Posts Tagged ‘சிலை சின்னம்’

சேதப் பட்ட, பின்னப் பட்ட / க்ஷீணப்பட்ட சிலைகள் / விக்கிரங்கள் இருந்தால் / வைக்கப் பட்டால் / மாற்றினால் என்ன விளைவு ஏற்படும்? (3)

ஜூன் 16, 2022

சேதப் பட்ட, பின்னப் பட்ட / க்ஷீணப்பட்ட சிலைகள் / விக்கிரங்கள் இருந்தால் / வைக்கப் பட்டால் / மாற்றினால் என்ன விளைவு ஏற்படும்? (3)

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி: மறைந்த தொல்லியல் வல்லுனர் ஆர். நாகசாமி இதைப் பற்றி விவரமாகக் கூறியுள்ளது: “காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி, 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டில் உள்ள புகழ் வாய்ந்த உற்சவமூர்த்தி. எழிலே உருவான இதற்கு அழகிலோ, வரலாற்று சிறப்பிலோ, சமய மரபிலோ, பொருள் விலையிலோ ஈடிணையான உற்சவமூர்த்தி ஏதும் இல்லை. கச்சி ஏகம்பரத்தில் உரைகின்ற இப்பரமன், கலை வரலாற்றில், ஆயிரத்து நுாறு ஆண்டுகளுக்கு முன் வடிக்கப்பட்டு இவ்வளவு காலமாக, அதாவது ராஜராஜன் நுாற்றாண்டுக்கும் முன்பிருந்தே வீதி உலாவில் வந்த உத்தமத் தெய்வம். இந்த மாபெரும் தெய்வத்தை, தமிழகத்தை ஆண்ட பெருமன்னர்கள் எல்லாம் வந்து கண்டு, பக்திப் பெருக்கோடு வணங்கி சென்றிருக்கின்றனர். இத்தெய்வத்தை தாங்கி உலா வருவதற்காக, அருமையான வேலைப்பாடுகள் அமைந்த வெள்ளியினால் செய்யப்பெற்ற ரிஷப வாகனத்தை கொடுத்தான், விஜயநகர மாமன்னன் கிருஷ்ண தேவராயன்.”

கம்பீரமாக உலா வரும் 500 வருட சிலை: ஆர். நாகசாமி எடுத்துக்காட்டுவது, “பல கோடி ரூபாய் பெருமானமுள்ள அந்த வாகனம், இன்றும் அக்கோவிலில் உள்ளது. இந்த சோமாஸ்கந்த பெருமான், அதன் மீது தான் இன்றும் கம்பீரமாக உலா வருகிறார். கிருஷ்ண தேவராயன், இக்கோவிலில் உள்ள மாபெரும் தெற்கு கோபுரத்தை கட்டுவித்து, அக்கோபுர வாயிலின் வழியாக வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் உருவை உலாவாக எழுந்தருளச் செய்து, பக்திப் பெருக்கோடு வணங்கினான். இவ்விழாவானது, இன்றைக்கு சரியாக, 500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போதும் இக்கோபுர வாயில் வழியாக வெளிப்போன இப்பெருமானை, பக்தி பெருக்காலே வணங்கிய அடியார்கள் கோடான கோடி பேராவர். அக்கோபுரம் கட்டிய, 25 ஆண்டுகளுக்குள் மற்றும் ஒரு சிறந்த நிகழ்ச்சி இங்கு நடந்தது. சேக்கிழார் பெருமான், திருத்தொண்டார் புராணம் என்னும் பெரிய புராணத்தை எழுதினார். அந்த அற்புத காப்பியத்தை அப்படியே சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்த ஒரு கவிஞன், ‘உபமன்யு பக்த விலாசம்என்ற பெயரில், சோமாஸ்கந்தர் முன்னிலையில் இவ்விழாவிலே அரங்கேற்றினான். அதைப் போற்றிய அன்றாண்ட மன்னன், அக்கவிஞனுக்கு சிறப்பு செய்ததை குறிக்கும் கல்வெட்டானது இக்கோவிலில் இன்றும் உள்ளது.மகா சுவாமிகள், அக்கல்வெட்டைப் பற்றி பெருமையாக குறிப்பிடுவார். அவர் போன்ற எத்தனையோ முனிவர்கள் எல்லாம், உச்சிமேல் கரம் கூப்பி வணங்கி பேறு பெற்ற பெருந்தெய்வம் இந்த சோமாஸ்கந்த மூர்த்தி”.

சோமாஸ்கந்த மூர்த்தியை மாற்ற திட்டம்: ஆர். நாகசாமி எடுத்துக்காட்டுவது, “ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, காஞ்சி மாநகருக்கே அருள்பாலித்த இத்தெய்வ உருவுக்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. நமது நாளிதழில், 2016 ஜன., 4ல் ஒரு செய்தி வெளிவந்தது. அச்செய்தியில், இவ்வுருவத்தின் ஒரு கரத்திலுள்ள விரலில் சிறு பின்னம் ஏற்பட்டிருப்பதாலும், பீடத்தில் சற்று அசைவு உள்ளதாலும் இதை வழிபடாது, வேறு சிலை செய்து வைக்க வேண்டும் என்று, அரசின் தலைமை ஸ்தப்தி முத்தையா ஸ்தபதியாரின் அறிவுரைப்படி, இந்த சிலையை ஒதுக்கிவிட்டு புதிய சிலையை செய்து வைக்க அவரே எற்பாடு (கான்ட்ராக்ட்) செய்துள்ளதாகவும், ஊர் மக்கள் இதை எதிர்த்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது[1]. அக்கோவில் அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி, இத்தகவலை அறிக்கையாக வெளியிட்டதாகவும் செய்தி வந்துள்ளது. இதை மாற்றுவதற்கு, முத்தையா ஸ்தபதியார் கூறுவதற்கான காரணம், ஆகம சாஸ்திரத்தின் படியும் சிற்ப சாஸ்திரத்தின் படியும், பின்னமான மூர்த்தியை பூஜிக்கக் கூடாது என்பது கொள்கை என்று கூறி உள்ளார்”.

