Archive for the ‘நம்பிக்கை’ Category

மழை, பெரும்மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மா-பள்ளம் பிரச்சினை என்ன? மழைநீர் தேங்குவது ஏன், வெள்ளம் வீடுகளில் புகுவது எப்படி? (3)

திசெம்பர் 2, 2023

மழை, பெரும் மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மாபள்ளம் பிரச்சினை என்ன? மழை நீர் தேங்குவது ஏன், வெள்ளம் வீடுகளில் புகுவது எப்படி?  (3)

சேகர்பாபு கொடுத்த விளக்கம்: அதைத் தொடர்ந்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “வடசென்னையில், முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொசஸ்தலை மழைநீர் வடிகாலுக்காகக் கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது[1]. சென்னையில் சாலை 5,500 கி.மீ நீளம் இருந்தாலும், சென்னையைச் சுற்றி பழைய கால்வாய்களை இடித்து அகலப்படுத்தி, புதிய கால்வாய்களை ஏற்படுத்தியதில் 1,450 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது[2]. அடையாற்றில் வரும் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரால் மாம்பலம் கால்வாயில் நீர் வெளியேறாதது தெரியவந்தது[3]. இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க அறிவுறுத்தினார்[4]. இவ்வாறு இவர்கள் பேசியது, அரசு-ரீதியில் தான் இருந்ததே தவிர, தொடரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் போக்கில் இல்லை.

மின்சாரத்தால் பாதிக்கப் பட்டு, இரண்டு பேர் உயிரிழப்பு: தியாகராயநகர் பகுதியில் பாண்டிபஜார் சிவஞானம் சாலை, பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை ஆகியவணிக பகுதிகளிலும் மழைநீர் தேங்கிபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை புது பெருங்களத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (23), நேற்று முன்தினம் இரவு மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலை வழியாகக் கொட்டும் மழையில் சாலையில் தேங்கிய நீரில் செல்போனில் பேசியபடி சென்றார். அப்போது அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்[5]. தியாகராயநகர் வாணி மஹால் முன்புறம் உள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மின்விளக்கு கம்பத்தின் அருகே, மின்சாரம் தாக்கி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இசாசுல் (19) உயிரிழந்தார்[6]. “லோடு” அதிகமாகிறது என்று இப்பொழுதெல்லாம் பத்து வீடுகளுக்கு இடையில் ஒரு மின்சார கேபிள் இணைப்புப் பெட்டிகள் வைக்கப் பட்டு வருகின்றன. மின்சார துண்டிப்புப் பிரச்சினை வந்தால், அங்கங்கு ஆர்த்து, சரிசெய்யலாம் என்ற நோக்கில் இவை வைக்கப் படுகின்றன. ஆனால், இவையெல்லாமே அவசரம்-அவசரமாக வைக்கப் பட்டவைப் போலத் தான் இருக்கின்றன. கேபிள்கள், கேபிள் இணைப்புகள் முதலியவை தெரிவது போலத் தான் இருக்கின்றன. சரியாக கதவுகள் மூடப் படுவதில்லை. சாலை இருக்கும் அதே உயரத்தில் இருப்பதாலும், தொடர்ந்து சாலை உயர்த்தப் படுவதாலும், அவை கீழே செல்கின்றன. இதனால், தண்ணீரில் முழுகும் நிலை ஏற்படுகிறது. இதுதான் னின் கசிவு, ஷாக்க்கிற்கு காரணமாகிறது.

Photo courtesy – The Hindu

1950-60களிலிருந்து தொடர்ந்து இருக்கும் பிரச்சினை: மழைக்காலத்தில் 1950களிலிருந்து, அப்பொழுது மாம்பலம் இப்பொழுது மேற்கு மாம்பலம் என்று அழைக்கப்படுகின்ற இடத்தில், ஒவ்வொரு ஆண்டிலும் பொதுவாக மழை நீர் தெருக்குறளில் தேங்கி நிற்கும். குறிப்பாக மூன்று, ஐந்து, ஏழு என்றெல்லாம் விட்டு ஆண்டுகளில் மழையினால்  அதிக நீர் வரும். வெள்ளம், பெருவெள்ளம், புயல், சுனாமி போன்ற காலங்களிலும் இயற்கையாகவும் மற்றும் சென்னை சுற்றியுள்ள ஏரிகளில் நீர்நிலை தேக்கம் அதிகமாக இருக்கும் பொழுது, அந்த நீரை திறந்து விடுவதாலும் இத்தகைய வெள்ளம் இப்பகுதியில் ஏற்படுகிறது. இதனால் நிச்சயமாக வீடுகளில் 1940-60 என்று பார்த்தால், அக்காலகட்டத்தில் கட்டியுள்ள வீடுகளில் முதலில் ஒரு அடி, 2 அடி 3 அடி என்று, 2000 ஆண்டுகளில் 5 அடிக்கு நீர் தங்க ஆரம்பித்தது. இதனால், அத்தகைய பழைய வீடுகளில் வசித்தவர்கள், பெரும்பாலான மக்கள் மிகவும் அவதிப்பட்டு தான் வந்திருக்கின்றனர். ஏனென்றால் அத்தகைய நீர் வரும்போது அவர்கள் வீடுகளில் இருக்கும் எல்லா பொருள்களுமே மூழ்கிவிட்டு நாசமாகின்றன அதிலிருந்து மீட்கப்படுகின்ற பொருட்கள் என்பது நிச்சயமாக ஒரு 30 இருந்து 50 சதவீதம் கூட உருப்படியாக இருக்காது.

Photo courtesy – The Hindu

மாபள்ளம்,” ஏரிக்கரைத் தெரு பிரிந்திருக்கிறது, ஆறியிருக்கிறது, ஆனால், மழையில் சேர்ந்து விடுகிறது: மாம்பலம் என்பது “மா பள்ளம்” அதாவது இங்கு கிழக்குப் பக்கத்தில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியானது சைதாப்பேட்டை, மாம்பலம் நுங்கம்பாக்கம் வரை பரவி பெரிதாக இருந்தது. அதனால்தான், மாம்பலத்தில் இருந்து ஆரம்பிக்கும் இந்த “ஏரிக்கரை தெரு” என்பது நுங்கம்பாக்கம் வரைக்கும் சென்றது. பிறகு நுங்கம்பாக்கம், மாம்பலம் இடைப்பட்ட பகுதியில் வீடுகள், தெருக்கள், ரயில் தடங்கள் என்று வளர்ச்சி ஏற்பட்ட பொழுது, அது தனித்தனியாக பிரிந்தது, அதாவது “ஏரிக்கரைத் தெரு” இங்கும் உள்ளது, அங்கும் உள்ளது. எனவே இது ஏரிக்கரையில் பகுதியில் அமைந்திருந்த இடமானதால் பள்ளமாக தான் இருந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதாவது 1920 முப்பது நாற்பதுகளில் இந்த இடங்களை வாங்கி வீடு கட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த காலத்தில் அதாவது சுமார் நூறாண்டுகள் முன்பு கட்டப்பட்ட வீடுகள் இப்பொழுது நிச்சயமாக ஐந்து முதல் ஏழு அடி வரை தெருவின் அந்த நிலைக்கு கீழே தான் உள்ளன. அதனால் தான் பழைய வீடுகள் 2000 ஆண்டிலிருந்து ஒவ்வொரு மழை காலத்திலும் மூழ்கி வருகின்றன. ஆனால் நூறாண்டுகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும், டிரைனேஜ் என சொல்லப்படுகின்ற கழிவுநீர்-மழை நீர் எல்லாம் முறையாக நிலத்தடிக்குச் செல்லுத்தப் பட்டு, குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு, வெளியேற்றும் முறை சரியாக செய்யப் படவில்லை.

