Archive for the ‘சேதம்’ Category

2023 மிக்ஜாம் புயல் 2015ஐ மீறி சென்னை மக்களை பாதித்தது – விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் பேரிடர் எதிர்ப்பு-தடுப்பு-கட்டுப்பாட்டு முறைகள் ஏன் பலனிக்கவில்லை? (3)

திசெம்பர் 7, 2023

2023 மிக்ஜாம் புயல் 2015 மீறி சென்னை மக்களை பாதித்ததுவிஞ்ஞானம்தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் பேரிடர் எதிர்ப்புதடுப்புகட்டுப்பாட்டு முறைகள் ஏன் பலனிக்கவில்லை? (3)

பாதிக்கப் பட்ட மக்களின் கோரிக்கை: நிவாரணப் பணி என்ற பெயரில், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், படகுகளை எடுத்துச் சென்று, போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவதால், மீட்பு பணி தாமதமாவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூறியதாவது: :வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நிற்பதால், வெளியில் செல்ல முடியவில்லை. மொபைல் போன் இணைப்பு இல்லை; மின்சாரம் இல்லை. குடிநீர் மற்றும் உணவுக்கு சிரமப்படும் நிலை உள்ளது. தண்ணீர் வடிந்த பகுதிகளில், பொருட்கள் விலை கடுமையாக உள்ளது. விலையை கட்டுப்படுத்த, அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழை நீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள, அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக குடிநீர், உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.

சில இடங்களுக்கு ஆவின் பால் இலவசமாக சப்ளை என்று அறிவிப்பு: செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்பகுதி மக்களுக்கு நாளை (7 ம் தேதி) 20 ஆயிரம் ஆவின் பால்பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்து உள்ளார்[1]. 15 வது மண்டல மழை நிவாரணப்பணி பொறுப்பாளரான அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்[2].

1960களிலிருந்து நிலை மாறவில்லை: இந்த 21ம் நூற்றாண்டிலேயே, இத்தனை விஞ்ஞான-தொழிற்நுட்ப முன்னேற்ற வசதிகள் இருந்தாலும், சில நாட்களில் பெய்த மழையில் சிங்காரச் சென்னையில் உள்ள மக்கள் பலவிதங்களிலும் அவதியுற்றதை கவனிக்கலாம். 1960களிலிருந்து சென்னையில் வசித்து, பல புயல்கள், பெரும் மழை, சுழற்காற்று, வெள்ளம் என்றெல்லாம் பார்த்து, அனுபவித்து அவதியுற்று, ஏன் பொருட்சேதமும் ஏற்பட்டு, இன்றும் இத்தகைய அலங்கோலங்களைப் பார்க்கும் பொழுது, ஆட்சி, அதிகாரம், மக்கள்-தொடர்பு சேவை பொறுப்பு முதலியவற்றில் இருப்பவர்கள் இந்த 60-70 ஆண்டுகளில் தரமிழந்து, மோசமாகி விட்டார்கள் என்று தான் தெரிகிறது. அவர்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளாமல், வாய்-சவடால் மூலம் ஏமாற்றி வந்ததும் மெய்ப்பிக்கப் படுகிறது. இவர்கள் எல்லோருமே நன்றாக சகல வசதிகளுடன் வீடுகளில் இருந்து வருவதால், நிச்சயமாக கஷ்டப் படும் பொது மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை, கவலை கொள்ளமாட்டார்கள் என்பதும் வெளிப்படுகிறது. அக்கஷ்டங்களை அனுபவிக்காத வரைக்கும் அவர்களுக்கு அந்த உணர்வும் வராது. வேண்டுமென்றால், வாய்பேச்சில் சமாளிக்கப் பார்ப்பார்கள்.