காலம் காலமாக இருந்த தெய்வ உருவத்தை ஒதுக்கிவிட்டு புதிது செய்தால், அரசனுக்கும், ஆட்சிக்கும் மட்டுமல்லாது மக்களுக்கும் பேராபத்து[2]:  “தெய்வ உருவங்கள் பின்னமானால் என்ன செய்ய வேண்டும் என, ஆகம நுால்களும், சிற்ப நுால்களும் தெளிவாக கூறியுள்ளன. தெய்வ உருவங்களின் அங்கங்களை பெரும் அங்கம் என்றும், சிறு அங்கங்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றில் தலை, கழுத்து முதல் இடுப்பு வரை உள்ள இரண்டு அங்கங்கள் பெரு அங்கங்கள் என்றும், மற்றவை சிறு அங்கங்கள் என்றும் கூறுகின்றன. தலை அல்லது உடல் பகுதியைத் தவிர மற்ற எந்தப் பகுதியில் பின்னம் ஏற்பட்டாலும் அதை சீர்திருத்தி, அந்த பழைய உருவத்தைத் தான் பயன்படுத்த வேண்டும். இதை மீறி, காலம் காலமாக இருந்த தெய்வ உருவத்தை ஒதுக்கிவிட்டு புதிது செய்தால், அரசனுக்கும், ஆட்சிக்கும் மட்டுமல்லாது மக்களுக்கும் பேராபத்து விளையும் என்று தான் ஆகம சாஸ்திரங்களும், சிற்ப சாஸ்திரங்களும், மதம் முதலிய அனைத்து நுால்களும் கூறுகின்றன[3]; ஏனைய சிற்ப சாஸ்திரங்கள் எதுவாகிலும் இதையே வலியுறுத்துகின்றன. இதே கேள்வி, லண்டன் நடராஜர் வழக்கில் லண்டன் நீதிமன்றத்தால் கேட்கப்பட்டது. ஆகமங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, சிறு பின்னங்கள் இருந்தால் சிலைகளை ஒதுக்கினால் ஆபத்து விளையும் என்று, நான் என் சாட்சியத்தில் காட்டியுள்ளேன்[4].

நீதிக்காக எடுத்த முடிவு: “அந்நுால்களை வாங்கிப் பார்த்த லண்டன் மேல் நீதிமன்றம், அதை ஏற்றுக் கொண்டு தம் தீர்ப்பிலும் இதைக் குறிப்பிட்டுள்ளது. இது, நீதிக்காக அங்கு எடுத்த முடிவு. இங்கு யாம் கேட்பதெல்லாம், எந்த சிற்ப சாஸ்திரத்தில் அல்லது அதே போல் எந்த ஆகம சாஸ்திரத்தில், சிறு பின்னம் உடைய உருவத்தை ஒதுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என ஆராய, அறநிலையத் துறை கடமைப்பட்டு உள்ளது. அறநிலையத்துறை ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில், அரசின் தலைமை ஸ்தபதியார், ஆகமம் என்றே ஒரு சாஸ்திரம் கிடையாது; எல்லாம் எங்கள் சிற்ப சாஸ்திரத்தில் உள்ளது என வாதாடினார். அவ்வாறெனில், ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் இவர் அரசின் ஆலோசகராக எவ்வாறு செயலாற்றுகிறார் என்பது தெரியவில்லை[5].

பண்டைய வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை இடிப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் வல்லமை கிடையாது[6]: “அதேபோல், பண்டைய வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை இடிப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் இவருக்கு வல்லமை கிடையாது; புதுக்கட்டடங்கள் கட்டுவதில் மட்டும் இவருக்கு வல்லமை உண்டு. பழம்பெரும் கட்டடங்களை புதுப்பிக்க, புதிய விஞ்ஞான முறைகளை உலக விஞ்ஞானிகள் வகுத்துள்ளனர்; அதற்கான பரிசோதனைக் கூடங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துறையில் வல்லமையும், முறையே பயின்றவர்களையும் தான் அப்பணியில் ஈடுபடுத்த வேண்டுமென நான், நம் சென்னை நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தேன். அதை, கனம் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பித்துள்ளனர். வழிபாட்டில் இருக்கும் சிலைகளை அப்புறப்படுத்துவதும், கல் மண்டபங்களை இடிப்பதும், கோவில்களையே முற்றிலும் இடித்து விடுவதும், அரசுத் துறையே அரைகுறை ஆலோசகர்களை கேட்டு செயல்படுவதும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இது குறித்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி, கோவில்களுக்கு ஏற்பட்டு வரும் அவலநிலையையும், சான்றுகளுடனான படங்களையும் கண்டு மனம் பதறி, ஒருவர் கருத்தை மட்டும் கேளாது பல அறிஞர்களையும் கேட்டு, அரசு ஏன் செயல்படக்கூடாது எனவும், நிலைமை சீராகும் வரை எவ்வித புதுப்பிக்கும் திருப்பணியும் மேற்கொள்ளக் கூடாது எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளார். அரசு, மக்கள் நலனுக்காக மேற்கொள்ளும் பணிகளை, இடைத்தரகர்கள் சீரழித்து விடாது பார்த்துக் கொள்வது அதிகாரிகளின் கடமையன்றோ!,” நாகசாமி இவ்வாறு 2016ல் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

