவுக்கு பூமியின் கீழே சென்று விட்டன. ஆனால் ஒவ்வொரு தடவை ரோட் போடும் பொழுது, பாதை மட்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. மழைநீர் செல்லும் பாதைகள் எப்பொழுதாவது உயர்த்திக் கட்டப் படுகின்றன. ஆனால், கட்டிட கழிவுகள், குப்பைகள் மூலம் பெரும்பாலும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சொல்லாமல் அந்த நீர் எப்போதும் தெருக்குறளில் தான் தேங்கி இருக்கும் நிலை இருந்டு வருகிறது. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். இதில் இருக்கும் ஊழல் போன்றவை பற்றி எல்லாம் பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் மக்கள் தான் அவதிபடுகிறார்கள் தவிர, வந்து செல்லும் அரசுத்துறை அதிகாரிகளுக்கு எந்த அக்கரையும் இல்லை என்றே தெரிந்து வருகிறது.
அதிகமாகஉள்ளஏரிநீரைதிறந்துவிட்டுதான்தீர்வுகாணவேண்டுமா?: அதிகப்பட்சமாக ஆவடியில் 19 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆகவே, முன்பு போல, இத்தண்ணீர் பள்ளமான இடங்களுக்குத் தான் சென்று தேங்கும். மேற்கு மாம்பலம் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதற்கு மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சனையே காரணம்[1]. சென்னையில் மாம்பலம் பகுதியில் இருந்து வரும் மழைநீர், அடையாறு வழியாக வங்காள விரிகுடாவிற்கு செல்லும். ஆனால், அடையாறு ஆற்றுக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்படுவதன் காரணமாக மழைநீர் அதிகமாக வந்து தேங்கும் நிலை உருவாகி உள்ளது[2].
பழையமாம்பலம் – அதேசோகக்கதைதான்: பழைய மாம்பலம் ஏரிக்கரைத் தெரு, புஷ்பவதி அம்மாள் தெரு போன்ற தெருக்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது[3]. தவிர மற்ற பகுதிகளிலும் சாலை, தெருக்கள் எல்லாம் வெள்ளக்காடாக உள்ளது[4]. மேற்கு மாம்பலம், தி. நகரில் பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சினையே மழை நீர் தேங்க காரணம் என்று கமிஷனர் தெரிவித்தார். சென்னையில் மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழ்தளத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் 30-11-2023 அன்று இரவு அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்து விடிய, விடிய தவித்தனர். வீடுகளுக்குள் நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர்.
பழைய/மேற்கு/கீழைமாம்பலம்பிரச்சினைபழையகதைதான்: மேற்கு மாம்பலத்தில் இருக்கும் நான்கு சுரங்கப் பாதைகளிலும் நீர் தேங்கி, போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. ரங்கராஜபுரம், துரைசாமி ரோடு, மேட்லி ரோடு, அரங்கநாதன் சாலை என்ற சுரங்கப் பாதைகளில் மழைநீர் நிறந்தது. உடனடியாக அங்கிருக்கும் மோட்டார்களின் மூலம் தண்ணீரை இறைத்து அப்புறப் படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஏனெனில், அந்நீரை எங்கு இறைப்பது என்பது தான் பிரச்சினை. எங்கு இறைத்தலும், பள்ளமான இடத்தில் தான் சென்று சேரும். பிரச்சினை தொடரும். இவையெல்லாம், கால்வாயில் இறைத்து, அதன் மூலம், கடலுக்குள் சென்று கலக்குமாறு அமைத்திருக்கப் பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் தான், பள்ளங்களில் இருக்கும் நீரை அப்புறப்படுத்த முடிகிறது. இதற்காக, அங்கங்கு ”பம்பிங் ஸ்டேஷன்” களும் இருக்கின்றன. ஆனால், இந்த சுரங்கப் பாதைகளில் மழைநீர் நிறைந்து, தேங்கி கிடந்தது[5]. கனமழையால் சென்னை தியாகராய நகர் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் 2 நாட்களாக தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டுள்ளது[6]. இதேபோல, பிருந்தாவனம் தெரு, தம்பையா ரோடு, ஏரிக்கரை என்று அருகில் இருக்கும் தெருக்களில் நீர் தேங்கியது, வீடுகளிலும் நீர் நுழைந்தது[7]. பிறகு, நீர் இறைக்கப் பட்டு, நிலைமை கொஞ்சம்-கொஞ்சமாக சீரடைந்தது[8].