மழைநீர், வெள்ளநீர் கட்டுப்படுத்தும், முறைப்படுத்தும் மற்றும் கற்றும்நீக்கும் வழிகளில் முன்னேற்றம் இல்லை: மழைத் தண்ணீர் தாழ்வாக உள்ள பகுதிகளில் சாலைகளில் தேங்குவது, வீடுகளில் நுழைவது, சுரங்கப்பாதைகளில் நீர் நிற்பது, போக்குவரத்து பாதிப்பது, பொது போக்குவரத்து நிறுத்தப் படுவது, முதலியவை தொடர்ச்சியாக மழைகாலங்களில் நடந்து வருகிறது என்றால், அத்துறைகளில் உள்ள பொறுப்பானவர்கள் ஏன் முன்னேற்றம் அடையவில்லை, பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்ற முக்கியமான கேள்விகள் எழுகின்றன. அதிலும் குறிப்பிட்ட இடங்கள், சுரங்கப்பாதைகள், சாலைகள் மட்டும் திரும்ப-திரும்ப பாதிக்கப் படுவது, அவர்களது இயலாமை மட்டுமல்லாது, இது வரை செய்து வந்த பணிகளின் மீதும் சந்தேகம் எழுகின்றது. இது வரை பலநூறு கோடிகள் செலவழிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், அதே இடங்களில் அதே பிரச்சினைகள் மறுபடி-மறுபடி ஏற்படுகின்றன. இதனால், பெரும் பேச்சு, அறிக்கைகள், ஊடகங்களில் திணிக்க்ப்படும் வாக்குறுதிகள் எல்லாமே பொய்த்து போய் விடுகின்றன.

21ம்நூற்றாண்டிலேயே நவீன வசதி சேவைகள் முடங்குவது கேவலமான விசயம்; மின்சாரம் இல்லை, இன்டெர்நெட் இல்லை, மொபைல் சேவை (நெட்வொர்க்) இல்லை என்று ஒருபக்கம் விஞ்ஞான-தொழிற்நுட்ப முன்னேற்றங்கள் இளித்து விட்டன.  இவற்றுடன் சம்பத்தப் பட்டவர்களின் இயலாமை அவர்களது உதவாக்கரை தன்மையினைத் தான் அப்பட்டமாக மெய்ப்பித்துள்ளது. இந்த ஒருவாரத்தில் 29-11-2023 / 30-11-2023 மற்றும் டிசம்பர் 4 முதல் 6 வரை ஏற்பட்டுள்ள இழப்பிற்கு, சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் என்ன இழப்பீடு கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ 5-12-2023 அல்லது 06-12-2023 அன்று மின்சார சப்ளை வந்து, மொபைலுக்கு சார்ஜ் போட்டு, புகார் கொடுத்தாலும், “நாங்கள் பிரியாரிடி பேசிஸில் வேலை செய்கிறோம், ஐந்து மணி நேரம் ஆகும்,” என்று பதில் கொடுத்தது தான். 10 மணி நேரங்கள் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை. அதாவது, மக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு இரண்டு நாட்கள் வைக்கப் பட்டிருக்கிறார்கள். 07-12-2023 அன்று வருமென்று எதிர்பார்க்கப் படுகிறது என்கின்றனர்.

மின்சார வெட்டு, தடை போன்றவை தொடர்வது: மின்சாரத்தை வைத்து வியாபாரம் செய்வது, அரசியல் விளையாடுவது என்றெல்லாம் ஒரு பக்கம் இருக்கும்நிலையில், இப்படியும் நடப்பது வேடிக்கை தான். மின்சாரத்தை நம்பித்தான், இன்றைக்கு எல்லா மக்களும் வாழ்கிறார்கள். மின்சாரம் இல்லையென்றால், நீர் கிடைக்காது; நீர் கிடைக்கவில்லை என்றால் என்னாகும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. வீட்டு உபயோகப் பொருட்கள்-கருவிகள் வேலை செய்யாது; சமைக்க மிக்க கஷ்டப் பட வேண்டியிருக்கும். இரவில் பேன் / மின்-விசிறி இல்லாமல் தூங்க முடியாது; கொசுக்கள் கடிக்கும்; குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெருங்கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள். பிறந்த குழந்தைகள், மாத குழந்தைகள், சிறு குழந்தைகள் அழுது கொண்டே இருக்கும். இதனால்,பெற்றோர்களும் கவலையுன் அவர்களைத் தேற்றிக் கொன்டிருக்க வேண்டும். ஒரு இரவு இப்படி கழித்து, இன்னொரு இரவையும் அது போல கழிப்பது என்பது, பெரிய கொடுமை.