பழனி பாலதண்டாயுதபாணி கோவில் சிலை ஊழல்: 1984-ஆம் ஆண்டில் நீதிபதி சதாசிவம் தலைமையில், மடாதிபதிகள், விஞ்ஞானிகள், ஆகம நிபுணர்கள் அடங்கிய குழுவினர் பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நவபாஷானத்தால் ஆன மூலவர் சிலையை ஆய்வு செய்த பின்பு அளித்த பரிந்துரையின்படியே, இன்றளவும் நாளொன்றுக்கு 6 கால பூஜை மட்டுமே மூலவருக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தொன்மையான உற்சவரின் பழையசிலை அகற்றிவிட்டு புதிய உற்சவர் சிலையை செய்ததற்காக ஸ்தபதி அருணாச்சடேஸ்வரர் என்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவர் இறந்த பின்னர், விதிகளை மீறி 2004-ஆம் ஆண்டு 200 கிலோ எடையில் மேலும் ஒரு புதிய பஞ்சலோக சிலை செய்ய வேண்டும் என்றும், அதில் 10 கிலோ தங்கம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருத்தணி கோயிலில் இருந்து 10 கிலோ தங்கமும் பெறப்பட்டுள்ளது. சிலையை ஆகம விதியையும் மீறி கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்தபதி முத்தையாவுக்கு சொந்தமான ஸ்வர்ணம் என்ற சிற்பக் கலைக் கூடத்தில் உற்சவர் சிலை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதுடன் நிர்ணயிக்கப்பட்ட 200 கிலோவுக்கு பதில் 221 கிலோ எடையில் சிலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், புதியதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை கருத்துப் போனதால் கோயிலின் பூட்டிய இருட்டறையில், பூஜையே செய்யாமல், தன்னந்தனியாக 14 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது.

 2004-2018 – 14 ஆண்டுகளா இருட்டில் இருந்த விக்கிரகம் / சிலை: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலையை பரிசோதனை செய்த தொழில்நுட்ப நிபுணர் குழுவினர், 22 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட அந்த சிலையில் 10 சதவீதம் தங்கம் கூட இல்லை, எள்ளவும் வெள்ளி இல்லை என்றும் சிலை ஐம்பொன்னால் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து சிலை செய்வதற்கு கூடுலாக 12 கிலோ தங்கம் எங்கிருந்து வந்தது? அதற்கான ஆவணங்கள் எங்கே?, ஒரு வேளை சில ஆண்டுகளுக்குப் பின் அதை வெளிநாட்டுக்கு கடத்தும் நோக்கத்தில் செய்யப்பட்டதா? என பல்வேறு கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. உற்சவர் சிலைக்காக பழனி கோயிலில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சிலை செய்வதில் கையாடல் நடந்தது தெரிந்தும் 14 ஆண்டுகளாக கோயிலின் தரப்பில் இருந்து எந்தவொரு புகாரும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து நம்பிக்கை மோசடி செய்து தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தலைமை ஸ்தபதி முத்தையாவை அதிரடியாக கைது செய்துள்ளனர்[7]. இந்த வழக்கில் பழனி கோயில் நிர்வாகி கே.கே.ராஜா என்ற மற்றொருவரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஸ்தபதி முத்தையா மீது ஏற்கெனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்ததாக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது[8].  இதை 2016லேயே நாகசாமி எடுத்துக் காட்டுகிறார். அதாவது, பழைய சிலைக்கு பதிலாக, புதிய சிலை செய்ததில் தான் ஊழல் நடந்தது.

© வேதபிரகாஷ்

15-06-2022


[1]  இதுதான், பிறகு ஊழலாகி மாறி, வழக்குகளில், கைதுகளில் முடிந்துள்ளது.

[2] தினமலர், உயிரோடு ஒன்றிய சிலையை அகற்ற வேண்டாமே,  Updated : பிப் 21, 2016  01:50 |  Added : பிப் 20, 2016  20:24.

[3] எம். முத்தையா ஸ்தபதி, ஆலய நிர்மாண பிம்பலக்ஷண சிற்பநூல், அருள்மிகு கபாளலீஸ்வரர் கோவில், சென்னை, 2003, பக்கம்.161, 260, 289, 278,

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=1461522

[5]  எம். முத்தையா ஸ்தபதி அரசின் தலைமை ஸ்தபதியாக இருந்தார், அந்நேரத்தில் இருந்தாரா, இல்லையா என்று தெரியவில்லை, ஆனால், அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதை, மேலே அடிக்குறிப்பில் கொடுக்கப் பட்டுள்ளது.

[6] டாக்டர் இரா. நாகசாமி, முன்னாள் இயக்குனர், தொல்லியல் துறை (ஓய்வு) –

தினமலர், உயிரோடு ஒன்றிய சிலையை அகற்ற வேண்டாமே,  Updated : பிப் 21, 2016  01:50 |  Added : பிப் 20, 2016  20:24.