Photo courtesy – The Hindu

கிழக்கு உயர்ந்து, மேற்கு தேய்ந்த விதம்: 1947க்கு – விடுதலைக்கு முன்னர் தெருக்களில் பூமிக்கு அடியில் பதிக்கப் பட்ட அதே குழாய்கள் தான் இப்பொழுதும் பயன் படுத்தப் படுகின்றன. “வெள்ளக் காரன் காலத்தில் போடப் பட்ட பைப்பு” என்றும் வயதான மக்கள் கூருகின்றனர். இந்த 100 ஆண்டுகளில் மாம்பலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது கிழக்கு பக்கம் மட்டும் தியாகராய நகர் /டி.நகர் / தி.நகர் என்று மற்றும் மேற்கு பக்கம் மேற்கு மாம்பலம் என்றும் அழைக்கப்படுகிறது. எல்லாவித வளர்ச்சி அதே போல கிழக்கு பக்கத்தில் அதிகமாக இருந்து வருகிது, ஆனால் மேற்கு பக்கம் குறைவாகவே உள்ளது. “சரவணா ஸ்டோர்ஸ், குமரன், பொத்தீஸ்” என்றால் இந்தியா முழுவதும் தெரிந்துள்ளது. ஆனால் அசோக் நகர் என்ற குடியிருப்பு உருவானதால், அதை சுற்றிலும் முக்கியமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரமுகர்கள், பணக்காரர்கள் என்று இடம் வாங்கி, அதிகமாக வீடுகள் கட்டிக் கொண்டு, குடியேறியுள்ள படியால், அங்கு இருப்பவர்கள் தி.நகர் மற்றும் மவுண்ட் ரோடு செல்ல இந்த மேற்கு மாம்பலம் வழியாகத்தான் செல்ல வேண்டி இருந்தது. அதனால் தான் 1960களில் துரைசாமி ரோடு சப்வே அதாவது தரைக்கீழ் சொல்லும் பாலமாக இருந்தது, அமைக்கப்பட்டது, ஆகையால் இந்த அப்பகுதியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மிக சாதாரணமாக இருக்கிறது.

Photo courtesy – The Hindu

குடிநீர்கழிவு வடிகால் வாரியம் ஏன் முறையாக வேலை செய்யவில்லை?: இது ஒரு பக்கம் இருக்க, நமது பழைய பிரச்சனைக்கு செல்வதானால், இந்த நூறாண்டுகளில் இத்தனை வளர்ச்சிகளில், தெருக்களும் போடப்படுகின்றன. அவற்றின் உயரமும் அதிகமாகி வருகிறது. அதாவது ஒவ்வொரு தடவையும் “ரோடு” போடும் போதும், மூன்று ஐந்து இஞ்சுகள், அங்குலங்கள் உயரமாகி, சென்ற 50-100 ஆண்டுகளில் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது எனலாம். ஆனால் அதே நிலையில் 1920-30 களில் பதிக்கப்பட்ட அந்த குழாய்கள், அதே அளவுக்கு பூமியின் கீழே சென்று விட்டன. ஆனால் ஒவ்வொரு தடவை ரோட் போடும் பொழுது, பாதை மட்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. மழைநீர் செல்லும் பாதைகள் எப்பொழுதாவது உயர்த்திக் கட்டப் படுகின்றன. ஆனால், கட்டிட கழிவுகள், குப்பைகள் மூலம் பெரும்பாலும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சொல்லாமல் அந்த நீர் எப்போதும் தெருக்குறளில் தான் தேங்கி இருக்கும் நிலை இருந்டு வருகிறது. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். இதில் இருக்கும் ஊழல் போன்றவை பற்றி எல்லாம் பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் மக்கள் தான் அவதிபடுகிறார்கள் தவிர, வந்து செல்லும் அரசுத்துறை அதிகாரிகளுக்கு எந்த அக்கரையும் இல்லை என்றே தெரிந்து வருகிறது.

© வேதபிரகாஷ்

02-12-2023

Photo courtesy – The Hindu


[1] தினபூமி, 2 ஆண்டுகளாக செய்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது: அமைச்சர், வியாழக்கிழமை, 30 நவம்பர் 2023 

[2] https://www.thinaboomi.com/2023/11/30/214952.html

[3] தமிழ்.ஏபிபி.லைவ், கோடம்பாக்கம் , மேற்கு மாம்பலம் மழைநீர் தேங்க இதுதான் காரணம் | Chennai Rain, 30-11-2023, 9.00 PM.

[4] https://tamil.abplive.com/short-videos/news/chennai-chennai-rain-precaution-on-chennai-cropration-commissnor-speech-latest-news-watch-video-153430

[5] தமிழ்.இந்து, சென்னையில் கனமழையால் குடியிருப்புகள், சாலைகளில் வெள்ளம்: 2 பேர் உயிரிழப்பு, செய்திப்பிரிவு, Published : 01 Dec 2023 08:02 AM, Last Updated : 01 Dec 2023 08:02 AM.

[6]  https://www.hindutamil.in/news/tamilnadu/1161744-flood-in-chennai-flats-and-roads-4.html

சேதப் பட்ட, பின்னப் பட்ட / க்ஷீணப்பட்ட சிலைகள் / விக்கிரங்கள் இருந்தால் / வைக்கப் பட்டால் / மாற்றினால் என்ன விளைவு ஏற்படும்? (3)

ஜூன் 16, 2022

சேதப் பட்ட, பின்னப் பட்ட / க்ஷீணப்பட்ட சிலைகள் / விக்கிரங்கள் இருந்தால் / வைக்கப் பட்டால் / மாற்றினால் என்ன விளைவு ஏற்படும்? (3)

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி: மறைந்த தொல்லியல் வல்லுனர் ஆர். நாகசாமி இதைப் பற்றி விவரமாகக் கூறியுள்ளது: “காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி, 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டில் உள்ள புகழ் வாய்ந்த உற்சவமூர்த்தி. எழிலே உருவான இதற்கு அழகிலோ, வரலாற்று சிறப்பிலோ, சமய மரபிலோ, பொருள் விலையிலோ ஈடிணையான உற்சவமூர்த்தி ஏதும் இல்லை. கச்சி ஏகம்பரத்தில் உரைகின்ற இப்பரமன், கலை வரலாற்றில், ஆயிரத்து நுாறு ஆண்டுகளுக்கு முன் வடிக்கப்பட்டு இவ்வளவு காலமாக, அதாவது ராஜராஜன் நுாற்றாண்டுக்கும் முன்பிருந்தே வீதி உலாவில் வந்த உத்தமத் தெய்வம். இந்த மாபெரும் தெய்வத்தை, தமிழகத்தை ஆண்ட பெருமன்னர்கள் எல்லாம் வந்து கண்டு, பக்திப் பெருக்கோடு வணங்கி சென்றிருக்கின்றனர். இத்தெய்வத்தை தாங்கி உலா வருவதற்காக, அருமையான வேலைப்பாடுகள் அமைந்த வெள்ளியினால் செய்யப்பெற்ற ரிஷப வாகனத்தை கொடுத்தான், விஜயநகர மாமன்னன் கிருஷ்ண தேவராயன்.”