மா.சுப்பிரமணியன்ஆய்வு, ஊடகக்காரர்களுக்குஅளித்தபேட்டி: சென்னையில் 30-11-2023 அன்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து முதல்வருடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கடந்த 12 மணிநேரத்தில்சென்னையின்மழையளவுசராசரியாக 10 -11 செ.மீபதிவாகியிருக்கிறதுஎன்றாலும், கொளத்தூர், அடையாறுபகுதிகளில் 25 செ.மீஅளவுகனமழைபெய்திருக்கிறது. ஆனால், முதல்வரின்மழைநீர்வடிகால்திட்டம்இன்றுபெருமளவில்கைகூடியிருக்கிறது. மழைக்கானமுன்னெச்சரிக்கைநடவடிக்கையாகசுமார் 800 கி.மீமழைநீர்வடிகால்கால்வாய்கட்டப்பட்டிருக்கிறது. இதற்குமுன்புகட்டப்பட்ட 2,100 கி.மீமழைநீர்வடிகால்கால்வாய்தூர்வாரப்பட்டிருக்கிறது[9]. சென்னையில்இருக்கும்அடையாறு, கூவம், பக்கிங்காம்கால்வாய்போன்றநீர்நிலைப்பகுதிகளும்தூர்வாரப்பட்டிருக்கின்றன[10].அதனால், மழைநீர்வேகமாகவெளியேறிக்கொண்டிருக்கிறது[11].
மா.சுப்பிரமணியன்தொடர்ந்துவிளக்கம்அளித்தது: “செம்பரப்பாக்கத்திலிருந்து 3,000 கனஅடிஉபரிநீர்திறக்கப்பட்டாலே, அடையாறுகரையோரகுடிசைப்பகுதிகள்கடுமையாகபாதிக்கப்படும்[12]. ஆனால், தற்போது 6,000 கனஅடிநீர்வெளியேற்றியபிறகும்அந்தப்பகுதிபாதிக்கப்படவில்லைஎன்றால், தூர்வாரும்பணிசிறப்பாகமேற்கொள்ளப்பட்டதுதான்அதற்குக்காரணம்[13]. சைதாப்பேட்டைஅதன்சுற்றுவட்டாரப்பகுதிகளில்நேற்றுஆய்வுசெய்தோம்.அங்கிருக்கும்பல்வேறுகுடிசைப்பகுதிமக்களுக்குப்பெரியஅளவிலானபாதிப்புஇல்லை[14]. ஆனால், மேற்குமாம்பலம்கால்வாயில், செம்பரம்பாக்கத்திலிருந்துதிறந்துவிடப்படும் 6,000 கனஅடிநீர்பாதிப்பைஏற்படுத்தும்சூழல்ஏற்பட்டிருப்பதால், அதை 4,000 கனஅடிநீராகக்குறைக்கமுதல்வர்உத்தரவிட்டிருந்தார்[15]. அதனால்மாம்பலம்பகுதியில்மட்டும்சிறுபாதிப்புஏற்பட்டிருக்கிறது. அதுவும்படிப்படியாகக்குறையும். இன்னும் 1, 2, 3, 4-ம்தேதிகளில்கனமழைக்கானஎச்சரிக்கைவிடப்பட்டிருக்கிறது[16].எனவே, தற்போதுஎங்கெல்லாம்மழையின்தீவிரபாதிப்புஇருக்கிறதோ, அங்கெல்லாம்உரியபாதுகாப்புப்பணியைமேம்படுத்தவும், பாதாளச்சாக்கடைஅடைப்புகளைச்சரிசெய்வதற்கானபணிகளைத்துரிதப்படுத்தவேண்டும்என்றும்முதல்வர்உத்தரவிட்டிருக்கிறார்[17]. நேற்றுஇரவுமின்சாரம்துண்டிக்கப்பட்டபகுதிகளில்பிரச்னைகளைசீர்செய்வதற்கானப்பணிகள்வேகப்படுத்தப்பட்டிருக்கின்றன,” எனத் தெரிவித்தார்[18].
[5] NEWS18-TAMIL, நியூஸ்18 தமிழ்நாடுசெய்திஎதிரொலி – ரங்கராஜபுரம்சுரங்கப்பாதையில்மழைநீர்அகற்றம் | Chennai Rain, LAST UPDATED: DECEMBER 01, 2023, 10:13 IST.
29-11-2023 இரவு 30-11-2023 அன்றுசென்னையில்பெய்தமழை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது[1]. இந்நிலையில் 30-11-2023 அன்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக மயிலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்[2]. சென்னையில் 30-11-2023 அன்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. ஏற்கெனவே சாலைகள் குண்டும்-குழியாக இருந்ததால், ஆங்காங்கே ஆட்டோ, ஸ்கூட்டர்கள் சிக்கி கொண்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது.
பலவிதமானசெய்திகளும்நிவாரணவேலைகளும்: தி.நகர் பஸ் நிலையத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர்தேங்கி இருந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டார்கள். கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்…. சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். என்றெல்லாம் செய்திகள் கொஞ்சம்-கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்தன. ஆனால், ஊடகங்கள் அமுக்கியே வாசித்தன. வழக்கம் போல காதலியை காதலன் கழுத்தறுத்தான், கஞ்சா விற்பலை, சிலை திறப்பு, முதலியவைதான் முக்கியமாக இருந்தன. இங்கு கஷ்டப் பட்டவர்கள் பொது மக்களும் அந்த கடைநிலை ஊழியர்கள் மற்றும் உண்மையாக தெருக்களில்-சாலைகளில் போராடி வேலை செய்தவர்கள் தாம்.