[7] தினமணி, பழனி பால தண்டாயுதபாணி கோயில் உற்சவர் சிலை முறைகேடு: தலைமை ஸ்தபதி முத்தையா கைது, By DIN  |   Published On : 25th March 2018 10:02 PM  |   Last Updated : 25th March 2018 10:02 PM.

[8] https://www.dinamani.com/latest-news/2018/mar/25/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2887271.html

இரண்டே நாளில் ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் என்றெல்லாம் அறிவிக்கப் பட்ட சிலை  – வாதிராஜர் ஆனது! (2)

ஜூன் 16, 2022

இரண்டே நாளில் ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் என்றெல்லாம் அறிவிக்கப் பட்ட சிலை  – வாதிராஜர் ஆனது! (2)

சிலைகள் உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளைக்கு சொந்தமானது: 14-06-2022 அன்று சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலைகளில் ஒன்றைப் பற்றி விதவிதமாக செய்திகளை 15-06-2022 அன்று ஊடகங்கள் வெளியிட்டன. அந்நிலையில், சம்பத்தப் பட்ட மடம் என்னவாயிற்று என்று தெளிவு படுத்தியுள்ளது. இரண்டாவ்து சிலை ஶ்ரீவாதிராஜ தீர்த்தர் என்பவருடைது. ஆஞ்சநேயர், வாதிராஜர் சிலைகள், தி.நகர் வாதிராஜ மடத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில், இரண்டு சுவாமி சிலைகள் கிடந்தன. கருங்கல்லாலான இந்த சிலைகளை, பட்டினப்பாக்கம் போலீசார் மீட்டனர். அதில், ஒன்று பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை; மற்றொன்று வாதிராஜர் சிலை.இரண்டையும் மீட்ட போலீசார், காவல்நிலையம் எடுத்து சென்று விசாரிக்கின்றனர். இந்நிலையில், அந்த சிலைகள் உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளைக்கு சொந்தமானது என தெரிய வந்து உள்ளது. தினமலர் மட்டும் தான், இதுவரை, இந்த செய்தியை வெளியிடுள்ளது. இது குறித்து அம்மடத்தினர் தரப்பில் கூறியதாவது:

Sode Mutt, T. Nagar

Sode Mutt, T. Nagar 09-06-2022 function

28 ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள்[1]: “கடந்த 1994ல் நிறுவப்பட்ட இந்த மடம், மூல மடத்தின் பீடாதிபதியால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு பரம்பரை அறங்காவலர் இல்லை. அம்மடத்தில் கோவில் ஒன்றும் உள்ளது. அதில், 28 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநயேர் சிலை, வாதிராஜர் பழைய கற்சிலைகள் இருந்தன. இந்நிலையில், அக்கோவில் கும்பாபிஷேம், 9ம் தேதி நடந்தது.இதில், உடுப்பி சோடே ஸ்ரீ வாதிராஜ மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஸ்வவல்லப தீர்த்த சுவாமிகள் பங்கேற்று நடத்தி வைத்தார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மடத்தின் கோவிலில் ஹயக்ரீவர், பஞ்சமுகி ஆஞ்சநேயர், வாதிராஜர் மற்றும் பூதராஜரின் புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழைய கற்சிலைகள் மென்மையான கற்கள் மற்றும் அரிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. புதிய சிலைகளை பிரதிஷ்டை செய்ததால், பழைய சிலைகளை நமது பாரம்பரியத்தின்படி, இயற்கையான வகையில் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய வேண்டும். எனவே, 12ம் தேதி பட்டினபாக்கம் கடற்கரையில் பழைய கற்சிலைகளை விஜர்சனம் செய்தோம். பட்டினப்பாக்கம் கடற்கரையில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநேயர், வாதிராஜர் கற்சிலைகள் எங்கள் மடத்தைச் சேர்ந்தவை. அதில், திருட்டுச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. அந்த சிலைகளை மீண்டும் மரபுப்படி விசர்ஜனம் செய்ய எங்களிடம் ஒப்படைக்க காவல் துறையை கோர உள்ளோம்,” இவ்வாறு அவர்கள் கூறினர்[2].

Installation Ceremony of Dieties, Sri Hayagriva ,Sri Panchamukhi Anjaneya, Bhavi Sameera Sri Vadiraja Gurusaarvabhoumaru, and Sri Bhootharajaru was performed by Sri Vishwavallabha Thirtha Swamiji ,at newly renovated Sri Hayagriva Vadiraja Mandira, T Nagar Chennai , a unit of Sode Sri Vadiraja Matha, on 8th June. Swamiji also performed Brahmakumbhabhishek to the Deities on 9th June. 2022
Sri Vadiraja Tirth

ஆக, இதனால் அறியப் படுவது என்னவென்றால்: செக்யூலரிஸம் என்றுசொல்லிக் கொண்டு, என்ன வேண்டுமானாலும் எய்யலாம், தப்பித்துக் கொள்ளலாம்.

1. அது வாதிராஜர் சிலைதான், எங்களுடையது, பழையது, விசர்ஜனம் செய்யப் பட்டது: உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளை அறிவித்தது.

2. புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், பழைய சிலைகளை நமது பாரம்பரியத்தின்படி, நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய வேண்டும்…

3. ஜூன் 12ம் தேதி பட்டினபாக்கம் கடற்கரையில் பழைய கற்சிலைகளை விதிகளின் படி விஜர்சனம் செய்தோம் – உடுப்பி மடம்.