கம்பீரமாக உலா வரும் 500 வருட சிலை: ஆர். நாகசாமி எடுத்துக்காட்டுவது, “பல கோடி ரூபாய் பெருமானமுள்ள அந்த வாகனம், இன்றும் அக்கோவிலில் உள்ளது. இந்த சோமாஸ்கந்த பெருமான், அதன் மீது தான் இன்றும் கம்பீரமாக உலா வருகிறார். கிருஷ்ண தேவராயன், இக்கோவிலில் உள்ள மாபெரும் தெற்கு கோபுரத்தை கட்டுவித்து, அக்கோபுர வாயிலின் வழியாக வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் உருவை உலாவாக எழுந்தருளச் செய்து, பக்திப் பெருக்கோடு வணங்கினான். இவ்விழாவானது, இன்றைக்கு சரியாக, 500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போதும் இக்கோபுர வாயில் வழியாக வெளிப்போன இப்பெருமானை, பக்தி பெருக்காலே வணங்கிய அடியார்கள் கோடான கோடி பேராவர். அக்கோபுரம் கட்டிய, 25 ஆண்டுகளுக்குள் மற்றும் ஒரு சிறந்த நிகழ்ச்சி இங்கு நடந்தது. சேக்கிழார் பெருமான், திருத்தொண்டார் புராணம் என்னும் பெரிய புராணத்தை எழுதினார். அந்த அற்புத காப்பியத்தை அப்படியே சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்த ஒரு கவிஞன், ‘உபமன்யு பக்த விலாசம்என்ற பெயரில், சோமாஸ்கந்தர் முன்னிலையில் இவ்விழாவிலே அரங்கேற்றினான். அதைப் போற்றிய அன்றாண்ட மன்னன், அக்கவிஞனுக்கு சிறப்பு செய்ததை குறிக்கும் கல்வெட்டானது இக்கோவிலில் இன்றும் உள்ளது.மகா சுவாமிகள், அக்கல்வெட்டைப் பற்றி பெருமையாக குறிப்பிடுவார். அவர் போன்ற எத்தனையோ முனிவர்கள் எல்லாம், உச்சிமேல் கரம் கூப்பி வணங்கி பேறு பெற்ற பெருந்தெய்வம் இந்த சோமாஸ்கந்த மூர்த்தி”.

சோமாஸ்கந்த மூர்த்தியை மாற்ற திட்டம்: ஆர். நாகசாமி எடுத்துக்காட்டுவது, “ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, காஞ்சி மாநகருக்கே அருள்பாலித்த இத்தெய்வ உருவுக்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. நமது நாளிதழில், 2016 ஜன., 4ல் ஒரு செய்தி வெளிவந்தது. அச்செய்தியில், இவ்வுருவத்தின் ஒரு கரத்திலுள்ள விரலில் சிறு பின்னம் ஏற்பட்டிருப்பதாலும், பீடத்தில் சற்று அசைவு உள்ளதாலும் இதை வழிபடாது, வேறு சிலை செய்து வைக்க வேண்டும் என்று, அரசின் தலைமை ஸ்தப்தி முத்தையா ஸ்தபதியாரின் அறிவுரைப்படி, இந்த சிலையை ஒதுக்கிவிட்டு புதிய சிலையை செய்து வைக்க அவரே எற்பாடு (கான்ட்ராக்ட்) செய்துள்ளதாகவும், ஊர் மக்கள் இதை எதிர்த்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது[1]. அக்கோவில் அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி, இத்தகவலை அறிக்கையாக வெளியிட்டதாகவும் செய்தி வந்துள்ளது. இதை மாற்றுவதற்கு, முத்தையா ஸ்தபதியார் கூறுவதற்கான காரணம், ஆகம சாஸ்திரத்தின் படியும் சிற்ப சாஸ்திரத்தின் படியும், பின்னமான மூர்த்தியை பூஜிக்கக் கூடாது என்பது கொள்கை என்று கூறி உள்ளார்”.

காலம் காலமாக இருந்த தெய்வ உருவத்தை ஒதுக்கிவிட்டு புதிது செய்தால், அரசனுக்கும், ஆட்சிக்கும் மட்டுமல்லாது மக்களுக்கும் பேராபத்து[2]:  “தெய்வ உருவங்கள் பின்னமானால் என்ன செய்ய வேண்டும் என, ஆகம நுால்களும், சிற்ப நுால்களும் தெளிவாக கூறியுள்ளன. தெய்வ உருவங்களின் அங்கங்களை பெரும் அங்கம் என்றும், சிறு அங்கங்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றில் தலை, கழுத்து முதல் இடுப்பு வரை உள்ள இரண்டு அங்கங்கள் பெரு அங்கங்கள் என்றும், மற்றவை சிறு அங்கங்கள் என்றும் கூறுகின்றன. தலை அல்லது உடல் பகுதியைத் தவிர மற்ற எந்தப் பகுதியில் பின்னம் ஏற்பட்டாலும் அதை சீர்திருத்தி, அந்த பழைய உருவத்தைத் தான் பயன்படுத்த வேண்டும். இதை மீறி, காலம் காலமாக இருந்த தெய்வ உருவத்தை ஒதுக்கிவிட்டு புதிது செய்தால், அரசனுக்கும், ஆட்சிக்கும் மட்டுமல்லாது மக்களுக்கும் பேராபத்து விளையும் என்று தான் ஆகம சாஸ்திரங்களும், சிற்ப சாஸ்திரங்களும், மதம் முதலிய அனைத்து நுால்களும் கூறுகின்றன[3]; ஏனைய சிற்ப சாஸ்திரங்கள் எதுவாகிலும் இதையே வலியுறுத்துகின்றன. இதே கேள்வி, லண்டன் நடராஜர் வழக்கில் லண்டன் நீதிமன்றத்தால் கேட்கப்பட்டது. ஆகமங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, சிறு பின்னங்கள் இருந்தால் சிலைகளை ஒதுக்கினால் ஆபத்து விளையும் என்று, நான் என் சாட்சியத்தில் காட்டியுள்ளேன்[4].

நீதிக்காக எடுத்த முடிவு: “அந்நுால்களை வாங்கிப் பார்த்த லண்டன் மேல் நீதிமன்றம், அதை ஏற்றுக் கொண்டு தம் தீர்ப்பிலும் இதைக் குறிப்பிட்டுள்ளது. இது, நீதிக்காக அங்கு எடுத்த முடிவு. இங்கு யாம் கேட்பதெல்லாம், எந்த சிற்ப சாஸ்திரத்தில் அல்லது அதே போல் எந்த ஆகம சாஸ்திரத்தில், சிறு பின்னம் உடைய உருவத்தை ஒதுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என ஆராய, அறநிலையத் துறை கடமைப்பட்டு உள்ளது. அறநிலையத்துறை ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில், அரசின் தலைமை ஸ்தபதியார், ஆகமம் என்றே ஒரு சாஸ்திரம் கிடையாது; எல்லாம் எங்கள் சிற்ப சாஸ்திரத்தில் உள்ளது என வாதாடினார். அவ்வாறெனில், ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் இவர் அரசின் ஆலோசகராக எவ்வாறு செயலாற்றுகிறார் என்பது தெரியவில்லை[5].

