Posts Tagged ‘மின் தடை’

2023 மிக்ஜாம் புயல் 2015ஐ மீறி சென்னை மக்களை பாதித்தது – விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் ஏன் பாடம் கற்க முடியவில்லை? (2)

திசெம்பர் 7, 2023

2023 மிக்ஜாம் புயல் 2015 மீறி சென்னை மக்களை பாதித்ததுவிஞ்ஞானம்தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் ஏன் பாடம் கற்க முடியவில்லை? (2)

அதிக விலைக்கு விற்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப் படும்: சென்னையில் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்[1]. அதிகளவு பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்[2]. ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்[3]. ஆவின் பாலின் தேவை 4 மடங்கு அதிகரித்துள்ளது[4]. சென்னையில் வழக்கமாக 15 லட்சம் லிட்டர் பால் தேவை இருக்கும் நிலையில் தற்போது 60 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது[5]. இருப்பினும் ஆவின் பால் விநியோகத்தை சீராக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பால் அனுப்பி வைக்கப்படுகிறது[6]. ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பில் உள்ளது. ஆவின் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு தடையின்றி விற்பனை செய்ய வேண்டும். பால் சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். அதேபோல் ஆவின் முகவர்கள், விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பால் விநியோகம் பாதிப்பு பற்றி அரசு அதிகாரிகளின் விளக்கம்: இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறும்போது, “அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் மழைநீர் பாதிப்பு ஏற்பட்டது. இதுதவிர, மழையால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால், பால் விநியோகம் பாதித்தது. புதன்கிழமை ஆவின்பால் விநியோகம் சீராகிவிடும்” என்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டிப் போட்ட, ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ஒரு லிட்டர் பால், 200 ரூபாய்; குடிநீர் கேன், 250 ரூபாய்; படகில் மீட்க, 2,500 ரூபாய். வெள்ளக்காடாக கிடக்கும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் நிலவரம் இதுதான். வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு, ஒரு வேளை உணவு கிடைப்பது கூட அரிதாகிப் போன நிலையில், நிவாரணம் என்ற பெயரில் போட்டோவுக்கு மட்டும், ‘போஸ்’ கொடுக்கும் அரசியல் மற்றும் சுய விளம்பரப் பிரமுகர்களால், மீட்புப்பணிகள் தாமதமாகி வருகின்றன.

மழைநீர் நிற்குமிடங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு: வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், முடிச்சூர் உட்பட பல பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை, வெள்ளம் புகுந்துள்ளது. தரை தளத்தில் வசிப்போர், மேல் தளங்களில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். புயல் முன்னெச்சரிக்கையாக, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், இரண்டு நாட்களுக்கு தேவையான குடிநீர், அரிசி, காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்திருந்தனர். தற்போது, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். வெள்ள நீர் வடியாததால், வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை. இதனால், பால், குடிநீர், காய்கறிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாலுக்கு மக்கள், மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் பரிதாப நிலை காணப்படுகிறது. ஆனால், வழக்கம்போல் பால் வினியோகம் நடப்பதாக, ஆவின் தரப்பிலும் அதன் அமைச்சராலும் சொல்லப்படுகிறது.

சேவை செய்கிறோம் என்று விளம்பரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் முதலியோர்: கள நிலவரமே தெரியாமல் அதிகாரிகளும், அமைச்சர்களும் இருப்பதாக, பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரு பக்கம், அரசியல்வாதிகள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பால் பாக்கெட்டுகளை முகவர்களிடம் மொத்தமாக வாங்கிக் கொள்கின்றனர். இதனால், வீடுகளுக்கு பால் கிடைக்கவில்லை. இவர்கள் பெரும்பாலும் விளம்பரத்திற்காக சேவை செய்வடு போலவே தெரிகிறது. ஏனெனில் கொடுக்கும்பொழுது செல்வி எடுத்துக் கொள்வது, போட்டோ-வீடியோ எடுப்பது, பேட்டி காண்பது போன்றவையும் சேர்ந்துள்ளது. குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பால் வினியோகம் முற்றிலும் தடையாகி உள்ளது. ஆவின் மட்டுமின்றி, தனியார் பால் பாக்கெட்டுகளும் கிடைக்காததால், விலை தாறுமாறாக ஏறி விட்டது[7]. ஒரு லிட்டர் பால், 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது[8].