4. அந்த சிலைகளை மீண்டும் மரபுப்படி விசர்ஜனம் செய்ய எங்களிடம் ஒப்படைக்க காவல் துறையை கோர உள்ளோம் – உடுப்பி சோடே வாதிராஜ மடம்.

5. அதற்குள் அச்சிலை வீரமாமுனிவர், சித்தர், நாயன்மார், முருகன்….. …என்றெல்லாம் கற்பனையில் ஊடகங்கள் கதை விட ஆரம்பித்தன!

6. அது மட்டுமா, தலைப்புகள் – கடத்தப்பட்ட சிலைகள், கரை ஒதுங்கிய மர்மம் ……கடத்தல் சிலிகள் போலீஸார் விசாரணை………., மணலில் புதைந்து கிடந்த சிலைகள் மீட்பு….

7. ஆக தமிழக ஊடகங்களுக்கு ஒன்று என்றால், அதனை ஒன்பதாக ஊதி பெரிதாக்கி, பொய் என்றாலும் கவலைப் படாமல் செய்தியாக்கும் திறமை உள்ளது!

8. அச்சிலை வீரமாமுனிவர் என்ற போது கூட, எந்த இந்துத்துவ வாதியும் பொங்கவில்லை, ஒருவேளை அந்த அறியப் படாத கிறிஸ்தவ மயக்கத்தில் இருந்தனர் போலும்[3].

9. இந்து மதம், இந்துக்கள் நலன், இவற்றையும் மீறிய ஏதோ ஒன்று ‘இந்துத்துவ வாதி’களைக் கட்டுப் படுத்துகிறதா?

10. ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் என்பதில் உள்ளதும், இந்துத்துவ வாதிகளின் அமைதியும் ஒன்றுதான்! இனி க்ஷீணமான, சேதப் பட்ட சிலை / விக்கிரகத்தை உபயோகப் படுத்தலாமா, கூடாதா என்பதை பார்ப்போம்.

கற்சிலைகளில் ஏற்படும் பிழைகள், தவறுகள், குறைகள், சேதங்கள்: பொதுவாக கற்களில் சிற்பம் செய்யும் போது, சில பிழைகள், தவறுகள், குறைகள் முதலியவற்றால், சேதம் / சேதங்கள் ஏற்படும். சிறந்த கைதேர்ந்த சிற்பி, அதனை / அவற்றை அணிகலன், அலங்கார வேலைப்பாடு, துணி இருப்பது போல, என்று சேர்த்து, மாற்றி வடிவமைத்து, சரிசெய்து விடுவர். கற்களில் உள்ள குறைகளாலும் அத்தகைய பிழைகள், தவறுகள், குறைகள், தேதங்களில் முடிவதுண்டு. அந்நிலையில், அச்சிலைகள் பயன்பாட்டிற்கு ஏற்றுக் கொள்வதில்லை. தூர வைப்பது, புதைப்பது, ஆற்றில் போடுவது என்று அப்புறப்படுத்தி விடுவர். நல்ல சிற்பி செய்யும் போது, கண் திறக்கும் வரை எந்த பிழையும் ஏற்படாது. இப்பொழுது, வியாபார ரீதியில் செய்வதாலும், மிஷின்கள் (machines) பயன்படுத்துவதாலும், கொஞ்சம் கவனம் சிதறினால், தவறினால் குறை ஏற்பnட்டு விடும். இப்பொழுதெல்லாம், குறை ஏற்பட்ட பக்தியை தனியாக செய்து, அடிசிவ் (adhesive) என்கின்ற ரசாயன பசை வைத்து ஒட்டியும் விடுகிறார்கள். ஏமாந்தால், குறைந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். இந்து அறநிலையத் துறையினர், பழைய விக்கிரங்கள் / சிலைகளை மாற்றி புதியதாக வைக்கிறேன் என்று பல கோடி ஊழல்களில் சிக்கியுள்ளதாக செய்திகள், வழக்குகள் உள்ளன.

விக்கிரகம், சிலை மாற்றங்களுக்கு / மாறுதலுக்கு உபயோகப் படுத்துவதை தடுக்க வேண்டும்: ஒருவேளை இத்தகைய பின்னப் பட்ட, சேதப் பட்ட, க்ஷீணப்பட்ட சிலைகள், விக்கிரங்கள் முதலியவற்றை மாற்றும் பின்னணியில், சிலை கடத்தல் போன்றவை இருப்பதால், போலீஸார் ‘அலர்ட்’ ஆகி விட்டனர் போலும். ஊடகக் காரர்களும் உசுப்பேற்றி விட்ட மயக்கத்தில் உச்சத்தில் சென்று செய்திகளை போட்டு விட்டனர் போலும். இப்பொழுது, ‘புஷ்’ என்று ஆகி விட்டாலும், நாளைக்கு மற்றவற்றிற்கும், இதே லாஜிக்கை (modus operandi) போல குற்றங்களுக்குப் பயன்படுத்தலாம். கடத்தல், கடல் தாண்டிய குற்றங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அவ்வாறு செய்து, மாற்றி வைப்பது (duplicates / போலிகள் தயாரிப்பது) வெளியாகுமே என்றும் அச்சப் படலாம். இந்த நவீன காலத்தில், எல்லாமே நல்லதிற்கும் உபயோகப் படுத்தலாம், கட்டடற்கும் பயன்படுத்தலாம். ஒழுக்கம், நாணயம், நியாயம், தர்மம் எல்லாம் சும்மா பேசிக் கொண்டு, பணத்திற்காக வேலை செய்து கொண்டு இருந்தால், கோவில், என்றெல்லாம் பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை எனலாம். இரட்டை வேடம் போடுபவர்கள் நிச்சயமாக ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள்.