பால் விநியோகம் நிறுத்தம்பாதிப்பு, ரேஷன் முறையில் கொடுப்பது முதலியன: இன்னொரு பக்கம் பால் சப்ளை இல்லை. ஒட்டு மொத்த சென்னைவாசிகள் ஆவின் பாலை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பால் விநியோகம் இல்லை. அதாவது, அங்கங்கு இருக்கும் டிபோக்களுக்கே பால் வரவில்லை என்கிறார்கள். 06-12-2023 அன்று பெரிய வரிசையில் நின்று அரை லிட்டர் பால் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பால் விற்பவர்களும் அடாவடித் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அதிக விலைக்கு விற்பது, மீதி சில்லரை சரியாகக் கொடுக்காதது என்றெல்லாம் செய்துள்ளனர். இத்தனை அவதி, கஷ்டம், துன்பம் என்றெல்லாம் இருக்கும் நிலையிலும், இவ்வாறெல்லாம் நடந்து கொள்ள இவர்களுக்கு எப்படி மனம் இருக்கிறது என்பது ஆய்வுக்குரியது. லட்சக் கணக்கில் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என்று கஷ்டப் பட்டுள்ளனர். பிறகு என்ன சித்தாந்தம் பேசி என்ன செய்து சாதிக்கப் போகிறார்கள்.

விஞ்ஞானம்தொழிற்துறை முன்னேற்றம் இருந்தும், இவற்றில் முன்னேற்றம் ஏன் இல்லை?:

  • பொதுப்பணித் துறை, குடிநீர்-வடிகால் வாரியம், சாலைத்துறை, மின்சார வாரியம், இத்தறைகளுக்கு அமைச்சர்கள், பெரிய-பெரிய அதிகாரிகள், தொழிற்நுட்ப வல்லுனர்கள், பலநிலைகளில் வேலை செய்யும் லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள் என்று எல்லோரும் பொறுப்பேற்பார்களா?
  • இந்த 60-70 ஆண்டுகளில் அவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள். விஞ்ஞான-தொழிற்நுட்பங்க்ளை அறிந்து தத்தமது  சேவைகளில் சிறந்தார்கள்?
  • பொது மக்கள் முன்னர் வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், தத்தம் கார்களில் வலம் வருவார்களா?
  • இணைப்புகளுக்கு லஞ்சம் கேட்பார்களா?
  • கொடுக்கவில்லை என்றால், இணைப்புகள் கொடுப்பார்களா? 2024ல் இவையெல்லாம் நடக்காமல் இருக்குமா?

கொஞ்சம் மனிதத்தன்மை இருந்தாலே, ஒவ்வொரு மனிதனும் கொஞ்சமாவது, மனசாட்சியுடன் யோசிப்பான், அயோக்கியத் தனம் செய்ய யோசிப்பான், லஞ்சம் வாங்கத் தயங்குவான்……ஆனால், நடந்து கொண்டு தானே இருக்கின்றன… இன்னும் சில நாட்களில் எல்லாமே சரியாகி, இயல்பு நிலைகளுக்கு வந்து விட்டால், பிழைப்புக்கு-வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால், மறந்தும் விடுவர். டிவி-மொபை சேவை தொடங்கியவுடன் டிவி-சீரியல், சினிமா என்றும் பார்க்க ஆரம்பித்து விடுவர். அரசியல்வாதிகள், சிலை திறப்பு, மணிமண்டம் கட்ட அடிக்கல் நாட்டுவது என்று கிளம்பி விடுவர்.

© வேதபிரகாஷ்

07-12-2023


[1] தினமலர், 20 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன், மாற்றம் செய்த நாள்: டிச 06, 2023 23:23.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3497602

மழை, பெரும்மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மா-பள்ளம் பிரச்சினை என்ன? மழைநீர் தேங்குவது ஏன், வெள்ளம் வீடுகளில் புகுவது எப்படி? (3)

திசெம்பர் 2, 2023

மழை, பெரும் மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மாபள்ளம் பிரச்சினை என்ன? மழை நீர் தேங்குவது ஏன், வெள்ளம் வீடுகளில் புகுவது எப்படி?  (3)

சேகர்பாபு கொடுத்த விளக்கம்: அதைத் தொடர்ந்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “வடசென்னையில், முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொசஸ்தலை மழைநீர் வடிகாலுக்காகக் கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது[1]. சென்னையில் சாலை 5,500 கி.மீ நீளம் இருந்தாலும், சென்னையைச் சுற்றி பழைய கால்வாய்களை இடித்து அகலப்படுத்தி, புதிய கால்வாய்களை ஏற்படுத்தியதில் 1,450 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது[2]. அடையாற்றில் வரும் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரால் மாம்பலம் கால்வாயில் நீர் வெளியேறாதது தெரியவந்தது[3]. இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க அறிவுறுத்தினார்[4]. இவ்வாறு இவர்கள் பேசியது, அரசு-ரீதியில் தான் இருந்ததே தவிர, தொடரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் போக்கில் இல்லை.