2015க்குபிறகுசென்னையில்அதிககனமழைபெய்துள்ளது: 2015க்கு பிறகு சென்னையில் அதிக கனமழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்பொழுது ஏரி நீரைத் திறந்து விட்டோம்,இப்பொழுதும் திறந்து விடுகிறோம் என்பது அறிவியல் சார்ந்த வேலையுமில்லை, தீர்வும் இல்லை. இது குழந்தைத் தனமானது, அறிவற்றது, ஏன் முட்டாள் தனமானது எனாலாம்.. 2015க்கும்பிறகும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று தான் தெரிகிறது. குடிநீர்-வடிகால் துறையில் இருக்கும் விற்பனர்கள் ஒவ்வொரு ஆண்டும் அறிந்த, உணர்ந்த மற்றும் அனுபவித்த பிரச்சினைகளிலிருந்து, மீண்டு, முன்னேறி, நடந்தவை மறுபடியும் நடக்காமல் இருக்க வழி வகுக்க வேண்டும். பொறியியல் படித்து ஏ.இ, ஜே.இ என்றெல்லாம் பல பதவிகளில் இருப்பவர்கள் இவற்றில் கொஞ்சம் கவனம் செல்லுத்த வேண்டும். எந்த கொட்டத்தில் போஸ்டிங் கிடைத்தால் வசூலில் அதிகம் கிடைக்கும் என்று மட்டும் இருந்து வேலை செய்தால், அவதிபட்டு வரும்மக்களுக்கு எந்த விடிவு காலமும் வராது, தீர்வும் கிடைக்காது. இதனால் தான் கோடிகள் செலவழிப்பதாக கணக்குக் காட்டப் படுகிறது, ஆனால், 70 ஆண்டுகளில் நிலைமை மோசமாகிக் கொண்டுதான் போகிறது.
Photo courtesy – The Hindu
அடையாறுவழியாககடலுக்குச்செல்லும்மழைநீர்ஏன்தடைபடுகிறது?: மழை நீர் தொடர்ந்து சென்று கடலில் கலப்பது என்பது இயற்கையான விசயம். பிறகு, அது அவ்வாறு செல்லாமல், உள்ளேயே தேங்கி நிற்கிறது என்றால், அத்தகைய இயற்கைக்கு மாறாக எதையோ மனிதன் செய்திருக்கிறான் என்று தெரிகிறது. அவ்வாறிருக்கும் பொழுது, அந்த பிரச்சினையைக் கண்டு பிடித்து, சரிசெய்யாமல், மேன்மேலும், இருக்கும் கால்வாய்களை சீரமைப்பது, பெரிது செய்வது என்று திரும்ப-திரும்ப செய்வதினால் என்ன பலன் ஏற்படப் போகிறது என்று தெரியவில்லை. நீரிலைகள் ஆக்கிரமிக்கப் படுவது – அதாவது ஏரிகள்,குளங்கள் தூர்க்கப் பட்டு, குப்பை-மண் போடப் பட்டு, கொஞ்சம்-கொஞ்சமாக ஆக்கிரமிக்கப் பட்டு, அந்த இடம் விற்கப் படுகிறது.இப்படித்தான் கோவில் குளங்கள் காணாமல் போகின்றன, கோவில் நிலங்களும் ஆக்கிரமிக்கப் பட்டு, பட்டா போட்டு விற்கப் படுகின்றன.
செம்பரம்பாக்கம்ஏரிநீர்திறப்பு– எச்சரிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் சென்னையிலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, அணைக்கு வரும் நீரின் வரத்தும் அதிகரிக்கிறது. மேலும், தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் குறித்த முன்னெச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ளது. அதற்கேற்ப சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை செம்பரப்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது[3]. இதனால் சென்னை அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது[4]. மழைநீர்அதிக அளவில் தேங்கிய மேற்கு மாம்பலம் பகுதியில் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன் நேற்று காலை ஆய்வு செய்தார்[5]. அடையாற்றில் வரும் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரால் மாம்பலம் கால்வாயில் நீர் வெளியேறாதது தெரியவந்தது[6]. இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க அறிவுறுத்தினார்[7]. மா.சுப்பிரமணியன் கூறியதாவது, “செம்பரம்பாக்கம்ஏரியில்இருந்துதிறக்கப்படும்தண்ணீரின்அளவுவினாடிக்கு 6,000 கனஅடியில்இருந்து 4,000 கனஅடியாகக்குறைக்கப்பட்டுள்ளது[8]. கால்வாய்கள்வழியாகமழைநீர்வடியநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது[9]. செம்பரம்பாக்கம்ஏரியில்வினாடிக்கு 6,000 கனஅடிவரைஉபரிநீர்திறந்தபோதும், பெரியஅளவில்பாதிப்பில்லை[10].மாம்பலம்கால்வாயில்ஏற்பட்டவெள்ளப்பெருக்குகாரணமாக, மேற்குமாம்பலம்பகுதியில்வெள்ளம்சூழந்தது[11]. செம்பரம்பாக்கத்தில்நீர்த்திறப்புகுறைக்கப்பட்டதால்மாம்பலத்தில்வெள்ளம்இனிவடிந்துவிடும்[12]. பாதாளசாக்கடைஅடைப்புகளைசரிசெய்து, உடனுக்குடன்சீரமைக்கநடவடிக்கைஎடுக்கப்படுகிறது[13]. அடுத்தடுத்தநாட்களில்வரவுள்ளகனமழையையும்எதிர்கொள்ளஅரசுதயாராகஉள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்[14].