பாலைத் தொடர்ந்து, குடிநீர் விலையும் ஏறிவிட்டது: அதேபோல், குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது[9]. மழைக்கு முன்பு, 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட, 25 லிட்டர் குடிநீர் கேன், 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது[10]. காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பல கடைகளில் தண்ணீர் புகுந்ததால், பொருட்கள் சேதமடைந்துள்ளன. இன்னமும் முழு அளவில் கடைகள் திறக்கப்படவில்லை. ஒன்றிரண்டு கடைகள் திறந்திருக்கும் நிலையில், பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. இதனால், அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நடந்து செல்ல முடியாத பகுதிகளுக்கு, படகுகள் வழியாக சென்று, உணவு பொட்டலங்கள் வழங்குவது, வெளியில் வர விரும்புவோரை அழைத்து சென்று, நிவாரண முகாம்களில் தங்க வைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், முப்படை வீரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், அவர்கள் செல்லாத பகுதிகளுக்கு, சிலர் தனிப்பட்ட முறையில் படகுகளை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் ஒரு குடும்பத்தை மீட்க, 2,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

அதிகமாக வாங்கி வைக்க வேண்டாம் என்று அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை: பேரிடா் காலத்தைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருள்களைக் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா எச்சரித்தார்[11]. இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது[12]: “அத்தியாவசியப் பொருள்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். பால் விநியோகத்தைப் பொருத்தவரை சென்னையில் 19 லட்சம் லிட்டா் வழக்கமாக விநியோகிக்கப்படும்[13]. புதன்கிழமை 14 லட்சம் லிட்டா் வழங்கப்பட்டது. வியாழக்கிழமைமுதல் இயல்பான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்படும்[14]. 8 மாவட்டங்களிலிருந்து 6,650 கிலோ பால் பவுடா் விநியோகிக்கப்படுகிறது. 50 ஆயிரம் குடிநீா் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. சென்னை குடிநீா் வாரியம் மூலம் 15 ஆயிரம் 20 லிட்டா் கேன்கள் தயாரித்து விநியோகிக்கப்படுகிறது. 34,000 ரொட்டி பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. வியாழக்கிழமை 50,000 ரொட்டி பாக்கெட்டுகள் பெங்களூரிலிருந்து வரவழைக்கப்படும். தேவைக்கு மேல் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்கள் வாங்கி வைக்க வேண்டாம்[15]. குடிநீா், பால் விநியோகத்தில் தேவைக்கும், கையிருப்புக்கும் இடையே அதிக இடைவெளி உள்ளது[16]. வியாபாரிகள் குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டாம்[17]. அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கக் கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.[18]

© வேதபிரகாஷ்

07-12-2023


[1] நக்கீரன், பதற்றமடைந்து அதிக பால் பாக்கெட்டுகளை வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்‘ – அமைச்சர் வேண்டுகோள், நக்கீரன் செய்திப்பிரிவு  Photographer, Published on 06/12/2023 | Edited on 06/12/2023.

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/people-should-not-panic-and-buy-more-milk-packets-and-stock-minister-mano

[3] தினகரன், சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல், December 7, 2023, 4:51 am

[4] https://www.dinakaran.com/special-attention-avin-milk-powder-minister-mano-thangaraj/

[5] தமிழ்.ஒன்.இந்தியா, வெள்ளத்தில் கிடைத்தவரை லாபம் .. பாலுக்கு கூடுதல் விலை.. நடவடிக்கை பாயும்.. மனோ தங்கராஜ் வார்னிங், By Jeyalakshmi C, Published: Wednesday, December 6, 2023, 10:56 [IST].

[6] https://tamil.oneindia.com/news/chennai/minister-mano-thangaraj-warns-of-strict-action-if-milk-is-sold-at-a-higher-price-563515.html

[7] தினமலர், ஒரு லிட்டர் பால், 200 ரூபாய்; குடிநீர் கேன், 250 ரூபாய்; படகில் மீட்க, 2,500 ரூபாய். மாற்றம் செய்த நாள்: டிச 06,2023 23:38

[8] https://m.dinamalar.com/detail.php?id=3497645

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கேன் தண்ணீர் ரூ. 200… அரை லிட்டர் பால் ரூ. 100; ஆத்திரம் அடைந்த செம்மஞ்சேரி பொதுமக்கள் சாலை மறியல், WebDesk, Dec 07, 2023 04:31 IST.