பண்டைய வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை இடிப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் வல்லமை கிடையாது[6]: “அதேபோல், பண்டைய வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை இடிப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் இவருக்கு வல்லமை கிடையாது; புதுக்கட்டடங்கள் கட்டுவதில் மட்டும் இவருக்கு வல்லமை உண்டு. பழம்பெரும் கட்டடங்களை புதுப்பிக்க, புதிய விஞ்ஞான முறைகளை உலக விஞ்ஞானிகள் வகுத்துள்ளனர்; அதற்கான பரிசோதனைக் கூடங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துறையில் வல்லமையும், முறையே பயின்றவர்களையும் தான் அப்பணியில் ஈடுபடுத்த வேண்டுமென நான், நம் சென்னை நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தேன். அதை, கனம் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பித்துள்ளனர். வழிபாட்டில் இருக்கும் சிலைகளை அப்புறப்படுத்துவதும், கல் மண்டபங்களை இடிப்பதும், கோவில்களையே முற்றிலும் இடித்து விடுவதும், அரசுத் துறையே அரைகுறை ஆலோசகர்களை கேட்டு செயல்படுவதும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இது குறித்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி, கோவில்களுக்கு ஏற்பட்டு வரும் அவலநிலையையும், சான்றுகளுடனான படங்களையும் கண்டு மனம் பதறி, ஒருவர் கருத்தை மட்டும் கேளாது பல அறிஞர்களையும் கேட்டு, அரசு ஏன் செயல்படக்கூடாது எனவும், நிலைமை சீராகும் வரை எவ்வித புதுப்பிக்கும் திருப்பணியும் மேற்கொள்ளக் கூடாது எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளார். அரசு, மக்கள் நலனுக்காக மேற்கொள்ளும் பணிகளை, இடைத்தரகர்கள் சீரழித்து விடாது பார்த்துக் கொள்வது அதிகாரிகளின் கடமையன்றோ!,” நாகசாமி இவ்வாறு 2016ல் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

பழனி பாலதண்டாயுதபாணி கோவில் சிலை ஊழல்: 1984-ஆம் ஆண்டில் நீதிபதி சதாசிவம் தலைமையில், மடாதிபதிகள், விஞ்ஞானிகள், ஆகம நிபுணர்கள் அடங்கிய குழுவினர் பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நவபாஷானத்தால் ஆன மூலவர் சிலையை ஆய்வு செய்த பின்பு அளித்த பரிந்துரையின்படியே, இன்றளவும் நாளொன்றுக்கு 6 கால பூஜை மட்டுமே மூலவருக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தொன்மையான உற்சவரின் பழையசிலை அகற்றிவிட்டு புதிய உற்சவர் சிலையை செய்ததற்காக ஸ்தபதி அருணாச்சடேஸ்வரர் என்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவர் இறந்த பின்னர், விதிகளை மீறி 2004-ஆம் ஆண்டு 200 கிலோ எடையில் மேலும் ஒரு புதிய பஞ்சலோக சிலை செய்ய வேண்டும் என்றும், அதில் 10 கிலோ தங்கம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருத்தணி கோயிலில் இருந்து 10 கிலோ தங்கமும் பெறப்பட்டுள்ளது. சிலையை ஆகம விதியையும் மீறி கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்தபதி முத்தையாவுக்கு சொந்தமான ஸ்வர்ணம் என்ற சிற்பக் கலைக் கூடத்தில் உற்சவர் சிலை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதுடன் நிர்ணயிக்கப்பட்ட 200 கிலோவுக்கு பதில் 221 கிலோ எடையில் சிலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், புதியதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை கருத்துப் போனதால் கோயிலின் பூட்டிய இருட்டறையில், பூஜையே செய்யாமல், தன்னந்தனியாக 14 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது.

 2004-2018 – 14 ஆண்டுகளா இருட்டில் இருந்த விக்கிரகம் / சிலை: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலையை பரிசோதனை செய்த தொழில்நுட்ப நிபுணர் குழுவினர், 22 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட அந்த சிலையில் 10 சதவீதம் தங்கம் கூட இல்லை, எள்ளவும் வெள்ளி இல்லை என்றும் சிலை ஐம்பொன்னால் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து சிலை செய்வதற்கு கூடுலாக 12 கிலோ தங்கம் எங்கிருந்து வந்தது? அதற்கான ஆவணங்கள் எங்கே?, ஒரு வேளை சில ஆண்டுகளுக்குப் பின் அதை வெளிநாட்டுக்கு கடத்தும் நோக்கத்தில் செய்யப்பட்டதா? என பல்வேறு கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. உற்சவர் சிலைக்காக பழனி கோயிலில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சிலை செய்வதில் கையாடல் நடந்தது தெரிந்தும் 14 ஆண்டுகளாக கோயிலின் தரப்பில் இருந்து எந்தவொரு புகாரும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து நம்பிக்கை மோசடி செய்து தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தலைமை ஸ்தபதி முத்தையாவை அதிரடியாக கைது செய்துள்ளனர்[7]. இந்த வழக்கில் பழனி கோயில் நிர்வாகி கே.கே.ராஜா என்ற மற்றொருவரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஸ்தபதி முத்தையா மீது ஏற்கெனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்ததாக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது[8].  இதை 2016லேயே நாகசாமி எடுத்துக் காட்டுகிறார். அதாவது, பழைய சிலைக்கு பதிலாக, புதிய சிலை செய்ததில் தான் ஊழல் நடந்தது.

© வேதபிரகாஷ்

15-06-2022


[1]  இதுதான், பிறகு ஊழலாகி மாறி, வழக்குகளில், கைதுகளில் முடிந்துள்ளது.

[2] தினமலர், உயிரோடு ஒன்றிய சிலையை அகற்ற வேண்டாமே,  Updated : பிப் 21, 2016  01:50 |  Added : பிப் 20, 2016  20:24.

[3] எம். முத்தையா ஸ்தபதி, ஆலய நிர்மாண பிம்பலக்ஷண சிற்பநூல், அருள்மிகு கபாளலீஸ்வரர் கோவில், சென்னை, 2003, பக்கம்.161, 260, 289, 278,

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=1461522

[5]  எம். முத்தையா ஸ்தபதி அரசின் தலைமை ஸ்தபதியாக இருந்தார், அந்நேரத்தில் இருந்தாரா, இல்லையா என்று தெரியவில்லை, ஆனால், அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதை, மேலே அடிக்குறிப்பில் கொடுக்கப் பட்டுள்ளது.

[6] டாக்டர் இரா. நாகசாமி, முன்னாள் இயக்குனர், தொல்லியல் துறை (ஓய்வு) –

தினமலர், உயிரோடு ஒன்றிய சிலையை அகற்ற வேண்டாமே,  Updated : பிப் 21, 2016  01:50 |  Added : பிப் 20, 2016  20:24.

[7] தினமணி, பழனி பால தண்டாயுதபாணி கோயில் உற்சவர் சிலை முறைகேடு: தலைமை ஸ்தபதி முத்தையா கைது, By DIN  |   Published On : 25th March 2018 10:02 PM  |   Last Updated : 25th March 2018 10:02 PM.