மின்சாரத்தால் பாதிக்கப் பட்டு, இரண்டு பேர் உயிரிழப்பு: தியாகராயநகர் பகுதியில் பாண்டிபஜார் சிவஞானம் சாலை, பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை ஆகியவணிக பகுதிகளிலும் மழைநீர் தேங்கிபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை புது பெருங்களத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (23), நேற்று முன்தினம் இரவு மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலை வழியாகக் கொட்டும் மழையில் சாலையில் தேங்கிய நீரில் செல்போனில் பேசியபடி சென்றார். அப்போது அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்[5]. தியாகராயநகர் வாணி மஹால் முன்புறம் உள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மின்விளக்கு கம்பத்தின் அருகே, மின்சாரம் தாக்கி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இசாசுல் (19) உயிரிழந்தார்[6]. “லோடு” அதிகமாகிறது என்று இப்பொழுதெல்லாம் பத்து வீடுகளுக்கு இடையில் ஒரு மின்சார கேபிள் இணைப்புப் பெட்டிகள் வைக்கப் பட்டு வருகின்றன. மின்சார துண்டிப்புப் பிரச்சினை வந்தால், அங்கங்கு ஆர்த்து, சரிசெய்யலாம் என்ற நோக்கில் இவை வைக்கப் படுகின்றன. ஆனால், இவையெல்லாமே அவசரம்-அவசரமாக வைக்கப் பட்டவைப் போலத் தான் இருக்கின்றன. கேபிள்கள், கேபிள் இணைப்புகள் முதலியவை தெரிவது போலத் தான் இருக்கின்றன. சரியாக கதவுகள் மூடப் படுவதில்லை. சாலை இருக்கும் அதே உயரத்தில் இருப்பதாலும், தொடர்ந்து சாலை உயர்த்தப் படுவதாலும், அவை கீழே செல்கின்றன. இதனால், தண்ணீரில் முழுகும் நிலை ஏற்படுகிறது. இதுதான் னின் கசிவு, ஷாக்க்கிற்கு காரணமாகிறது.

Photo courtesy – The Hindu

1950-60களிலிருந்து தொடர்ந்து இருக்கும் பிரச்சினை: மழைக்காலத்தில் 1950களிலிருந்து, அப்பொழுது மாம்பலம் இப்பொழுது மேற்கு மாம்பலம் என்று அழைக்கப்படுகின்ற இடத்தில், ஒவ்வொரு ஆண்டிலும் பொதுவாக மழை நீர் தெருக்குறளில் தேங்கி நிற்கும். குறிப்பாக மூன்று, ஐந்து, ஏழு என்றெல்லாம் விட்டு ஆண்டுகளில் மழையினால்  அதிக நீர் வரும். வெள்ளம், பெருவெள்ளம், புயல், சுனாமி போன்ற காலங்களிலும் இயற்கையாகவும் மற்றும் சென்னை சுற்றியுள்ள ஏரிகளில் நீர்நிலை தேக்கம் அதிகமாக இருக்கும் பொழுது, அந்த நீரை திறந்து விடுவதாலும் இத்தகைய வெள்ளம் இப்பகுதியில் ஏற்படுகிறது. இதனால் நிச்சயமாக வீடுகளில் 1940-60 என்று பார்த்தால், அக்காலகட்டத்தில் கட்டியுள்ள வீடுகளில் முதலில் ஒரு அடி, 2 அடி 3 அடி என்று, 2000 ஆண்டுகளில் 5 அடிக்கு நீர் தங்க ஆரம்பித்தது. இதனால், அத்தகைய பழைய வீடுகளில் வசித்தவர்கள், பெரும்பாலான மக்கள் மிகவும் அவதிப்பட்டு தான் வந்திருக்கின்றனர். ஏனென்றால் அத்தகைய நீர் வரும்போது அவர்கள் வீடுகளில் இருக்கும் எல்லா பொருள்களுமே மூழ்கிவிட்டு நாசமாகின்றன அதிலிருந்து மீட்கப்படுகின்ற பொருட்கள் என்பது நிச்சயமாக ஒரு 30 இருந்து 50 சதவீதம் கூட உருப்படியாக இருக்காது.