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/floods-affected-semmancheri-people-road-block-protest-need-basic-facilities-1812977

[11] தினமணி, கூடுதல் விலைக்கு பொருள்கள்:தலைமைச் செயலா் எச்சரிக்கை, By DIN  |   Published On : 07th December 2023 01:09 AM  |   Last Updated : 07th December 2023 01:09 AM

[12] https://www.dinamani.com/tamilnadu/2023/dec/07/chief-secretary-warns-of-additional-cost-of-goods-4118299.html

[13] எக்ஸ்சாம்.டெய்லி, பால், தண்ணீர் பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கைமுக்கிய எச்சரிக்கை!!, By Sivarangani -December 6, 2023.

[14] https://tamil.examsdaily.in/strict-action-to-take-if-milk-and-water-bottle-sale-in-extra-amount-in-tamilnadu/

[15] தமிழ்.நியூஸ்.18, அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை” – தலைமைச் செயலர் எச்சரிக்கை, LAST UPDATED : DECEMBER 6, 2023, 3:00 PM IST.

[16] https://tamil.news18.com/tamil-nadu/strict-action-if-essential-commodities-are-sold-at-higher-prices-1259931.html

[17] நியூஸ்.7.தமிழ், ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!, by Web Editor, December 5, 2023

[18] https://news7tamil.live/aavinpal-will-be-given-free-tomorrow-too-chief-secretary-shivdas-meena-information.html

2023 மிக்ஜாம் புயல் 2015ஐ மீறி சென்னை மக்களை பாதித்தது – விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் இந்நிலை ஏன்? (1)

திசெம்பர் 7, 2023

2023 மிக்ஜாம் புயல் 2015 மீறி சென்னை மக்களை பாதித்ததுவிஞ்ஞானம்தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் இந்நிலை ஏன்? (1)

05-12-2023 மற்றும் 06-12-2023 நாட்களில் சென்னை மக்களின் அவதி: சென்னைவாசிகளுக்கு மழை, பெரும்-மழை, சூறாவளி, சூறைக்காற்று, வெள்ளம், சாலைகளில் தண்ணீர் தேங்குவது-ஓடுவது; ஏரிகளைத் திறந்து விடுவதால் வெள்ளம் புகுவது, தாழ்வான இடங்களில் வெள்ளம் பாய்வது, வீடுகளில் நீர் வருவது-தேங்குவது, மின்சாரம் துண்டிப்பு, என்பனவெல்லாம் புதியதல்ல. 1950-60களிலிருந்து கவனித்து வருவர்களுக்கு நன்றாகத் தெரிந்த விசயம் தான். ஆனால், 2015ற்குப் பிறகும், அதே நிலை அல்லது அதை விட மோசமான நிலை தொடர்வது திகைப்பாக உள்ளது. இப்பொழுது டிசம்பர் 2023ல் தொடர்மழை காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய தேவையான ஆவின்பால் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டனர்[1]. மேலும், சில இடங்களில் அதிக விலைக்கு பழைய பால் பாக்கெட்டுகளை வாங்கி செல்லும் நிலையும் ஏற்பட்டது[2]. இப்படி கொஞ்சம்-கொஞ்சமாக செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. துரதிருஷ்டவசமாக, இம்முறை ஊடகங்களே விவரங்களை மறைப்பது வேதனையாக உள்ளது. ஏனெனில், இதனால், கஷ்டப் பட்ட, தொடர்ந்து சொல்லொனா இன்னல்களை அனுபவித்து வரும்பொது மக்களின் நிலை, அவர்களது இழப்பு மாறப் போவதில்லை.

05-12-2023 மற்றும் 06-12-2023 நாட்களில் ஆவின் பால் விநோகம் இலாமல் இருந்தது: `மிக்ஜாம்’ புயல் காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 முதல் 5 அடிகள் வரை மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வாக உள்ள வீடுகளில் நீர் புகுந்துள்ளது. மழைநீர் வடியாத நிலையில், பல இடங்களில் போக்குவரத்து முடங்கி, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் கடும்அவதிப்பட்டனர். குறிப்பாக, குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெரும் இன்னலை சந்தித்தனர். சென்னையில் வியாசர்பாடி, எம்கேபி நகர்பகுதி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, செனாய்நகர், கோயம்பேடு, அம்பத்தூர், மயிலாப்பூர் உட்படபல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. இங்கு பழைய மாம்பலம் ஏன் விடுபட்டது என்று தெரியவில்லை. சென்னையில் ஆவின் பாலைபொருத்தவரை 14.75 லட்சம் லிட்டர் பால் தினசரி விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தொடர்மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்களில் 05-12-2023 அன்று காலையில் பால் விநியோகம் மிகக்குறைவாகவே இருந்தது.