[11] நியூஸ்,டிக், மேற்குமாம்பலம்பகுதிகளில்மழைநீர்தேங்கியதுஏன்? : சென்னைமாநகராட்சிஆணையர்ராதாகிருஷ்ணன்விளக்கம், Written by –Revathi, Last Updated : 2 days 30-11-2023.
இரண்டேநாளில்ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமாமுனிவர், மனிதன்என்றெல்லாம் அறிவிக்கப் பட்ட சிலை – வாதிராஜர்ஆனது! (2)
சிலைகள்உடுப்பிசோடேவாதிராஜமடத்தின்தி.நகர்கிளைக்குசொந்தமானது: 14-06-2022 அன்று சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலைகளில் ஒன்றைப் பற்றி விதவிதமாக செய்திகளை 15-06-2022 அன்று ஊடகங்கள் வெளியிட்டன. அந்நிலையில், சம்பத்தப் பட்ட மடம் என்னவாயிற்று என்று தெளிவு படுத்தியுள்ளது. இரண்டாவ்து சிலை ஶ்ரீவாதிராஜ தீர்த்தர் என்பவருடைது. ஆஞ்சநேயர், வாதிராஜர் சிலைகள், தி.நகர் வாதிராஜ மடத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில், இரண்டு சுவாமி சிலைகள் கிடந்தன. கருங்கல்லாலான இந்த சிலைகளை, பட்டினப்பாக்கம் போலீசார் மீட்டனர். அதில், ஒன்று பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை; மற்றொன்று வாதிராஜர் சிலை.இரண்டையும் மீட்ட போலீசார், காவல்நிலையம் எடுத்து சென்று விசாரிக்கின்றனர். இந்நிலையில், அந்த சிலைகள் உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளைக்கு சொந்தமானது என தெரிய வந்து உள்ளது. தினமலர் மட்டும் தான், இதுவரை, இந்த செய்தியை வெளியிடுள்ளது. இது குறித்து அம்மடத்தினர் தரப்பில் கூறியதாவது:
ஆக, இதனால்அறியப்படுவதுஎன்னவென்றால்: செக்யூலரிஸம் என்றுசொல்லிக் கொண்டு, என்ன வேண்டுமானாலும் எய்யலாம், தப்பித்துக் கொள்ளலாம்.
1. அது வாதிராஜர் சிலைதான், எங்களுடையது, பழையது, விசர்ஜனம் செய்யப் பட்டது: உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளை அறிவித்தது.
2. புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், பழைய சிலைகளை நமது பாரம்பரியத்தின்படி, நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய வேண்டும்…
3. ஜூன் 12ம் தேதி பட்டினபாக்கம் கடற்கரையில் பழைய கற்சிலைகளை விதிகளின் படி விஜர்சனம் செய்தோம் – உடுப்பி மடம்.
4. அந்த சிலைகளை மீண்டும் மரபுப்படி விசர்ஜனம் செய்ய எங்களிடம் ஒப்படைக்க காவல் துறையை கோர உள்ளோம் – உடுப்பி சோடே வாதிராஜ மடம்.
5. அதற்குள் அச்சிலை வீரமாமுனிவர், சித்தர், நாயன்மார், முருகன்….. …என்றெல்லாம் கற்பனையில் ஊடகங்கள் கதை விட ஆரம்பித்தன!
6. அது மட்டுமா, தலைப்புகள் – கடத்தப்பட்ட சிலைகள், கரை ஒதுங்கிய மர்மம் ……கடத்தல் சிலிகள் போலீஸார் விசாரணை………., மணலில் புதைந்து கிடந்த சிலைகள் மீட்பு….
7. ஆக தமிழக ஊடகங்களுக்கு ஒன்று என்றால், அதனை ஒன்பதாக ஊதி பெரிதாக்கி, பொய் என்றாலும் கவலைப் படாமல் செய்தியாக்கும் திறமை உள்ளது!
8. அச்சிலை வீரமாமுனிவர் என்ற போது கூட, எந்த இந்துத்துவ வாதியும் பொங்கவில்லை, ஒருவேளை அந்த அறியப் படாத கிறிஸ்தவ மயக்கத்தில் இருந்தனர் போலும்[3].
9. இந்து மதம், இந்துக்கள் நலன், இவற்றையும் மீறிய ஏதோ ஒன்று ‘இந்துத்துவ வாதி’களைக் கட்டுப் படுத்துகிறதா?
10. ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் என்பதில் உள்ளதும், இந்துத்துவ வாதிகளின் அமைதியும் ஒன்றுதான்! இனி க்ஷீணமான, சேதப் பட்ட சிலை / விக்கிரகத்தை உபயோகப் படுத்தலாமா, கூடாதா என்பதை பார்ப்போம்.
