Archive for the ‘பாதிரி’ Category

பாதிரியின் மகன் கொலை செய்யப் பட்டது – ஆனால், செய்திகள் ஏன் வேறுபடுகின்றன?

நவம்பர் 19, 2022

பாதிரியின் மகன் கொலை செய்யப் பட்டது  ஆனால், செய்திகள் ஏன் வேறுபடுகின்றன?

தமிழகத்தில் செய்திகள் விதவிதமாக வேளியிடும் முறை: இது தமிழகத்தில் நடக்கின்ற மற்ற கொலைகள் போன்று, இதுவும் ஒன்றாக இருக்கலாம். ஒரு உயிர் போகிறது என்பது வருத்தமான நிகழ்வு தான். ஆனால், பின்னணி பல நேரங்களில் நியாயம், தர்மம், நேர்மை முதலியவற்றைக் கடந்து செயல்பட்ட / செயல்படும் நிலையைத்தான் எடுத்துக் காட்டுகிறது. பலமுறை தமிழகத்தில் செக்யூலரிஸ போதையில், பெரியாரிஸ பகுத்தறிவில், இப்பொழுது திராவிட மாடலில் பலவிதமாக செய்திகள் வெளி வருகின்றன. குற்றங்களில் இதுவும் இன்னொரு குற்றம் என்று பட்டியலில் சேர்க்கப் படலாம். ஆனால், நேரிடையாக என்ன நடந்தது என்று குறிப்பிடாமல், விவரங்களை ஏன்று வித்தியாசங்களுடன் வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை.  சமீபத்தை கோவை கார் குண்டுவெடிப்பே விதவிதமாகத் தலைப்பிட்டு செய்திகள் வெளிவந்துள்ளன. சேலம் துப்பாக்கி வைத்திருந்த இளைஞர் கைதும் அவ்வாறே இருந்தன. இப்பொழுது, இந்த கொலை செய்தியும் அவ்வாறே உள்ளது.

பாதிரி தனது மகனின் பிரச்சினையால் தென்காசியிலிருந்து பாளையங்கோட்டைக்கு வீடு மாற்றிச் சென்றது: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியாரின் மகன் ராஜபாளையம் சென்றிருந்த போது முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[1] என்ற செய்தி தான் இப்பொழுது பலவிதமாக வெளிவந்துள்ளது. தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் பொன்னுத்துரை, பாதிரியாராக உள்ளார்[2]. எந்த சர்ச், டினாமினேஷன் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இவரது மகன் இம்மானுவேல் சேகரன் (21). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது[3]. பாதிரியின் மகன் அவ்வாறு இருக்கலாமா என்றெல்லாமும் விவாதிக்கவில்லை. மேலும்  இவர் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்களை தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளார்[4]. பிறகு இவ்விவகாரம் சீரியஸ் ஆகிறது. இதனால் அடிக்கடி அவர் பிரச்சினையில் சிக்கினார், என்று இழுத்தாலும், பிரச்சினை, முழு விவகாரம் அறிவிக்கப் படவில்லை. அடிக்கடி அவருக்கும் அப்பகுதிவாசிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்தது[5]. இதனால் பாதிரியார் டேனியல் பொன்னுத்துரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, செப்டம்பர் 2022ல் நெல்லையில் பாளையங்கோட்டை அருகே உள்ள வீரமாணிக்கபுரம் பகுதிக்கு  வேறு வீடு பார்த்துக் குடியேறினர்[6]. அதாவது, அந்த அளவுக்குப் பிரச்சினை முற்றிவிட்டது போலிருக்கிறது.