Photo courtesy – The Hindu

மாபள்ளம்,” ஏரிக்கரைத் தெரு பிரிந்திருக்கிறது, ஆறியிருக்கிறது, ஆனால், மழையில் சேர்ந்து விடுகிறது: மாம்பலம் என்பது “மா பள்ளம்” அதாவது இங்கு கிழக்குப் பக்கத்தில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியானது சைதாப்பேட்டை, மாம்பலம் நுங்கம்பாக்கம் வரை பரவி பெரிதாக இருந்தது. அதனால்தான், மாம்பலத்தில் இருந்து ஆரம்பிக்கும் இந்த “ஏரிக்கரை தெரு” என்பது நுங்கம்பாக்கம் வரைக்கும் சென்றது. பிறகு நுங்கம்பாக்கம், மாம்பலம் இடைப்பட்ட பகுதியில் வீடுகள், தெருக்கள், ரயில் தடங்கள் என்று வளர்ச்சி ஏற்பட்ட பொழுது, அது தனித்தனியாக பிரிந்தது, அதாவது “ஏரிக்கரைத் தெரு” இங்கும் உள்ளது, அங்கும் உள்ளது. எனவே இது ஏரிக்கரையில் பகுதியில் அமைந்திருந்த இடமானதால் பள்ளமாக தான் இருந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதாவது 1920 முப்பது நாற்பதுகளில் இந்த இடங்களை வாங்கி வீடு கட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த காலத்தில் அதாவது சுமார் நூறாண்டுகள் முன்பு கட்டப்பட்ட வீடுகள் இப்பொழுது நிச்சயமாக ஐந்து முதல் ஏழு அடி வரை தெருவின் அந்த நிலைக்கு கீழே தான் உள்ளன. அதனால் தான் பழைய வீடுகள் 2000 ஆண்டிலிருந்து ஒவ்வொரு மழை காலத்திலும் மூழ்கி வருகின்றன. ஆனால் நூறாண்டுகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும், டிரைனேஜ் என சொல்லப்படுகின்ற கழிவுநீர்-மழை நீர் எல்லாம் முறையாக நிலத்தடிக்குச் செல்லுத்தப் பட்டு, குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு, வெளியேற்றும் முறை சரியாக செய்யப் படவில்லை.

Photo courtesy – The Hindu

கிழக்கு உயர்ந்து, மேற்கு தேய்ந்த விதம்: 1947க்கு – விடுதலைக்கு முன்னர் தெருக்களில் பூமிக்கு அடியில் பதிக்கப் பட்ட அதே குழாய்கள் தான் இப்பொழுதும் பயன் படுத்தப் படுகின்றன. “வெள்ளக் காரன் காலத்தில் போடப் பட்ட பைப்பு” என்றும் வயதான மக்கள் கூருகின்றனர். இந்த 100 ஆண்டுகளில் மாம்பலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது கிழக்கு பக்கம் மட்டும் தியாகராய நகர் /டி.நகர் / தி.நகர் என்று மற்றும் மேற்கு பக்கம் மேற்கு மாம்பலம் என்றும் அழைக்கப்படுகிறது. எல்லாவித வளர்ச்சி அதே போல கிழக்கு பக்கத்தில் அதிகமாக இருந்து வருகிது, ஆனால் மேற்கு பக்கம் குறைவாகவே உள்ளது. “சரவணா ஸ்டோர்ஸ், குமரன், பொத்தீஸ்” என்றால் இந்தியா முழுவதும் தெரிந்துள்ளது. ஆனால் அசோக் நகர் என்ற குடியிருப்பு உருவானதால், அதை சுற்றிலும் முக்கியமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரமுகர்கள், பணக்காரர்கள் என்று இடம் வாங்கி, அதிகமாக வீடுகள் கட்டிக் கொண்டு, குடியேறியுள்ள படியால், அங்கு இருப்பவர்கள் தி.நகர் மற்றும் மவுண்ட் ரோடு செல்ல இந்த மேற்கு மாம்பலம் வழியாகத்தான் செல்ல வேண்டி இருந்தது. அதனால் தான் 1960களில் துரைசாமி ரோடு சப்வே அதாவது தரைக்கீழ் சொல்லும் பாலமாக இருந்தது, அமைக்கப்பட்டது, ஆகையால் இந்த அப்பகுதியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மிக சாதாரணமாக இருக்கிறது.