கற்சிலைகளில்ஏற்படும்பிழைகள், தவறுகள், குறைகள், சேதங்கள்: பொதுவாக கற்களில் சிற்பம் செய்யும் போது, சில பிழைகள், தவறுகள், குறைகள் முதலியவற்றால், சேதம் / சேதங்கள் ஏற்படும். சிறந்த கைதேர்ந்த சிற்பி, அதனை / அவற்றை அணிகலன், அலங்கார வேலைப்பாடு, துணி இருப்பது போல, என்று சேர்த்து, மாற்றி வடிவமைத்து, சரிசெய்து விடுவர். கற்களில் உள்ள குறைகளாலும் அத்தகைய பிழைகள், தவறுகள், குறைகள், தேதங்களில் முடிவதுண்டு. அந்நிலையில், அச்சிலைகள் பயன்பாட்டிற்கு ஏற்றுக் கொள்வதில்லை. தூர வைப்பது, புதைப்பது, ஆற்றில் போடுவது என்று அப்புறப்படுத்தி விடுவர். நல்ல சிற்பி செய்யும் போது, கண் திறக்கும் வரை எந்த பிழையும் ஏற்படாது. இப்பொழுது, வியாபார ரீதியில் செய்வதாலும், மிஷின்கள் (machines) பயன்படுத்துவதாலும், கொஞ்சம் கவனம் சிதறினால், தவறினால் குறை ஏற்பnட்டு விடும். இப்பொழுதெல்லாம், குறை ஏற்பட்ட பக்தியை தனியாக செய்து, அடிசிவ் (adhesive) என்கின்ற ரசாயன பசை வைத்து ஒட்டியும் விடுகிறார்கள். ஏமாந்தால், குறைந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். இந்து அறநிலையத் துறையினர், பழைய விக்கிரங்கள் / சிலைகளை மாற்றி புதியதாக வைக்கிறேன் என்று பல கோடி ஊழல்களில் சிக்கியுள்ளதாக செய்திகள், வழக்குகள் உள்ளன.
விக்கிரகம், சிலைமாற்றங்களுக்கு / மாறுதலுக்குஉபயோகப்படுத்துவதைதடுக்கவேண்டும்: ஒருவேளை இத்தகைய பின்னப் பட்ட, சேதப் பட்ட, க்ஷீணப்பட்ட சிலைகள், விக்கிரங்கள் முதலியவற்றை மாற்றும் பின்னணியில், சிலை கடத்தல் போன்றவை இருப்பதால், போலீஸார் ‘அலர்ட்’ ஆகி விட்டனர் போலும். ஊடகக் காரர்களும் உசுப்பேற்றி விட்ட மயக்கத்தில் உச்சத்தில் சென்று செய்திகளை போட்டு விட்டனர் போலும். இப்பொழுது, ‘புஷ்’ என்று ஆகி விட்டாலும், நாளைக்கு மற்றவற்றிற்கும், இதே லாஜிக்கை (modus operandi) போல குற்றங்களுக்குப் பயன்படுத்தலாம். கடத்தல், கடல் தாண்டிய குற்றங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அவ்வாறு செய்து, மாற்றி வைப்பது (duplicates / போலிகள் தயாரிப்பது) வெளியாகுமே என்றும் அச்சப் படலாம். இந்த நவீன காலத்தில், எல்லாமே நல்லதிற்கும் உபயோகப் படுத்தலாம், கட்டடற்கும் பயன்படுத்தலாம். ஒழுக்கம், நாணயம், நியாயம், தர்மம் எல்லாம் சும்மா பேசிக் கொண்டு, பணத்திற்காக வேலை செய்து கொண்டு இருந்தால், கோவில், என்றெல்லாம் பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை எனலாம். இரட்டை வேடம் போடுபவர்கள் நிச்சயமாக ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள்.
[3] கலெக்டர் கவிதா, ஸ்டாலினுக்கு “அறியப் படாத கிறிஸ்தவம் – தமிழ்நாட்டில் ஒரு வரலாற்று தேடல்,” என்ற புத்தகத்தைக் கொடுத்ததால், இந்து அமைப்பினர், அவருக்கு, “இந்துமதம் பதில் சொல்கிறது,” என்ற புத்தகத்தைக் கொடுத்ததாக, பேஸ்புகில் பதிவுகள் போட்டனர். ஆனால், வேடிக்கை என்னவென்றால், நிவேதிதா லூயி என்ற அடிப்படைவாத கிறிஸ்தவ பெண் எழுதிய அப்புத்தகத்தை வெளியிட்டதே, “கிழக்குப் பதிப்பகம்” தான். அதனுடன் சம்பந்தப் பட்டவர்களும் இந்துத்துவவாதிகள் தான்.
பிள்ளையார், வினாயகர், கணேசன், கஜபதி, கணபதி, கணநாதன், என்று பல பெயர்களில் செல்லமாகவும், விஷேசமாகவும், எங்கெங்கும் வழிபட்டு வரும் வேளையில், லண்டனில் ஒருவர் கத்திரிக்காயில் பிள்ளையாரின் உருவதைப் பார்த்து வியந்து விட்டார். பெரிய இரண்டு காதுகள், தும்பிக்கை என வினாயகரின் உருவம் அதில் பதிக்கப்பட்டதைப் போன்றிருந்தது. உடனே அதனை விக்கிரம் மாதிரி, பூஜை மேடையில் வைத்து விட்டார். செய்தி கேட்டதும், பலர் இதனை பார்க்க வந்து விட்டனர்.