11-11-2022ம் தேதி காணாமல் போனவர் 12-11-2022 அன்று பிணமாகக் கிடந்தது: இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், முறம்பு கிராமத்தில் உள்ள தன் தாத்தாவின் வீட்டிற்கு இம்மானுவேல் சேகரன் சென்று இருந்தார். நேற்று 11-11-2022 இரவு வியாழக்கிழமை அன்று தாத்தா வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. “கடந்த 2 நாட்களாக அங்கு தங்கியிருந்த நிலையில் நேற்று இரவு முதல் அவர் திடீரென மாயமானார்,” என்று மாலை மலர் குறிப்பிடுகிறது[7]. ஆகவே நிச்சயமாகத் தேடிருப்பர். போலீஸில் புகார் கொடுத்தார்களா என்று தெரியவில்லை. இந்நிலையில் இன்று காலையில் ராஜபாளையம்-முதுகுடி சாலையில், மலையடிவாரத்தில் நல்லமநாயக்கர் ரோடு விலக்கில் நிர்வாண நிலையில் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் 20 வயது (22 வயது என்றும் சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன) மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதாக ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது[8]. இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதலில் அடையாளம் காண சிக்கல் என்றும் குறிப்பிடப் பட்டது. அப்போது பிணமாக கிடப்பவர் இமானுவேல் சேகரன் என தெரிய வந்தது[9]. “விசாரணையில் பிணமாக கிடந்தவர் நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பாஸ்கர் டேனியல் வெள்ளைதுரையின் மகன் இமானுவேல் ராஜா என்பது தெரியவந்தது,.” என்றும் இன்னொரு செய்தி கூறுகின்றது. பிறகு இது வேறு நபரா, கொலையா என்று தெரியவில்லை.

12-11-2022 வெள்ளிக்கிழமை அன்று வழக்குப் பதிவு செய்தனர்: கொலை செய்யப்பட்டு இம்மானுவேல் சேகரன் சடலமாகக் கிடந்தார். கழுத்தில் வெட்டு காயங்கள் காணப்பட்டன[10]. எனவே மர்ம நபர்கள் அவரை கொலை செய்து விட்டு இங்கு கொண்டு வந்து உடலை வீசியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்[11]. ராஜபாளையம் தெற்கு போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இம்மானுவேல் சேகரன் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்[12]. பெண்களை கேலி செய்யும் விவகாரத்தில் முன்விரோதம் காரணமாக இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்னும் கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த இம்மானுவேல் சேகர் இந்த இம்மானுவேல் ராஜா வெவ்வேறா?: சம்பவத்தன்று (10-11-2022)அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் காளி ராஜ், பொன்னுச்சாமி, அருண்குமார், தங்கபாண்டி, மருது பாண்டி ஆகியோருடன் மது குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 5 பேரும் சேர்ந்து இமானுவேல் ராஜாவை கொலை செய்ததாக சந்தேகிக்கப் படுகிறது[13]. இதுகுறித்து அவரது தாத்தா முத்துச்சாமி கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர், என்று மாலை மலர் அடுத்தநாள் 12-11-2022 அன்று செய்தி வெளியிட்டுள்ளது[14]. இங்கு தாத்தா புகார் கொடுத்ததாக உள்ளது, இங்கு இல்லை.

21 வயது மதிக்கத்தக்க வாலிபர் நிர்வாண நிலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். குடிபோதையில் கொலை செய்த நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்: இப்படியும் ஒரு செய்தி வந்துள்ளது. இரண்டும் ஒன்றா அல்லது வேறா என்று தெரியவில்லை, ஏனெனில், சில வேறுபாடுகள் காணப் படுகின்றன. ராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடை பகுதியில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் நிர்வாண நிலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார்[15]. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பாஸ்கர் டேனியல் வெள்ளைதுரையின் மகன் இமானுவேல் ராஜா என்பது தெரியவந்தது[16]. தென்காசி மாவட்டம் முறம்பு அருகில் உள்ள வேலாயுதபுரம் பகுதியில் இவரது தாத்தா முத்துச்சாமி வீடு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு வந்த இமானுவேல் ராஜா சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் காளி ராஜ், பொன்னுச்சாமி, அருண்கு மார், தங்கபாண்டி, மருது பாண்டி ஆகியோருடன் மது குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 5 பேரும் சேர்ந்து இமானுவேல் ராஜாவை கொலை செய்ததாக சந்தே கிக்கப்படுகிறது. இதுகுறித்து அவரது தாத்தா முத்துச்சாமி கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.