ரேஷன் முறையில் ஆவின் பால் விற்கப்பட்ட நிலை: சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் சாலை முழுதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது[3]. பல சுரங்கபாதைகளில் நீர் நிரம்பியதால் மூடப் பட்டன. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே போக்குவரத்து தடைபட்டுள்ள காணத்தால் சென்னை முழுதும் பால் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிகிறது[4]. ஒரு சில இடங்களில் மட்டுமே பால் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பாலை வாங்க பொதுமக்கள் நெடுந்தொலைவு வரை வரிசையில் காத்திருந்தனர். ஆவின் பால் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட் விநியோகமும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறும்போது, “ஆவின் பால் மட்டுமின்றி தனியார் பால் பாக்கெட்டும் கிடைக்கவில்லை. சில இடங்களில் அதிக விலைக்கு பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பால், பழைய பாக்கெட் என்பதால், திரிந்து கெட்டுப்போனது. எனவே, அத்தியா வசிய தேவையான பாலை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்த ஆய்வு: ஒரு பக்கம் இவ்வாறு இர்க்கும்நிலையில், தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார் என்ற செய்திகளும் வந்துள்ளன. சிலபால் பூத்துகளுக்குச் சென்றார். பார்வையிட்டார், என்றெல்லாம் செய்திகள் உள்ளன. இருப்பினும், அவர் என்ன, எத்தகைய ஆய்வு செய்தார் என்று தெரியவில்லை பால் விநியோகம் பாதிக்கப்பட்டதற்கு அமைச்ச்சரும் அதிகாரிகளும் பல காரணங்களைக் கூறினர்.

  1. ஆவின் தொழிற்சாலைகளில் வேலையாட்கள் குறைவாக வேலை செய்தனர். அதாவது, மழை என்பதால் வரமுடியவில்லை.
  2. பால் விநியோக வண்டிகள் சாலைகளில் செல்ல முடியவில்லை. சாலை குண்டு-குழி, நீர் தேக்கம், ஒரு இடத்தில் வண்டி கவிழ்ந்தது முதலியன.
  3. சப்ளை-டிமான்ட் பிரச்சினை – அம்பத்தூர்-சோழிங்க நல்லூர்-மாதவரம் தொழிற்சாலைகளிலிருந்து உற்பத்தி, விநியோகம் குறைந்தது;
  4. குறிப்பாக அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது
  5. அதிக விலைக்கு டிப்போ-காரர்கள், கடைக்காரர்கள் விற்றது;
  6. மக்கள் அதிகமாக வாங்கி வைத்துக் கொண்டது….

 தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்: ஆவின் பால் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்[5]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத மழையால் பால் உற்பத்தியிலும், விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது[6]. குறிப்பாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்த நிலையில் வாகன போக்குவரத்து மிகப்பெரிய சவாலாக இருந்தது[7]. சென்னை மாநகரை பொறுத்தவரையில் வெளி மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு சென்னை அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது[8]. தனியார் பால் நிறுவனங்களை பொறுத்த வரையில் அவர்களும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பால் கொண்டு வருவது வழக்கம்[9]. சென்னை பெருநகர் பகுதியில் கால்நடை இல்லாத காரணத்தால் பால் உற்பத்தி செய்யப்படுவதில்லை[10]. இந்த சூழ்நிலையில் தான் 2 நாட்கள் ஆவின், தனியார் பால் விநியோகஸ்தர்கள் கூட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பால் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிட்டது[11]. அதிலும் குறிப்பாக அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது[12]. அதனால் போர்கால நடவடிக்கை மேற்கொண்டு பால் விநியோகத்தை சீரமைத்து தற்போது ஓரளவுக்கு பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பால் தேவையில் இடைவெளி ஏற்படாமல் தவிர்ப்பதற்கு பால் பவுடர் விநியோகமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் பொதுமக்கள் பால் தொடர்ந்து கிடைக்காதோ என்ற அச்சத்தில் அதிகமான பால் வாங்கும் நிலை உள்ளது. அதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