பிரபுல் விஸ்ராம் என்பவர் லெசெஸ்டர் என்ற இடத்தில் உணவு விநியோகம் செய்து வருகிறார்[1]. அப்பொழுது, காய்கறிகள் வந்த ஒரு பெட்டியில், ஒரு கத்திரிக்காயில் இருந்த உருவம் பிள்ளையாரைப் போலிருந்ததும், அவரது மனைவி, வியப்போடு எடுத்து வந்து காட்டினார். பார்த்தால், வினாயகரைப் போலவே இருந்ததும், பயபக்தியுடன் பூஜையில் விக்கிரங்களுடன் சேர்த்து வைத்து விட்டார். ஆரத்தியோடு வழிபாடு செய்யவும் ஆரம்பித்து விட்டார்.
செய்தி கேட்டதும், பலர் இதனை பார்க்க வந்து விட்டதால், தனது அலுவலகத்திலேயே, கோயில் மாதிரி அதனை வைத்து விட்டார்[2]. இந்த விஷயத்தை அறிந்த அவரது உறவினர், நண்பர், மற்றவர்கள் வந்து பார்த்துச் சென்றனர். இதனால் எல்லோருக்கும் மங்களம் உண்டாகும் என்று நம்புகின்றனர்[3].
காய்கறி என்பதால், சில நாட்களில் வாடிவிடக் கூடும். ஆனால், அவர் அதைப் பற்றி கவலைப் படவில்லை. அப்படி நேர்ந்தால், நாங்கள் அந்த கத்தரிக்காயிற்கு, மரியாதையோடு அடக்கம் செய்து விழா கொண்டாடுவோம் என்கிறார்.
Baba Ganesh- Believers worship aubergine as the reincarnation of godReligious followers believe the divine vegetable is the reincarnation of multi-armed elephant deity Ganesh.And once it decomposes and becomes too mouldy, they have vowed to give the sacred eggplant a full Hindu funeral[4].
A caterer discovered it in a box of vegetables and now proudly displays it in a homemade temple in a backroom at his workplace.
Praful Visram, 61, who runs 4 Seasons Catering in Leicester, claims the Hindu gods blessed him and is honouring their wishes by putting it on display.
He said: “My wife, Rekha, saw it and recognised the similarity with Ganpati Bappa – Lord Ganesh.
“We immediately placed it with reverence in the temple at work. It has been a blessing for us and I hope will bring us luck and prosperity.
“This has been sent to us and we shall treat this with the respect it deserves.”
Praful described how he and his family along with staff members have been praying to the vegetable twice a day.
He said word has spread and over 80 people have turned up to worship the elephant-faced aubergine. Praful added: “It is spreading good feeling throughout the community.”
Hina Chodai, who runs a neighbouring company called Khushi Food, said the resemblance to Lord Ganesh – the Hindu god of wisdom, prosperity and good fortune – was remarkable.
He said: “As soon as I heard about the aubergine I had to see it for myself. It is indeed a blessing for all of us.
“I am hoping it will bring prosperity to all who pray there. I have prayed there a few times and all of my family have come along to pray, too.”
And one of Praful’s workers named as Bacash, 44, added: “There is no doubt that it looks like the God. I pray in the temple at work every day and it gives me a good feeling.
நல்லவேளை, இங்கிலாந்தில் பெரியார் இல்லை. ஒருவேளை நாளைக்கு கத்தரிக்காய்களை எல்லாம் வாங்கி தெருக்களில் போட்டு மிதிப்பார்களா?
நாத்திகர்களை பெரிதும் பாதித்துள்ள தீபாவளி: இப்பொழுது எல்லோருமே தீபாவளியைப் பிடித்துக் கொண்டு ஆடி-ஆட்டி வருகிறார்கள். அதுவும் ஒபாமா தம்பதியர் விளக்கு வைத்து, பாடி-ஆடி தீபாவளி கொண்டாடியதும், எல்லோருக்குமே ஆட ஆரம்பித்து விட்டது! குறிப்பாக தமிழக நாத்திகர்களுக்கு, பகுத்தறிவாளிகளுக்கு சொல்லவே வேண்டாம், “பெரியார் பிறந்த பூமியில் தீபாவளியா” என்றெல்லாம் புலம்பி ஓய்ந்து, மழை சாக்கு வைத்துக் கொண்டு வீடுகளில் அடைப்பட்டு விட்டன[1]. ஆனால், வீட்ட்டிற்குள்ளேயிருந்தே வெடிகளை வெளியே வீசிக்கொண்டிருந்தன. பாவம், அவர்கள் விட்ட வெடிகள் எல்லாமே “புஸ்ஸாகி” விட்டன! ஒபாமாயாகிவிடவில்லை! நன்றாக நமுத்து / நமித்து / நமிதாப் போய் விட்டன போலும்! நமீதாவை வைத்து வெடித்திருக்கலாம், குஷ்புபைவிட்டு[2] புஸ்வானமவது விட சொல்லியிருக்கலாம்!!