[8] https://www.dinamani.com/latest-news/2018/mar/25/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2887271.html

இரண்டே நாளில் ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் என்றெல்லாம் அறிவிக்கப் பட்ட சிலை  – வாதிராஜர் ஆனது! (2)

ஜூன் 16, 2022

இரண்டே நாளில் ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் என்றெல்லாம் அறிவிக்கப் பட்ட சிலை  – வாதிராஜர் ஆனது! (2)

சிலைகள் உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளைக்கு சொந்தமானது: 14-06-2022 அன்று சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலைகளில் ஒன்றைப் பற்றி விதவிதமாக செய்திகளை 15-06-2022 அன்று ஊடகங்கள் வெளியிட்டன. அந்நிலையில், சம்பத்தப் பட்ட மடம் என்னவாயிற்று என்று தெளிவு படுத்தியுள்ளது. இரண்டாவ்து சிலை ஶ்ரீவாதிராஜ தீர்த்தர் என்பவருடைது. ஆஞ்சநேயர், வாதிராஜர் சிலைகள், தி.நகர் வாதிராஜ மடத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில், இரண்டு சுவாமி சிலைகள் கிடந்தன. கருங்கல்லாலான இந்த சிலைகளை, பட்டினப்பாக்கம் போலீசார் மீட்டனர். அதில், ஒன்று பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை; மற்றொன்று வாதிராஜர் சிலை.இரண்டையும் மீட்ட போலீசார், காவல்நிலையம் எடுத்து சென்று விசாரிக்கின்றனர். இந்நிலையில், அந்த சிலைகள் உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளைக்கு சொந்தமானது என தெரிய வந்து உள்ளது. தினமலர் மட்டும் தான், இதுவரை, இந்த செய்தியை வெளியிடுள்ளது. இது குறித்து அம்மடத்தினர் தரப்பில் கூறியதாவது:

Sode Mutt, T. Nagar

Sode Mutt, T. Nagar 09-06-2022 function

28 ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள்[1]: “கடந்த 1994ல் நிறுவப்பட்ட இந்த மடம், மூல மடத்தின் பீடாதிபதியால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு பரம்பரை அறங்காவலர் இல்லை. அம்மடத்தில் கோவில் ஒன்றும் உள்ளது. அதில், 28 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநயேர் சிலை, வாதிராஜர் பழைய கற்சிலைகள் இருந்தன. இந்நிலையில், அக்கோவில் கும்பாபிஷேம், 9ம் தேதி நடந்தது.இதில், உடுப்பி சோடே ஸ்ரீ வாதிராஜ மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஸ்வவல்லப தீர்த்த சுவாமிகள் பங்கேற்று நடத்தி வைத்தார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மடத்தின் கோவிலில் ஹயக்ரீவர், பஞ்சமுகி ஆஞ்சநேயர், வாதிராஜர் மற்றும் பூதராஜரின் புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழைய கற்சிலைகள் மென்மையான கற்கள் மற்றும் அரிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. புதிய சிலைகளை பிரதிஷ்டை செய்ததால், பழைய சிலைகளை நமது பாரம்பரியத்தின்படி, இயற்கையான வகையில் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய வேண்டும். எனவே, 12ம் தேதி பட்டினபாக்கம் கடற்கரையில் பழைய கற்சிலைகளை விஜர்சனம் செய்தோம். பட்டினப்பாக்கம் கடற்கரையில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநேயர், வாதிராஜர் கற்சிலைகள் எங்கள் மடத்தைச் சேர்ந்தவை. அதில், திருட்டுச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. அந்த சிலைகளை மீண்டும் மரபுப்படி விசர்ஜனம் செய்ய எங்களிடம் ஒப்படைக்க காவல் துறையை கோர உள்ளோம்,” இவ்வாறு அவர்கள் கூறினர்[2].

Installation Ceremony of Dieties, Sri Hayagriva ,Sri Panchamukhi Anjaneya, Bhavi Sameera Sri Vadiraja Gurusaarvabhoumaru, and Sri Bhootharajaru was performed by Sri Vishwavallabha Thirtha Swamiji ,at newly renovated Sri Hayagriva Vadiraja Mandira, T Nagar Chennai , a unit of Sode Sri Vadiraja Matha, on 8th June. Swamiji also performed Brahmakumbhabhishek to the Deities on 9th June. 2022
Sri Vadiraja Tirth

ஆக, இதனால் அறியப் படுவது என்னவென்றால்: செக்யூலரிஸம் என்றுசொல்லிக் கொண்டு, என்ன வேண்டுமானாலும் எய்யலாம், தப்பித்துக் கொள்ளலாம்.

1. அது வாதிராஜர் சிலைதான், எங்களுடையது, பழையது, விசர்ஜனம் செய்யப் பட்டது: உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளை அறிவித்தது.

2. புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், பழைய சிலைகளை நமது பாரம்பரியத்தின்படி, நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய வேண்டும்…

3. ஜூன் 12ம் தேதி பட்டினபாக்கம் கடற்கரையில் பழைய கற்சிலைகளை விதிகளின் படி விஜர்சனம் செய்தோம் – உடுப்பி மடம்.

4. அந்த சிலைகளை மீண்டும் மரபுப்படி விசர்ஜனம் செய்ய எங்களிடம் ஒப்படைக்க காவல் துறையை கோர உள்ளோம் – உடுப்பி சோடே வாதிராஜ மடம்.

5. அதற்குள் அச்சிலை வீரமாமுனிவர், சித்தர், நாயன்மார், முருகன்….. …என்றெல்லாம் கற்பனையில் ஊடகங்கள் கதை விட ஆரம்பித்தன!

6. அது மட்டுமா, தலைப்புகள் – கடத்தப்பட்ட சிலைகள், கரை ஒதுங்கிய மர்மம் ……கடத்தல் சிலிகள் போலீஸார் விசாரணை………., மணலில் புதைந்து கிடந்த சிலைகள் மீட்பு….

7. ஆக தமிழக ஊடகங்களுக்கு ஒன்று என்றால், அதனை ஒன்பதாக ஊதி பெரிதாக்கி, பொய் என்றாலும் கவலைப் படாமல் செய்தியாக்கும் திறமை உள்ளது!

8. அச்சிலை வீரமாமுனிவர் என்ற போது கூட, எந்த இந்துத்துவ வாதியும் பொங்கவில்லை, ஒருவேளை அந்த அறியப் படாத கிறிஸ்தவ மயக்கத்தில் இருந்தனர் போலும்[3].

9. இந்து மதம், இந்துக்கள் நலன், இவற்றையும் மீறிய ஏதோ ஒன்று ‘இந்துத்துவ வாதி’களைக் கட்டுப் படுத்துகிறதா?

10. ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் என்பதில் உள்ளதும், இந்துத்துவ வாதிகளின் அமைதியும் ஒன்றுதான்! இனி க்ஷீணமான, சேதப் பட்ட சிலை / விக்கிரகத்தை உபயோகப் படுத்தலாமா, கூடாதா என்பதை பார்ப்போம்.