© வேதபிரகாஷ்

15-06-2022


[1] தினமலர், கடற்கரையில் மீட்கப்பட்டசிலைகள் அடையாளம் தெரிந்தது, Added : ஜூன் 15, 2022  22:58; https://www.dinamalar.com/news_detail.asp?id=3054113

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3054113

[3]  கலெக்டர் கவிதா, ஸ்டாலினுக்கு “அறியப் படாத கிறிஸ்தவம் – தமிழ்நாட்டில் ஒரு வரலாற்று தேடல்,” என்ற புத்தகத்தைக் கொடுத்ததால், இந்து அமைப்பினர், அவருக்கு, “இந்துமதம் பதில் சொல்கிறது,” என்ற புத்தகத்தைக் கொடுத்ததாக, பேஸ்புகில் பதிவுகள் போட்டனர். ஆனால், வேடிக்கை என்னவென்றால், நிவேதிதா லூயி என்ற அடிப்படைவாத கிறிஸ்தவ பெண் எழுதிய அப்புத்தகத்தை வெளியிட்டதே, “கிழக்குப் பதிப்பகம்” தான். அதனுடன் சம்பந்தப் பட்டவர்களும் இந்துத்துவவாதிகள் தான்.

கனடா சிலையுடைப்புகள், காலனிய-அடிமைப் போக்கை எதிர்க்கும் நிலை மற்ற முந்தைய காலனி நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை என்ன?

ஜூலை 5, 2021

கனடா சிலையுடைப்புகள், காலனிய-அடிமைப்போக்கை எதிர்க்கும் நிலை மற்ற முந்தைய காலனி நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை என்ன?

ஐயோப்பிய காலனித்துவத்தால் உலக மக்கள் பாதிக்கப் பட்டது: ஐரோப்பிய காலனிய அடக்குமுறை, யதேச்சதிகார,, பொருளாதாரா சுரண்டல்-கொள்ளை, அடிமை வியாபாரம், மலிவான வேலையாட்கள், கூலித் தொழில், என்றெல்லாம் வைத்து ஆப்பிட்ரிக்க, ஆசிய, அமெரிக்க மக்களை சதாய்த்து வந்தது. டச்சு, டேனிஸ், போர்ச்சுகீசிய, பிரெரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் என்று அனைவரும், ஒவ்வொரு வகையில் கொள்ளையடித்தனர். பல நேரங்களில், அவர்கள் ஒத்துழைத்து கொள்ளை அடித்தனர். குறிப்பாக, பண்ணைத் தொழில், தொழிற்சாலைகளுக்கு, அடிமைமைகளை விற்பதில் அவர்களுக்குள் இருந்த பரஸ்பர வியாபார உறவுகள், நிறவெறுத்துவ சித்தாந்தங்கள் முதலியவற்றைப் புரிந்து கொள்ளலாம். ஆப்பிரிக்க “அபார்த்யிட்” என்கின்ற பிரித்து வைத்து வாழவைத்த நகரங்கள், கிராமங்கள் வெள்ளையர்களின் நிறவெறித்துவ அடக்குமுறையின் உச்சத்தின் உதஆணம் ஆகும். அமெரிக்காவிலும் சொல்லொணா கொடுமைகளை, குரூரங்களை அரங்கேற்றியுள்ளனர். அஸ்டெம், மாயா மற்றும் இன்கா போன்ற உயர்ந்த நாகரிகங்களை, அம்மக்களை, அவர்களது கலாச்சார-சரித்திர சின்னங்கள், ஆதாரங்கள் முதலியவற்றை அடியோடு அழித்துள்ளனர். ஆசிய நாடுகளிலும், அவர்களது குரூர-கொடுமைகள் அதிகமே. இந்தியா போன்ற நாடுகள் இன்றும் அனுபவித்து வருகின்றன.

18ம் நூற்றாண்டிலும் அடிமை வியாபாரம் நடந்த நிலை: ஏப்ரல் 13, 1709 அன்று ஜேக்கஸ் ரௌடட் (Jacques Raudot), பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவன் அடிமை வியாபாரத்தை நியாயப் படுத்தினான். இந்தியர்களின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை அழித்து, அவர்களது பழங்காலத்தை மறக்க ஐரோப்பியர் முயன்றனர். இக்காலத்தவரையும் முழுமையாக மாற்ற, பள்ளிகளிகளேயே இருந்து படிக்கும் முறையை உண்டாக்கி, ஆயிரக் கணக்கான இந்திய சிறுவர்-சிறுமியர்களை அடைத்து வைத்தனர். முடிந்த வரையில் தமது போதனைகளால். அவர்களை மாற்ற முயன்றனர். பிறகு மதம் மாற்றாம் மூலம் பழமையை மறக்க வைத்தனர். இவற்றிற்கும் மீறி, முடியாத குழந்தைகளை சரியாக உணவு கொடுக்காமல் இருப்பது, உடல் அசுகரியம் ஏற்பட்டால், முறையாக சிகிச்சை கொடுக்காமல் இறக்க வைப்பது போன்ற கொடூர முறைகளையும் பின்பற்றினர். இத்தகைய குரூரக் கொடுமைகள் வெளிவந்த நிலையில் அப்பள்ளிகள் மூடப் பட்டன. இருப்பினும், இப்பொழுது, நூற்றுக்கணக்கான குழந்தைகள் புதைக்கப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டதால், நிலைமை மோசமாகியுள்ளது.