கமலஹாசனுக்கு / கமலாசனுக்கு[3]முதல்வர்வாழ்த்தும் பல்லாண்டு பாடலும்[4]: குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி 06-11-2010 அன்று தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் கமலஹாசனுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து[5] தெரிவித்துள்ளாராம்! இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்திரையுலகின்கவுரவமாகவும், மகுடமாகவும்திகழ்பவர்கமல்; தமிழ்சினிமாவில்கமலுக்குஎன்றுமேதனியிடம்உண்டு; சிறுவனாகதமிழ்சினிமாவில்அடியெடுத்துவைத்தகமல், தற்போதுஉலகஅரங்கிற்குதமிழ்சினிமாவைகொண்டுசெல்லும்நிலைக்குஉயர்ந்துள்ளார்; அவர்பல்லாண்டுகாலம்வாழ்ந்துமேலும்பலபெருமைகளைபெறவாழ்த்துகிறேன்; மனதளவில்அவர்கவிஞராகஇருப்பதேஅவரின்இந்தமுன்னேற்றத்திற்குகாரணம்; அவர்சிறந்தநடிகர்என்பதைஏற்கனவேநிரூபித்துவிட்டார்”, இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளாராம்! வேடிக்கைதான், ஏன் நாத்திக மரபுபடி “நாசமா போக, உன்வீட்டில் இழவு வர………………..”, என்று பாராட்டியிருக்கலாமே? எல்லாவற்றையும் நாங்கள் தலைகீழாக செய்வோம்[6] என்றுதானே பீழ்த்திக்கொள்வர்? பிறகென்ன “பல்லாண்டு”?
“அவர்பல்லாண்டுகாலம்வாழ்ந்துமேலும்பலபெருமைகளைபெறவாழ்த்துகிறேன்”: திருமாவிற்கு போட்டியாக ராமசாமி நாயக்கரின் மகனாக நடித்ததால்[7], நன்றாகவே நாமம் போட்டுள்ளார். அதென்ன “பல்லாண்டுகாலம்வாழ்ந்துமேலும்பலபெருமைகளைபெறவாழ்த்துகிறேன்”, வெங்காயம்! இதென்ன நாத்திகமா, ஆத்திகமா, வெங்காயமா, எள்ளுருண்டையா? “வாழ்க, ஒழிக” என்பது என்ன வாழ்த்தா, சாபமா, பலித்துவிட? இதென்ன பிறகு இந்த திராவிட ரிஷி இப்படி கிளம்பிவிட்டார், இந்த வயதில்? நாத்திக மரபுபடி “நாசமா போக, உன்வீட்டில் இழவு வர………………..”, என்று பாராட்டியிருக்கலாமே? எல்லாவற்றையும் நாங்கள் தலைகீழாக செய்வோம்[8] என்றுதானே பீழ்த்திக்கொள்வர்? பிறகென்ன “பல்லாண்டு”?
“மனதளவில்அவர்கவிஞராகஇருப்பதேஅவரின்இந்தமுன்னேற்றத்திற்குகாரணம்”: ஆமாம், நல்லவேளை, உடலளவில் கவிஞராக, கலைஞனாகி விடவில்லை! சமீபத்தில் கமல் நானும் கலைஞன் தான் என்று “ஆட்டம் பாம்” வெடித்தது உறுத்திவிட்டது போலும், பதிலுக்கு சரத்தை வீசியுள்ளார். அதாவது, இனி திமுகவில் உடலளவில் சேர்ந்து முன்னேற வேண்டியது தான் பாக்கி! கலைஞனுக்கு எப்படியெல்லாம் பொறாமை வருகிறது? முன்பு மாமியார்-மறுமகள் வெடி – ஒன்று வெடித்துக் கொண்டே முன்னால் சென்றால், இன்னொன்று எதிர்பக்கத்தில் வெடித்துக் கொண்டே வரும் – என்றேல்லாம் விற்பார்கள், இப்பொழுது கிடைக்கிறதா என்று தெரியவில்லை.
“அவர்சிறந்தநடிகர்என்பதைஏற்கனவேநிரூபித்துவிட்டார்”!: ஐயோ, இதென்ன இப்படி சீனவெடியைக் கிள்ளிப் போட்டுவிட்டார்? ஊர்வசி வேறு கமல் நெருக்கத்தில் வந்து நடித்தால் ஏதோ செய்வார் என்று வேறு குண்டு விட்டிருக்கிறார்! அவர் நடித்ததால்தானே, எத்தனை நடிகைகளின் வாழ்க்கை பாழானது, தற்கொலை செய்து கொண்டனர், இத்யாதி…………….படாபட்! வீரமணியிடம் சொல்லி, இன்னொரு சிறப்பு மலரை “காதல் இளவரசன்” அல்லது “நடிகைகளின் நரகாசுரன்” என்று வெளியிட செய்யலாம்! இனி கமல் “அரசியல்வாதி” ஆனால் தான், பிரச்சினை!