கற்சிலைகளில் ஏற்படும் பிழைகள், தவறுகள், குறைகள், சேதங்கள்: பொதுவாக கற்களில் சிற்பம் செய்யும் போது, சில பிழைகள், தவறுகள், குறைகள் முதலியவற்றால், சேதம் / சேதங்கள் ஏற்படும். சிறந்த கைதேர்ந்த சிற்பி, அதனை / அவற்றை அணிகலன், அலங்கார வேலைப்பாடு, துணி இருப்பது போல, என்று சேர்த்து, மாற்றி வடிவமைத்து, சரிசெய்து விடுவர். கற்களில் உள்ள குறைகளாலும் அத்தகைய பிழைகள், தவறுகள், குறைகள், தேதங்களில் முடிவதுண்டு. அந்நிலையில், அச்சிலைகள் பயன்பாட்டிற்கு ஏற்றுக் கொள்வதில்லை. தூர வைப்பது, புதைப்பது, ஆற்றில் போடுவது என்று அப்புறப்படுத்தி விடுவர். நல்ல சிற்பி செய்யும் போது, கண் திறக்கும் வரை எந்த பிழையும் ஏற்படாது. இப்பொழுது, வியாபார ரீதியில் செய்வதாலும், மிஷின்கள் (machines) பயன்படுத்துவதாலும், கொஞ்சம் கவனம் சிதறினால், தவறினால் குறை ஏற்பnட்டு விடும். இப்பொழுதெல்லாம், குறை ஏற்பட்ட பக்தியை தனியாக செய்து, அடிசிவ் (adhesive) என்கின்ற ரசாயன பசை வைத்து ஒட்டியும் விடுகிறார்கள். ஏமாந்தால், குறைந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். இந்து அறநிலையத் துறையினர், பழைய விக்கிரங்கள் / சிலைகளை மாற்றி புதியதாக வைக்கிறேன் என்று பல கோடி ஊழல்களில் சிக்கியுள்ளதாக செய்திகள், வழக்குகள் உள்ளன.

விக்கிரகம், சிலை மாற்றங்களுக்கு / மாறுதலுக்கு உபயோகப் படுத்துவதை தடுக்க வேண்டும்: ஒருவேளை இத்தகைய பின்னப் பட்ட, சேதப் பட்ட, க்ஷீணப்பட்ட சிலைகள், விக்கிரங்கள் முதலியவற்றை மாற்றும் பின்னணியில், சிலை கடத்தல் போன்றவை இருப்பதால், போலீஸார் ‘அலர்ட்’ ஆகி விட்டனர் போலும். ஊடகக் காரர்களும் உசுப்பேற்றி விட்ட மயக்கத்தில் உச்சத்தில் சென்று செய்திகளை போட்டு விட்டனர் போலும். இப்பொழுது, ‘புஷ்’ என்று ஆகி விட்டாலும், நாளைக்கு மற்றவற்றிற்கும், இதே லாஜிக்கை (modus operandi) போல குற்றங்களுக்குப் பயன்படுத்தலாம். கடத்தல், கடல் தாண்டிய குற்றங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அவ்வாறு செய்து, மாற்றி வைப்பது (duplicates / போலிகள் தயாரிப்பது) வெளியாகுமே என்றும் அச்சப் படலாம். இந்த நவீன காலத்தில், எல்லாமே நல்லதிற்கும் உபயோகப் படுத்தலாம், கட்டடற்கும் பயன்படுத்தலாம். ஒழுக்கம், நாணயம், நியாயம், தர்மம் எல்லாம் சும்மா பேசிக் கொண்டு, பணத்திற்காக வேலை செய்து கொண்டு இருந்தால், கோவில், என்றெல்லாம் பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை எனலாம். இரட்டை வேடம் போடுபவர்கள் நிச்சயமாக ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள்.

© வேதபிரகாஷ்

15-06-2022


[1] தினமலர், கடற்கரையில் மீட்கப்பட்டசிலைகள் அடையாளம் தெரிந்தது, Added : ஜூன் 15, 2022  22:58; https://www.dinamalar.com/news_detail.asp?id=3054113

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3054113

[3]  கலெக்டர் கவிதா, ஸ்டாலினுக்கு “அறியப் படாத கிறிஸ்தவம் – தமிழ்நாட்டில் ஒரு வரலாற்று தேடல்,” என்ற புத்தகத்தைக் கொடுத்ததால், இந்து அமைப்பினர், அவருக்கு, “இந்துமதம் பதில் சொல்கிறது,” என்ற புத்தகத்தைக் கொடுத்ததாக, பேஸ்புகில் பதிவுகள் போட்டனர். ஆனால், வேடிக்கை என்னவென்றால், நிவேதிதா லூயி என்ற அடிப்படைவாத கிறிஸ்தவ பெண் எழுதிய அப்புத்தகத்தை வெளியிட்டதே, “கிழக்குப் பதிப்பகம்” தான். அதனுடன் சம்பந்தப் பட்டவர்களும் இந்துத்துவவாதிகள் தான்.

கத்திரிக்காயில் பிள்ளையார் – லண்டனில் அதிசயம்!

மே 5, 2013

கத்திரிக்காயில் பிள்ளையார் – லண்டனில் அதிசயம்!

Brinjal Ganesa in Leicester, UK5

பிள்ளையார், வினாயகர், கணேசன், கஜபதி, கணபதி, கணநாதன், என்று பல பெயர்களில் செல்லமாகவும், விஷேசமாகவும், எங்கெங்கும் வழிபட்டு வரும் வேளையில், லண்டனில் ஒருவர் கத்திரிக்காயில் பிள்ளையாரின் உருவதைப் பார்த்து வியந்து விட்டார். பெரிய இரண்டு காதுகள், தும்பிக்கை என வினாயகரின் உருவம் அதில் பதிக்கப்பட்டதைப் போன்றிருந்தது. உடனே அதனை விக்கிரம் மாதிரி, பூஜை மேடையில் வைத்து விட்டார். செய்தி கேட்டதும், பலர் இதனை பார்க்க வந்து விட்டனர்.

Brinjal Ganesa in Leicester, UK

பிரபுல் விஸ்ராம் என்பவர் லெசெஸ்டர் என்ற இடத்தில் உணவு விநியோகம் செய்து வருகிறார்[1]. அப்பொழுது, காய்கறிகள் வந்த ஒரு பெட்டியில், ஒரு கத்திரிக்காயில் இருந்த உருவம் பிள்ளையாரைப் போலிருந்ததும், அவரது மனைவி, வியப்போடு எடுத்து வந்து காட்டினார். பார்த்தால், வினாயகரைப் போலவே இருந்ததும், பயபக்தியுடன் பூஜையில் விக்கிரங்களுடன் சேர்த்து வைத்து விட்டார். ஆரத்தியோடு வழிபாடு செய்யவும் ஆரம்பித்து விட்டார்.

Brinjal Ganesa in Leicester, UK2

செய்தி கேட்டதும், பலர் இதனை பார்க்க வந்து விட்டதால், தனது அலுவலகத்திலேயே, கோயில் மாதிரி அதனை வைத்து விட்டார்[2]. இந்த விஷயத்தை அறிந்த அவரது உறவினர், நண்பர், மற்றவர்கள் வந்து பார்த்துச் சென்றனர். இதனால் எல்லோருக்கும் மங்களம் உண்டாகும் என்று நம்புகின்றனர்[3].