07-12-2023


[1] தமிழ்.இந்து, தொடர்மழை எதிரொலியால் விநியோகம் பாதிப்பு: சென்னையில் பால் கிடைக்காமல் மக்கள் அவதி, Published : 06 Dec 2023 07:42 AM; Last Updated : 06 Dec 2023 07:42 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1163807-people-are-suffering-due-to-lack-of-milk-in-chennai.html

[3] தினமலர், பால் விநியோகம் முடங்கியது, மாற்றம் செய்த நாள்: டிச 05,2023 06:29

[4] https://m.dinamalar.com/detail.php?id=3496673

[5] தினத்தந்தி, ஆவின் பால் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது ஏன்..? அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம், டிசம்பர் 6, 11:26 pm.

[6] https://www.dailythanthi.com/News/State/why-was-there-difficulty-in-distributing-milk-minister-mano-thangaraj-explained-1085101

[7] சமயம்,  நிலைமை சீராயிடுச்சு.. நாளை முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடையும் இருக்காது.. மனோ தங்கராஜ் சொன்ன குட் நியூஸ்!,  Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 6 Dec 2023, 4:48 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/state-news/minister-mano-thangaraj-says-situation-stabilized-and-there-will-be-no-interruption-in-aavin-milk-supply-from-tomorrow/articleshow/105784396.cms

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Avian milk : பதற்றமடைந்து தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்மனோ தங்கராஜ், Ajmal Khan, First Published Dec 6, 2023, 8:51 AM IST; Last Updated Dec 6, 2023, 8:51 AM IST

[10] https://tamil.asianetnews.com/tamilnadu/mano-thangaraj-requested-that-the-public-should-not-buy-too-much-milk-and-stock-up-kak-s586o8

[11] தமிழ்.ஏபிபி.லைவ், Aavin Milk: நிறுத்தப்பட்ட உற்பத்தி.. இரண்டாவது நாளாக முடங்கியது ஆவின் பால் விநியோகம்! காரணம் என்ன..?, By: முகேஷ் | Updated at : 06 Dec 2023 01:01 PM (IST), Published at : 06 Dec 2023 01:01 PM (IST)

[12] https://tamil.abplive.com/news/chennai/there-has-been-severe-shortage-of-milk-in-chennai-and-its-surrounding-areas-for-more-than-2-days-due-to-cyclone-michuang-154322

மழை, பெரும்மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மா-பள்ளம் பிரச்சினை என்ன? நீர் தேங்குவது ஏன்? (2)

திசெம்பர் 2, 2023

மழை, பெரும் மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மாபள்ளம் பிரச்சினை என்ன? நீர் தேங்குவது ஏன்?  (2)

அதிகமாக உள்ள ஏரி நீரை திறந்து விட்டுதான் தீர்வு காண வேண்டுமா?: அதிகப்பட்சமாக ஆவடியில் 19 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆகவே, முன்பு போல, இத்தண்ணீர் பள்ளமான இடங்களுக்குத் தான் சென்று தேங்கும். மேற்கு மாம்பலம் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதற்கு மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சனையே காரணம்[1]. சென்னையில் மாம்பலம் பகுதியில் இருந்து வரும் மழைநீர், அடையாறு வழியாக வங்காள விரிகுடாவிற்கு செல்லும். ஆனால், அடையாறு ஆற்றுக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்படுவதன் காரணமாக மழைநீர் அதிகமாக வந்து தேங்கும் நிலை உருவாகி உள்ளது[2].

பழையமாம்பலம்அதே சோகக் கதை தான்: பழைய மாம்பலம் ஏரிக்கரைத் தெரு, புஷ்பவதி அம்மாள் தெரு போன்ற தெருக்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது[3]. தவிர மற்ற பகுதிகளிலும் சாலை, தெருக்கள் எல்லாம் வெள்ளக்காடாக உள்ளது[4]. மேற்கு மாம்பலம், தி. நகரில் பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சினையே மழை நீர் தேங்க காரணம் என்று கமிஷனர் தெரிவித்தார். சென்னையில் மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழ்தளத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் 30-11-2023 அன்று இரவு அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்து விடிய, விடிய தவித்தனர். வீடுகளுக்குள் நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர்.  