கனடா ஆங்கிலேய காலனிய அடக்குமுறைகளில் கொடுமைப் படுத்தப் பட்டது: கனாடா தொடக்கத்தில் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தாலும், 15ம் நூற்றாண்டின் இறுதியில் நாட்டிற்குள் நுழைந்த ஐரோப்பியர்கள் 1763ல் கனடாவை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 1763களிலிருந்து பிரிட்டன் கனடாவை ஆண்டு வந்தது. இந்த காலகட்டத்தில் உண்டு உறைவிட பள்ளிகள் கத்தோலிக்க கிருத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்டது. இப்பள்ளிகளில் வலுக்கட்டாயமாக 1,50,000க்கும் அதிகமான கனடா பூர்வீகக்குடிகளின் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். குழந்தைப் பருவத்திலிருந்தே, அவர்கள் தங்களது மூலங்களை அடியோடு மறக்க, அத்தகைய கல்விமுறையைக் கையாண்டார்கள். ஐரோப்பியர்களின் வருகைக்கு கனடாவின் பூர்வீகக்குடிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து பள்ளியில் குழந்தைகள் சேர்க்கை அமல்படுத்தப்பட்டது. அதாவது, காலனிய ஆதிக்கத்தை முழுமையாக ஸ்திரப் படுத்த அத்தகைய மனோதத்துவ மற்றுமதூடல் ரீதியிலான தாக்குதல்கள், அடக்குமுறைகள் முதலியவற்றையும் பிரயோகித்தார்கள். இதற்கு இணங்காத பெற்றோர்கள் சிறைசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் 1982ல் கனடா தனி நாடாக உருவானது. ஆனாலும், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கனடாவின் ராணியாக தொடர்கிறார். இது “காமன்வெல்த்” என்ற போர்வையிலும் செயல்பட்டு வருகின்றது.

குழந்தைகளின் சடலங்கள் கண்டு பிடிக்கப் பட்டதால், கன மக்கள் கொதித்து போயிருக்கிறாற்கள்: கனடாவில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகின்றன. இந்த உண்டு உறைவிட பள்ளிகளில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாகவும், 6,000க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் தற்போது வரலாற்று ஆய்வாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்படியான சூழலில், கனடாவின் பழங்குடியின அமைப்பு சார்பில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள காம்லூப்ஸ் உண்டு உறைவிட பள்ளியில் ரேடார் உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று கனடா பழங்குடியின அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், அடிப்படைவாதியான, கத்தோலிக்க மதத் தலைமை, அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை, வெறுமனே வருத்தப் படுவதாகக் கூறியது.

ஜூன் 21 முதல் 26 வரை நான்கு சர்ச்சுகள் எரிக்கப் படுதல்: மேற்கு கனடாவில் 26-06-2021 அன்று சனிக்கிழமை அதிகாலை மேலும் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் (St Ann’s Church and Chopaka Church ) தீப்பற்றி எரிந்துள்ளன[1]. செயின்ட் ஆன் மற்றும் சோப்கா சர்ச் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் உள்ளவை[2]. பிரிட்டிஷ் கொலம்பியாவில் செயின்ட் ஆன் தேவாலயம் மற்றும் சோபகா தேவாலயத்தில் சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது[3]. இரண்டு தேவாலயங்களும் முற்றிலுமாக சேதமடைந்துள்ள நிலையில் இந்த தீவிபத்து சந்தேகத்திற்குரியவை என அதிகாரிகள் தெரிவித்தனர்[4]. கடந்த திங்கட்கிழமை 21-06-2021 அன்று தேசிய பழங்குடி மக்கள் தினம் அனுஸ்டிக்கப் பட்டபோது மாகாணத்தில் உள்ள இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் (the Sacred Heart church, the St Gregory’s church) தீக்கிரையாக்கப்பட்டன[5]. தூய இருதய சர்ச்சும், செயின்ட் ஜார்ஜ் சர்ச்சும் அம்மக்கள் வாழும் இடங்களில் இருக்கின்றவை[6]. எனவே முந்தைய தீ விபத்து மற்றும் புதிய தீ விபத்து பற்றிய விசாரணைகள் எந்தவொரு கைதுகளும் குற்றச்சாட்டுகளும் இன்றி நடந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிள்ளனர். இவ்விசயத்தில், மேலும் கலவரத்தை உண்டாக்க அரசு விரும்பவில்லை.