Brinjal Ganesa in Leicester, UK3

காய்கறி என்பதால், சில நாட்களில் வாடிவிடக் கூடும். ஆனால், அவர் அதைப் பற்றி கவலைப் படவில்லை. அப்படி நேர்ந்தால், நாங்கள் அந்த கத்தரிக்காயிற்கு, மரியாதையோடு அடக்கம் செய்து விழா கொண்டாடுவோம் என்கிறார்.

Brinjal Ganesa in Leicester, UK4

Baba Ganesh- Believers worship aubergine as the reincarnation of godReligious followers believe the divine vegetable is the reincarnation of multi-armed elephant deity Ganesh.And once it decomposes and becomes too mouldy, they have vowed to give the sacred eggplant a full Hindu funeral[4].

A caterer discovered it in a box of vegetables and now proudly displays it in a homemade temple in a backroom at his workplace.

Praful Visram, 61, who runs 4 Seasons Catering in Leicester, claims the Hindu gods blessed him and is honouring their wishes by putting it on display.

He said: “My wife, Rekha, saw it and recognised the similarity with Ganpati Bappa – Lord Ganesh.

“We immediately placed it with reverence in the temple at work. It has been a blessing for us and I hope will bring us luck and prosperity.

“This has been sent to us and we shall treat this with the respect it deserves.”

Praful described how he and his family along with staff members have been praying to the vegetable twice a day.

He said word has spread and over 80 people have turned up to worship the elephant-faced aubergine. Praful added: “It is spreading good feeling throughout the community.”

Hina Chodai, who runs a neighbouring company called Khushi Food, said the resemblance to Lord Ganesh – the Hindu god of wisdom, prosperity and good fortune – was remarkable.

He said: “As soon as I heard about the aubergine I had to see it for myself. It is indeed a blessing for all of us.

“I am hoping it will bring prosperity to all who pray there. I have prayed there a few times and all of my family have come along to pray, too.”

And one of Praful’s workers named as Bacash, 44, added: “There is no doubt that it looks like the God. I pray in the temple at work every day and it gives me a good feeling.

Brinjal Ganesa in Leicester, UK6

நல்லவேளை, இங்கிலாந்தில் பெரியார் இல்லை. ஒருவேளை நாளைக்கு கத்தரிக்காய்களை எல்லாம் வாங்கி தெருக்களில் போட்டு மிதிப்பார்களா?

© வேதபிரகாஷ்

05-05-2013


சித்தாந்த தீபாவளி 2010: உலக-தேசிய-மாநில கொண்டாட்டங்கள் (1)

நவம்பர் 9, 2010

சித்தாந்த தீபாவளி 2010: உலக-தேசிய-மாநில கொண்டாட்டங்கள் (1)

நாத்திகர்களை பெரிதும் பாதித்துள்ள தீபாவளி: இப்பொழுது எல்லோருமே தீபாவளியைப் பிடித்துக் கொண்டு ஆடி-ஆட்டி வருகிறார்கள். அதுவும் ஒபாமா தம்பதியர் விளக்கு வைத்து, பாடி-ஆடி தீபாவளி கொண்டாடியதும், எல்லோருக்குமே ஆட ஆரம்பித்து விட்டது! குறிப்பாக தமிழக நாத்திகர்களுக்கு, பகுத்தறிவாளிகளுக்கு சொல்லவே வேண்டாம், “பெரியார் பிறந்த பூமியில் தீபாவளியா” என்றெல்லாம் புலம்பி ஓய்ந்து, மழை சாக்கு வைத்துக் கொண்டு வீடுகளில் அடைப்பட்டு விட்டன[1]. ஆனால், வீட்ட்டிற்குள்ளேயிருந்தே வெடிகளை வெளியே வீசிக்கொண்டிருந்தன. பாவம், அவர்கள் விட்ட வெடிகள் எல்லாமே “புஸ்ஸாகி” விட்டன! ஒபாமாயாகிவிடவில்லை! நன்றாக நமுத்து / நமித்து / நமிதாப் போய் விட்டன போலும்! நமீதாவை வைத்து வெடித்திருக்கலாம், குஷ்புபைவிட்டு[2] புஸ்வானமவது விட சொல்லியிருக்கலாம்!!

கமலஹாசனுக்கு / கமலாசனுக்கு[3] முதல்வர் வாழ்த்தும் பல்லாண்டு பாடலும்[4]: குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி 06-11-2010 அன்று தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் கமலஹாசனுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து[5] தெரிவித்துள்ளாராம்! இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ் திரையுலகின் கவுரவமாகவும், மகுடமாகவும் திகழ்பவர் கமல்; தமிழ் சினிமாவில் கமலுக்கு என்றுமே தனியிடம் உண்டு; சிறுவனாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த கமல், தற்போது உலக அரங்கிற்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்லும் நிலைக்கு உயர்ந்துள்ளார்; அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் பல பெருமைகளை பெற வாழ்த்துகிறேன்; மனதளவில் அவர் கவிஞராக இருப்பதே அவரின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம்; அவர் சிறந்த நடிகர் என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார்”, இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளாராம்! வேடிக்கைதான், ஏன் நாத்திக மரபுபடி “நாசமா போக, உன்வீட்டில் இழவு வர………………..”, என்று பாராட்டியிருக்கலாமே? எல்லாவற்றையும் நாங்கள் தலைகீழாக செய்வோம்[6] என்றுதானே பீழ்த்திக்கொள்வர்?  பிறகென்ன “பல்லாண்டு”?

“அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் பல பெருமைகளை பெற வாழ்த்துகிறேன்”: திருமாவிற்கு போட்டியாக ராமசாமி நாயக்கரின் மகனாக நடித்ததால்[7], நன்றாகவே நாமம் போட்டுள்ளார். அதென்ன “பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் பல பெருமைகளை பெற வாழ்த்துகிறேன்”, வெங்காயம்! இதென்ன நாத்திகமா, ஆத்திகமா, வெங்காயமா, எள்ளுருண்டையா? “வாழ்க, ஒழிக” என்பது என்ன வாழ்த்தா, சாபமா, பலித்துவிட? இதென்ன பிறகு இந்த திராவிட ரிஷி இப்படி கிளம்பிவிட்டார், இந்த வயதில்? நாத்திக மரபுபடி “நாசமா போக, உன்வீட்டில் இழவு வர………………..”, என்று பாராட்டியிருக்கலாமே? எல்லாவற்றையும் நாங்கள் தலைகீழாக செய்வோம்[8] என்றுதானே பீழ்த்திக்கொள்வர்?  பிறகென்ன “பல்லாண்டு”?