ஒபாமாவருகைமுழுக்கமுழுக்கவர்த்தகரீதியிலானது[9]: பா.ஜ., புகார் புலம்பல்: “அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை, முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்டது’ என, பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. ஒபாமா இந்தியாவிற்கு வரும் முன், இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் விடுத்த அறிக்கைக்கும், ஒபாமா தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கைக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தும் வகையில் ஒபாமாவின் வருகை அமையும் என, ராவ் தெரிவித்திருந்தார். ஆனால், ஒபாமாவின் பயணமோ, முழுக்க முழுக்க வர்த்தக ரீதியில் அமைந்துள்ளது.
கம்யூனிஸ்ட்டுகளின் சில்லறை ஒப்பாரி[10]: இரட்டை வேடம் போடுவதில் இவர்களும் சளைத்தவர்கள் அல்லர்[11]. நன்றாக தீபாவளி கொண்டாடி விட்டு, ஊசிவெடி வெடிக்க தெருவில் வந்து பூச்சாண்டி காட்டியது வேடிக்கையாக இருந்தது. டில்லியில் ஆட்டம் பாம் வெடிக்கிறது என்றால், இங்கு புஸ்ஸான வெடிகளை நெருப்பில் போடு கொளுத்துகிறார்கள்[12], பாவம்! ஒப்பாரி வைத்த அனைத்து எம்.பிக்களும் ஒபாமா பேச்சைக் கேட்டு புல்லரித்து பாராட்ட வேறு செய்தார்கள்!
[1] டாக்டர் சொல்லியும் கேட்காமல் விதவிதமான ஸ்வீட்டுகளை சுவைத்ததால் பத்தினிகள் வேறு சாபமிட்டிருக்கிறார்களாம்! என்ன செய்வது இலவசமாக வந்து குவிந்து விட்டதாம்! ஊச் வெடியை வெடிக்கலாம், கொளுத்தலாம், ஸ்வீட் ஊசி விட்டால் என்ன செய்வது?
[2] பாவம், சுந்தர் கழட்டிவிடுவேன் என்று பயமுறுத்தியதாக வேறு செய்திகள் வந்துள்ளன.
[3] கமலம் + ஹாசன் = கமல் + ஆசன் = கமலாசன் என்று மாற்றிக் கொள்ளாலாமா? இங்கு எப்படி “ஸ” வந்தது என்று தெரியவில்லை, பார்ப்பன சதியே அலாதியானது தான்!
[5] 50 ஆண்டுகளில் இல்லாதது இப்பொழுது எப்படி வந்தது? அதுவும் சரியாக 2010ல்?
[6] உண்ணாவிரதம் என்றாள் உண்ணும் விரதம் என்று கவிச்சை வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்; நல்லநாள் எல்லாம் பார்ப்பதில்லை என்று ராகுகாலம்-எமகண்டத்தில் கல்யாணம் செய்து கொள்வார்கள்….இப்படி பல நாத்திக கூத்துகள், வெடிகள் எல்லாம் தமிழகத்தில் தமிழர்கள் பார்த்திருக்கிறார்கள்.
[7] இந்த நடிகன் “நாயகர்” என்றதும் தசாவதாரத்தில் அந்த நடிகை எதோ ஊளையிடுவாள், பாவம்! ஆஸௌசம் தான்!! ஆமாம், வசனத்தை “கட்” செய்திருப்பர்!
[8] உண்ணாவிரதம் என்றாள் உண்ணும் விரதம் என்று கவிச்சை வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்; நல்லநாள் எல்லாம் பார்ப்பதில்லை என்று ராகுகாலம்-எமகண்டத்தில் கல்யாணம் செய்து கொள்வார்கள்….இப்படி பல நாத்திக கூத்துகள், வெடிகள் எல்லாம் தமிழகத்தில் தமிழர்கள் பார்த்திருக்கிறார்கள்.
[10] இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாக்ஷிச கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பல்கழலக்கழக மாணவர்கள் என சுமார் 700 பேர் டெல்லியின் முக்கிய பகுதியான ஜந்தர் மந்திர் பகுதியில் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்..
[11] சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டதற்கு கம்யூனிஸ்டுகள் கண்டனம் தெரிவிக்கவில்லை.
இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தை தங்கள் பகுதி என்று சீன வரைபடத்தில் வெளியிட்டதற்கும்,
ஜம்மு காஷ்மீரிலிருந்து செல்பவர்களுக்கு சீனா தனி விசா கொடுப்பதற்கும்,
பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள இந்திய பகுதியை பாகிஸ்தானுக்கு உரியது என்று சீனா அதிகாரப்பூர்வமாக சொல்லி வருவதற்கும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இலங்கை தீவில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க சீன அரசு ஆயுதங்களை வழங்கிய போது, கம்யூனிஸ்டுகள் கண்டிக்கவில்லை. இப்படி அடுக்கடுக்காக கூறியுள்ளவர், இல்லை 1000 வாலா வெடித்தவர் வைகோ!