பழைய/மேற்கு/கீழை மாம்பலம் பிரச்சினை பழைய கதைதான்: மேற்கு மாம்பலத்தில் இருக்கும் நான்கு சுரங்கப் பாதைகளிலும் நீர் தேங்கி, போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. ரங்கராஜபுரம், துரைசாமி ரோடு, மேட்லி ரோடு, அரங்கநாதன் சாலை என்ற சுரங்கப் பாதைகளில் மழைநீர் நிறந்தது. உடனடியாக அங்கிருக்கும் மோட்டார்களின் மூலம் தண்ணீரை இறைத்து அப்புறப் படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. ஏனெனில், அந்நீரை எங்கு இறைப்பது என்பது தான் பிரச்சினை. எங்கு இறைத்தலும், பள்ளமான இடத்தில் தான் சென்று சேரும். பிரச்சினை தொடரும். இவையெல்லாம், கால்வாயில் இறைத்து, அதன் மூலம், கடலுக்குள் சென்று கலக்குமாறு அமைத்திருக்கப் பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் தான், பள்ளங்களில் இருக்கும் நீரை அப்புறப்படுத்த முடிகிறது. இதற்காக, அங்கங்கு ”பம்பிங் ஸ்டேஷன்” களும் இருக்கின்றன. ஆனால், இந்த சுரங்கப் பாதைகளில் மழைநீர் நிறைந்து, தேங்கி கிடந்தது[5]. கனமழையால் சென்னை தியாகராய நகர் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் 2 நாட்களாக தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டுள்ளது[6].  இதேபோல, பிருந்தாவனம் தெரு, தம்பையா ரோடு, ஏரிக்கரை என்று அருகில் இருக்கும் தெருக்களில் நீர் தேங்கியது, வீடுகளிலும் நீர் நுழைந்தது[7]. பிறகு, நீர் இறைக்கப் பட்டு, நிலைமை கொஞ்சம்-கொஞ்சமாக சீரடைந்தது[8].

மா.சுப்பிரமணியன் ஆய்வு, ஊடகக்காரர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் 30-11-2023 அன்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து முதல்வருடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “கடந்த 12 மணி நேரத்தில் சென்னையின் மழையளவு சராசரியாக 10 -11 செ.மீ பதிவாகியிருக்கிறது என்றாலும், கொளத்தூர், அடையாறு பகுதிகளில் 25 செ.மீ அளவு கனமழை பெய்திருக்கிறது. ஆனால், முதல்வரின் மழைநீர் வடிகால் திட்டம் இன்று பெருமளவில் கைகூடியிருக்கிறது. மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 800 கி.மீ மழைநீர் வடிகால் கால்வாய் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு கட்டப்பட்ட 2,100 கி.மீ மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரப்பட்டிருக்கிறது[9]. சென்னையில் இருக்கும் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர்நிலைப் பகுதிகளும் தூர்வாரப்பட்டிருக்கின்றன[10]. அதனால், மழைநீர் வேகமாக வெளியேறிக்கொண்டிருக்கிறது[11].

மா.சுப்பிரமணியன் தொடர்ந்து விளக்கம் அளித்தது: “செம்பரப்பாக்கத்திலிருந்து 3,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டாலே, அடையாறு கரையோர குடிசைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்[12]. ஆனால், தற்போது 6,000 கன அடி நீர் வெளியேற்றிய பிறகும் அந்தப் பகுதி பாதிக்கப்படவில்லை என்றால், தூர்வாரும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதுதான் அதற்குக் காரணம் [13]. சைதாப்பேட்டை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ஆய்வுசெய்தோம். அங்கிருக்கும் பல்வேறு குடிசைப் பகுதி மக்களுக்குப் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை[14]. ஆனால், மேற்கு மாம்பலம் கால்வாயில், செம்பரம்பாக்கத்திலிருந்து திறந்துவிடப்படும் 6,000 கன அடி நீர் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டிருப்பதால், அதை 4,000 கன அடி நீராகக் குறைக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்[15]. அதனால் மாம்பலம் பகுதியில் மட்டும் சிறு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் படிப்படியாகக் குறையும். இன்னும் 1, 2, 3, 4-ம் தேதிகளில் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது[16]. எனவே, தற்போது எங்கெல்லாம் மழையின் தீவிர பாதிப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உரிய பாதுகாப்புப் பணியை மேம்படுத்தவும், பாதாளச் சாக்கடை அடைப்புகளைச் சரிசெய்வதற்கான பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்[17]. நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் பிரச்னைகளை சீர்செய்வதற்கானப் பணிகள் வேகப்படுத்தப்பட்டிருக்கின்றன,” எனத் தெரிவித்தார்[18].