“மனதளவில் அவர் கவிஞராக இருப்பதே அவரின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம்”: ஆமாம், நல்லவேளை, உடலளவில் கவிஞராக, கலைஞனாகி விடவில்லை! சமீபத்தில் கமல் நானும் கலைஞன் தான் என்று “ஆட்டம் பாம்” வெடித்தது உறுத்திவிட்டது போலும், பதிலுக்கு சரத்தை வீசியுள்ளார். அதாவது, இனி திமுகவில் உடலளவில் சேர்ந்து முன்னேற வேண்டியது தான் பாக்கி! கலைஞனுக்கு எப்படியெல்லாம் பொறாமை வருகிறது? முன்பு மாமியார்-மறுமகள் வெடி – ஒன்று வெடித்துக் கொண்டே முன்னால் சென்றால், இன்னொன்று எதிர்பக்கத்தில் வெடித்துக் கொண்டே வரும் – என்றேல்லாம் விற்பார்கள், இப்பொழுது கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

“அவர் சிறந்த நடிகர் என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார்”!: ஐயோ, இதென்ன இப்படி சீனவெடியைக் கிள்ளிப் போட்டுவிட்டார்? ஊர்வசி வேறு கமல் நெருக்கத்தில் வந்து நடித்தால் ஏதோ செய்வார் என்று வேறு குண்டு விட்டிருக்கிறார்! அவர் நடித்ததால்தானே, எத்தனை நடிகைகளின் வாழ்க்கை பாழானது, தற்கொலை செய்து கொண்டனர், இத்யாதி…………….படாபட்! வீரமணியிடம் சொல்லி, இன்னொரு சிறப்பு மலரை “காதல் இளவரசன்” அல்லது “நடிகைகளின் நரகாசுரன்” என்று வெளியிட செய்யலாம்! இனி கமல் “அரசியல்வாதி” ஆனால் தான், பிரச்சினை!

ஒபாமா வருகை முழுக்க முழுக்க வர்த்தக ரீதியிலானது[9]: பா.., புகார் புலம்பல்: “அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை, முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்டது’ என,  பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. ஒபாமா இந்தியாவிற்கு வரும் முன், இந்திய வெளியுறவு செயலர் நிருபமாராவ் விடுத்த அறிக்கைக்கும், ஒபாமா தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கைக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தும் வகையில் ஒபாமாவின் வருகை அமையும் என, ராவ் தெரிவித்திருந்தார்.  ஆனால், ஒபாமாவின் பயணமோ, முழுக்க முழுக்க வர்த்தக ரீதியில் அமைந்துள்ளது.

கம்யூனிஸ்ட்டுகளின் சில்லறை ஒப்பாரி[10]: இரட்டை வேடம் போடுவதில் இவர்களும் சளைத்தவர்கள் அல்லர்[11]. நன்றாக தீபாவளி கொண்டாடி விட்டு, ஊசிவெடி வெடிக்க தெருவில் வந்து பூச்சாண்டி காட்டியது வேடிக்கையாக இருந்தது. டில்லியில் ஆட்டம் பாம் வெடிக்கிறது என்றால், இங்கு புஸ்ஸான வெடிகளை நெருப்பில் போடு கொளுத்துகிறார்கள்[12], பாவம்! ஒப்பாரி வைத்த அனைத்து எம்.பிக்களும் ஒபாமா பேச்சைக் கேட்டு புல்லரித்து பாராட்ட வேறு செய்தார்கள்!

வேதபிரகாஷ்

© 08-11-2010


[1] டாக்டர் சொல்லியும் கேட்காமல் விதவிதமான ஸ்வீட்டுகளை சுவைத்ததால் பத்தினிகள் வேறு சாபமிட்டிருக்கிறார்களாம்! என்ன செய்வது இலவசமாக வந்து குவிந்து விட்டதாம்! ஊச் வெடியை வெடிக்கலாம், கொளுத்தலாம், ஸ்வீட் ஊசி விட்டால் என்ன செய்வது?

[2] பாவம், சுந்தர் கழட்டிவிடுவேன் என்று பயமுறுத்தியதாக வேறு செய்திகள் வந்துள்ளன.

[3] கமலம் + ஹாசன் = கமல் + ஆசன் = கமலாசன் என்று மாற்றிக் கொள்ளாலாமா? இங்கு எப்படி “ஸ” வந்தது என்று தெரியவில்லை, பார்ப்பன சதியே அலாதியானது தான்!

[4] தினமலர், கமலஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து, நவம்பர் 07, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=121755

[5] 50 ஆண்டுகளில் இல்லாதது இப்பொழுது எப்படி வந்தது? அதுவும் சரியாக 2010ல்?

[6] உண்ணாவிரதம் என்றாள் உண்ணும் விரதம் என்று கவிச்சை வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்; நல்லநாள் எல்லாம் பார்ப்பதில்லை என்று ராகுகாலம்-எமகண்டத்தில் கல்யாணம் செய்து கொள்வார்கள்….இப்படி பல நாத்திக கூத்துகள், வெடிகள் எல்லாம் தமிழகத்தில் தமிழர்கள் பார்த்திருக்கிறார்கள்.

[7] இந்த நடிகன் “நாயகர்” என்றதும் தசாவதாரத்தில் அந்த நடிகை எதோ ஊளையிடுவாள், பாவம்! ஆஸௌசம் தான்!! ஆமாம், வசனத்தை “கட்” செய்திருப்பர்!

[8] உண்ணாவிரதம் என்றாள் உண்ணும் விரதம் என்று கவிச்சை வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்; நல்லநாள் எல்லாம் பார்ப்பதில்லை என்று ராகுகாலம்-எமகண்டத்தில் கல்யாணம் செய்து கொள்வார்கள்….இப்படி பல நாத்திக கூத்துகள், வெடிகள் எல்லாம் தமிழகத்தில் தமிழர்கள் பார்த்திருக்கிறார்கள்.

[10] இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாக்ஷிச கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பல்கழலக்கழக மாணவர்கள் என சுமார் 700 பேர் டெல்லியின் முக்கிய பகுதியான ஜந்தர் மந்திர் பகுதியில் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்..

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/11/101108_protestagainstobama.shtml

[11] சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டதற்கு  கம்யூனிஸ்டுகள் கண்டனம் தெரிவிக்கவில்லை.

இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தை  தங்கள் பகுதி என்று சீன வரைபடத்தில் வெளியிட்டதற்கும்,

ஜம்மு காஷ்மீரிலிருந்து செல்பவர்களுக்கு சீனா தனி விசா கொடுப்பதற்கும்,

பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள இந்திய பகுதியை பாகிஸ்தானுக்கு உரியது என்று சீனா அதிகாரப்பூர்வமாக சொல்லி வருவதற்கும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இலங்கை தீவில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க சீன அரசு ஆயுதங்களை வழங்கிய போது, கம்யூனிஸ்டுகள் கண்டிக்கவில்லை. இப்படி அடுக்கடுக்காக கூறியுள்ளவர், இல்லை 1000 வாலா வெடித்தவர் வைகோ!

வீரமணியும் ஜூலியா ராபர்ட்ஸும்!

ஓகஸ்ட் 10, 2010

வீரமணியும் ஜூலியா ராபர்ட்ஸும்!

மனிதத் தன்மைக்கே விரோதமான ஒரு மதம் ஆரிய மதம்இந்து மதம்

வாலாஜா மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார். (8.8.2010)

வாலாஜா, ஆக.10 மனிதத் தன்மைக்கே விரோத மான ஒரு மதம் இருக்கிறதென்றால் அதுதான் ஆரிய மதம்இந்து மதம் என்று வாலாஜா மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

http://www.viduthalai.periyar.org.in/20100810/news09.html

உலகின் சிறந்த மதம் மன அமைதி கிடைத்ததால் இந்து மதத்திற்கு மாறினேன்

இந்து மதத்துக்கு மாறினார் ஜூலியா ராபர்ட்ஸ்

ஆகஸ்ட் 08,2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=57126

புதுடில்லி :ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்(42), இந்து மதத்துக்கு  மாறிவிட்டார். கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்கிறார். “அடுத்த பிறவியிலாவது நான் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என, மனமுருகிக் கூறியுள்ளார்.