செய்திகளில் வித்தியாசம் ஏன்?: பிடிஐ-PTI பாணி செய்தி வெளியீடு இப்பொழுது தமிழகத்தில் அதிகமாகி விட்டது. அதாவது, PTI என்ன கொடுத்துள்ளதோ அதை அப்படியே போட்டு, அமைதியாக இருந்து விடுகின்றனர். தினமணி, தமிழ்.இந்து, தினத்தந்தி, விகடன், மாலை மலர், என்று எல்லாமே அப்படியே வெளியிட்டுள்ளனர். என்ன-ஏது-அதன் பின்னணி என்ன என்பனவற்றை கூற மாட்டார்கள், விளக்க மாட்டார்கள், தமது துப்பறியும் செய்தி நிபுணத்துவத்தை வெளிப்படுத்தவில்லை, நக்கீரன் மாதிரி சிஐடி-துப்பறியும் வேலையும் செய்யவில்லை, அப்படியே அமுக்கப் பார்க்கிறார்களோ என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது. செய்திகளில் காணப் படும் வித்தியாசங்கள்:

தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் பொன்னுத்துரைநெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பாஸ்கர் டேனியல் வெள்ளைதுரை
பாதிரி டேனியல் பொன்னுத்துரை  பாதிரியார் பாஸ்கர் டேனியல் வெள்ளைதுரை
மகன் இம்மானுவேல் சேகரன்மகன் இமானுவேல் ராஜா
தாத்தா பெயர் குறிப்பிடப் படவில்லை.தாத்தா முத்துச்சாமி
விருதுநகர் மாவட்டம், முறம்பு கிராமத்தில் உள்ள தன் தாத்தாவின் வீடுதென்காசி மாவட்டம் முறம்பு அருகில் உள்ள வேலாயுதபுரம் பகுதியில் இவரது தாத்தா முத்துச்சாமி வீடு உள்ளது.

© வேதபிரகாஷ்

19-11-2022.


[1] காமதேனு, சாலையில் நிர்வாணமாக கிடந்த பாதிரியார் மகனின் சடலம்: தாத்தா வீட்டிற்கு சென்றபோது நடந்த கொலை, Updated on : 11 Nov, 2022, 6:30 pm

[2] https://kamadenu.hindutamil.in/national/priests-son-murder-whats-the-backgroundmore

[3] தினசரி, ராஜபாளையம் அருகே தென்காசி பகுதி வாலிபர் வெட்டிக்கொலை….., சக்தி பரமசிவன், நவம்பர் 12, 2022 3:51 AM.

[4] https://dhinasari.com/crime-news/270106-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A.html

[5] விகடன், ராஜபாளையம்: நிர்வாண நிலையில், கழிவுநீர் ஓடையில் இளைஞர் சடலம்போலீஸ் விசாரணை!, க.பாலசுப்பிரமணியன், Published: 12 Nov 2022 12 PM; Updated:12 Nov 2022 12 PM

[6] https://www.vikatan.com/social-affairs/crime/rajapalayam-unknown-person-murder-police-investigation

[7]  மாலை மலர், ராஜபாளையம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை, By Maalaimalar11 நவம்பர் 2022 12:00 PM (Updated: 11 நவம்பர் 2022 12:00 PM).

[8] https://www.maalaimalar.com/news/district/tamil-news-rajapalayam-near-youth-murder-police-inquiry-535096?infinitescroll=1

[9] தினத்தந்தி, வெட்டுக்காயங்களுடன் ஓடையில் வாலிபர் பிணம்  ,  நவம்பர் 12, 1:01 am

[10] https://www.dailythanthi.com/News/State/body-of-teenager-in-stream-with-cuts-835038

[11] தினமணி, இளைஞா் வெட்டிக் கொலை, By DIN  |   Published On : 11th November 2022 11:45 PM  |   Last Updated : 11th November 2022 11:45 PM

[12] https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2022/nov/11/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3947791.html

[13] மாலை மலர், குடிபோதையில் கொலை செய்த நண்பர்களுக்கு வலைவீச்சு, By மாலை மலர்12 நவம்பர் 2022 11:46 AM

[14] https://www.maalaimalar.com/news/district/virudhunagar-news-friends-who-committed-drunken-murder-are-attacked-535520?infinitescroll=1

[15] மாலை மலர், குடிபோதையில் கொலை செய்த நண்பர்களுக்கு வலைவீச்சு, By மாலை மலர், 12 நவம்பர் 2022 11:46 AM

[16] https://www.maalaimalar.com/news/district/virudhunagar-news-friends-who-committed-drunken-murder-are-attacked-535520?infinitescroll=1