© வேதபிரகாஷ்

02-12-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையின் முக்கிய பகுதியில் வடியாத மழைநீர்.. காரணம் இதுதான்.. மாநகராட்சி ஆணையர் கொடுத்த விளக்கம்!, By Vignesh Selvaraj Published: Thursday, November 30, 2023, 12:26 [IST]

[2] https://tamil.oneindia.com/weather/chennai-corporation-commissioner-explains-about-why-rain-water-stagnant-in-some-places-561473.html?story=1

[3] தினத்தந்தி, தகர்த்தெடுத்த கனமழை.. மிதக்கும் மே.மாம்பலம்.. தண்ணீரால் மக்கள் கண்ணீர் , By தந்தி டிவி 30 நவம்பர் 2023 3:37 PM.

[4] https://www.thanthitv.com/news/tamilnadu/heavy-rains-people-are-crying-because-of-the-water-230157

[5] NEWS18-TAMIL, நியூஸ்18 தமிழ்நாடு செய்தி எதிரொலிரங்கராஜபுரம் சுரங்கப் பாதையில் மழைநீர் அகற்றம் | Chennai Rain, LAST UPDATED: DECEMBER 01, 2023, 10:13 IST.

[6] https://tamil.news18.com/videos/tamil-nadu/news18-tamil-nadu-news-echo-rainwater-removal-in-rangarajapuram-tunnel-chennai-rain-1254736.html

[7] தினத்தந்தி, புரட்டி அடித்த மழை;மிதந்த மே.மாம்பலம்மாநகராட்சியின் நான் ஸ்டாப் ஆக்சன்மொத்த ஏரியாவும் க்ளியர், By தந்தி டிவி, 1 டிசம்பர் 2023 10:22 AM.

[8] https://www.thanthitv.com/latest-news/torrential-rain-mild-may-mambalam-corporations-non-stop-action-whole-area-clear-230340?infinitescroll=1

[9] அத்திரிக்கை.காம், அதிகனமழை பெய்ததே தண்ணீர் தேங்க காரணம்மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் 16000 மாநகராட்சி ஊழியர்கள்!, ராதாகிருஷ்ணன் தகவல், NOV 30, 2023

[10] https://patrikai.com/chennai-water-stagnation-reason-is-heavy-rain-16000-municipal-corporation-employees-are-working-to-dispose-of-rain-water-radhakrishnan-information/

[11] லோகலாப், ஆபத்தான நிலையில் அலுவலகம் செல்லும் குடியிருப்பு வாசிகள், By ஜீவன், Dec 01, 2023, 18:12 IST.

[12] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/thiruvallur/madhavaram/dwellers-going-to-office-in-dangerous-conditions-12117514

[13] நியூஸ்.360, கனமழையால் மேற்கு மாம்பலம் பகுதி பாதிப்புஊத்தும் பேய் மழை.. வாட்ஸ் அப் நம்பர் அறிவித்த மாநகராட்சி!!, Author: Udayachandran RadhaKrishnan, 30 November 2023, 11:39 am

[14] https://www.updatenews360.com/trending/west-mambalam-area-affected-due-to-heavy-rain-corporation-announced-whatsapp-number-301123/

[15] மாலைமலர், மழைநீர் வடிகால் பணிகள் பலன் அளித்துள்ளதுகனமழையையும் எதிர்கொள்ள தயார்!, By மாலை மலர், 30 Nov 2023 12:58 PM (Updated: 30 Nov 2023 2:15 PM).

[16] https://www.maalaimalar.com/news/state/ma-subramanian-says-rainwater-drainage-works-have-yielded-results-690841

[17] விகடன், மழை முன்னெச்சரிக்கைப் பணி: “முதல்வர் நேற்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை” – அமைச்சர் சேகர் பாபு, V.M. மன்சூர் கைரி, Published: 30-11-2023 at 2 PM; Updated: 30-11-2023 at 2 PM

[18] https://www.vikatan.com/government-and-politics/politics/chennai-rain-minister-msupramanian-and-sekar-babu-press-meet-at-chennai