ஜூலை 1 கனடா தினத்தன்று எழுச்சி ஏற்பட்டது: இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கனடாவின் தேசிய தினத்தையொட்டி, உண்டு உறைவிட பள்ளிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும், பழங்குடி சமூகங்களுக்கான ஆதரவை திரட்டுவதற்காகவும் மானிட்டோபா தலைநகர் வின்னிபெக்கில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலமாகச் சென்ற அவர்கள், சட்டமன்ற வளாகத்தில் விக்டோரியா மகாராணியின் முக்கிய சிலையை தகர்த்து கீழே தள்ளினர்[7]. இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது[8].   பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பட்டதால், ஜூலை 1, கனடா தினத்தன்று தேசிய கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஏற்கனவே வலியுறுத்தினர்[9]. இதனால் கனடா முழுவதிலும் உள்ள நகராட்சிகள் கொண்டாட்டங்களை ரத்து செய்தன[10].  போராட்டங்களின்போது, பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளுடன் தொடர்புடைய நபர்களின் சிலைகள் அழிக்கப்பட்டன. சில சிலைகள் அகற்றப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் எதிர்வினையும், அறிக்கைகளும், அதிகாரஆணவ தோரணைகளைத்தான் வெளிப் படுத்துகின்றன: சிலை தகர்ப்பு சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது[11]. மேலும், தாங்கள் கனட பழங்குடியினருக்கு ஆதரவாக இருப்பதாகவும், இந்த சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பிரிட்டனின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[12]. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், விக்டோரியா மகாராணி சிலையையும், இளவரசி இரண்டாம் எலிசெபத் சிலையையும் அவர்கள் தகர்த்தெறிந்தது மட்டுமல்லாமல், அவற்றின் மீது சிவப்பு வர்ணம் பூசி அவமதித்தனர்[13]. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எங்கள் அரச குடும்பத்தினர் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றார்[14]. சிலை தகர்ப்பு சம்பவத்திற்கு பிரிட்டன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எங்கள் அரச குடும்பத்தினர் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றது, போப்பை விட, ஆணவ-அகம்பாவ போக்கைக் காட்டுகிறது. எதிர்வினையும், அறிக்கைகளும், அதிகார-ஆணவ தோரணைகளைத்தான் வெளிப் படுத்துகின்றன.

இந்தியாவில் காலனிய போக்கு, கூலிமனோபாவம், அடிமைத்துவம் செயல்படும் முறை: இதன் படிப்பினைகளை மற்ற நாடுகள் எப்படி புரிந்து கொள்ளும் என்று கவனிக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரையில், இப்பொழுது நிர்வாகப் படுத்தப் பட்டுள்ள படிப்புமுறையே,  மெக்காலே திட்டத்தின் மூலம், “வெள்ளை காலர்”  மெத்தப் படித்த கூலிகளை கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கியுள்ளது.  அரசில்வாதிகளுக், கட்சிகளும் ஐரோப்பிய அரசியல் சித்தாந்தங்களைப் பின்பற்றுவதால், மறைமுகமாக, மக்களை அடக்கியாளும் முறைகள் கையாளப் படுகின்றன. ஐரோப்பிய சின்னங்கள், ஆங்கிலேயர் சிலைகள், அடிமைத்தள சித்தாந்தங்கள், இன்னும் வேலைசெய்து கொண்டிருக்கின்றன. புதிய சிலைகள் நிறுவப் பட்டு வருகின்றன. அவையும், அடக்குமுறைகளை எதிர்ப்பது, புத்துலகத்தைப் படைப்பது போன்ற கவர்ச்சி முழக்கங்களுடன் அவைகள் வைக்கப் பட்டாலும், அதேஅடிமைபாங்கைத்தான் வளர்த்து வருகிறார்கள். சிலைகள் மோதப்படுகின்றன. காலனிய ஆதிக்க சக்திகளை எதிர்க்காமல், தமக்குள்  சண்டையிட்டுக் கொண்டு வருகிறார்கள். இத்தகைய பிரிவினைகள் நிறவெறுத்துவம் பதிலாக, ஜாதித்துவம் உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது. எதை எதிர்ப்பது போல காட்டிக் கொள்கிறார்களோ, அதை ஆதரித்து பொருளாதார சுரண்டல்களை பக்குவமாக செய்து வருகிறனர்.

© வேதபிரகாஷ்

06-07-2021


[1] The Guardian, Canada: two more Catholic churches on First Nations reserves destroyed by fire,  Leyland Cecco in Toronto, Mon 28 Jun 2021 16.48 BST.

[2] https://www.theguardian.com/world/2021/jun/28/canada-catholic-churches-fires

[3] [3] The Independent,  More churches burn down on indigenous Canadian land ‘The investigations into the previous fires and these two new fires are ongoing with no arrests or charges,’ say Canadian police, Sean Russell, @SAntoniRussell, 28-06-2021.

[4]https://www.independent.co.uk/news/world/americas/churches-burn-down-canada-indigenous-b1873706.html

[5] The Guardian, Two Catholic churches destroyed by fire on First Nations reserves in Canada, Leyland Cecco in Toronto, Tue 22 Jun 2021 19.59 BST.

[6]  https://www.theguardian.com/world/2021/jun/22/canada-church-fires-first-nation-reserves

[7] பிரிட்டன்.தமிழ்.காம், கனடாவில் விக்டோரியா மகாராணி, இரண்டாம் எலிசெபத் சிலை அவமதிப்பு,  July 2, 2021; https://www.britaintamil.com/victoria/

[8] https://www.britaintamil.com/victoria/

[9] மாலைமலர், கனடாவில் விக்டோரியா மகாராணியின் சிலை தகர்ப்பு, பதிவு: ஜூலை 02, 2021 16:58 IST.

[10] https://www.maalaimalar.com/news/world/2021/07/02165850/2783022/Queen-Victoria-statue-torn-down-at-Canada-protest.vpf

[11] நியூஸ்.7.தமிழ், கனடாவில் விக்டோரிய மகாராணியின் சிலை தகர்ப்பு, by Karthick, July 3, 2021.

[12] https://news7tamil.live/statues-of-queen-victoria-and-queen-elizabeth-ii-torn-down-in-canada.html

[13] பிரிட்டன்.தமிழ்.காம், கனடாவில் விக்டோரியா மகாராணி, இரண்டாம் எலிசெபத் சிலை அவமதிப்பு,  July 4, 2021

[14]https://www.britaintamil.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/