Photo courtesy – The Hindu

குடிநீர்கழிவு வடிகால் வாரியம் ஏன் முறையாக வேலை செய்யவில்லை?: இது ஒரு பக்கம் இருக்க, நமது பழைய பிரச்சனைக்கு செல்வதானால், இந்த நூறாண்டுகளில் இத்தனை வளர்ச்சிகளில், தெருக்களும் போடப்படுகின்றன. அவற்றின் உயரமும் அதிகமாகி வருகிறது. அதாவது ஒவ்வொரு தடவையும் “ரோடு” போடும் போதும், மூன்று ஐந்து இஞ்சுகள், அங்குலங்கள் உயரமாகி, சென்ற 50-100 ஆண்டுகளில் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது எனலாம். ஆனால் அதே நிலையில் 1920-30 களில் பதிக்கப்பட்ட அந்த குழாய்கள், அதே அளவுக்கு பூமியின் கீழே சென்று விட்டன. ஆனால் ஒவ்வொரு தடவை ரோட் போடும் பொழுது, பாதை மட்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. மழைநீர் செல்லும் பாதைகள் எப்பொழுதாவது உயர்த்திக் கட்டப் படுகின்றன. ஆனால், கட்டிட கழிவுகள், குப்பைகள் மூலம் பெரும்பாலும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சொல்லாமல் அந்த நீர் எப்போதும் தெருக்குறளில் தான் தேங்கி இருக்கும் நிலை இருந்டு வருகிறது. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். இதில் இருக்கும் ஊழல் போன்றவை பற்றி எல்லாம் பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் மக்கள் தான் அவதிபடுகிறார்கள் தவிர, வந்து செல்லும் அரசுத்துறை அதிகாரிகளுக்கு எந்த அக்கரையும் இல்லை என்றே தெரிந்து வருகிறது.

© வேதபிரகாஷ்

02-12-2023

Photo courtesy – The Hindu


[1] தினபூமி, 2 ஆண்டுகளாக செய்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது: அமைச்சர், வியாழக்கிழமை, 30 நவம்பர் 2023 

[2] https://www.thinaboomi.com/2023/11/30/214952.html

[3] தமிழ்.ஏபிபி.லைவ், கோடம்பாக்கம் , மேற்கு மாம்பலம் மழைநீர் தேங்க இதுதான் காரணம் | Chennai Rain, 30-11-2023, 9.00 PM.

[4] https://tamil.abplive.com/short-videos/news/chennai-chennai-rain-precaution-on-chennai-cropration-commissnor-speech-latest-news-watch-video-153430

[5] தமிழ்.இந்து, சென்னையில் கனமழையால் குடியிருப்புகள், சாலைகளில் வெள்ளம்: 2 பேர் உயிரிழப்பு, செய்திப்பிரிவு, Published : 01 Dec 2023 08:02 AM, Last Updated : 01 Dec 2023 08:02 AM.

[6]  https://www.hindutamil.in/news/tamilnadu/1161744-flood-in-chennai-flats-and-roads-4.html

சேதப் பட்ட, பின்னப் பட்ட / க்ஷீணப்பட்ட சிலைகள் / விக்கிரங்கள் இருந்தால் / வைக்கப் பட்டால் / மாற்றினால் என்ன விளைவு ஏற்படும்? (3)

ஜூன் 16, 2022

சேதப் பட்ட, பின்னப் பட்ட / க்ஷீணப்பட்ட சிலைகள் / விக்கிரங்கள் இருந்தால் / வைக்கப் பட்டால் / மாற்றினால் என்ன விளைவு ஏற்படும்? (3)

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி: மறைந்த தொல்லியல் வல்லுனர் ஆர். நாகசாமி இதைப் பற்றி விவரமாகக் கூறியுள்ளது: “காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி, 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டில் உள்ள புகழ் வாய்ந்த உற்சவமூர்த்தி. எழிலே உருவான இதற்கு அழகிலோ, வரலாற்று சிறப்பிலோ, சமய மரபிலோ, பொருள் விலையிலோ ஈடிணையான உற்சவமூர்த்தி ஏதும் இல்லை. கச்சி ஏகம்பரத்தில் உரைகின்ற இப்பரமன், கலை வரலாற்றில், ஆயிரத்து நுாறு ஆண்டுகளுக்கு முன் வடிக்கப்பட்டு இவ்வளவு காலமாக, அதாவது ராஜராஜன் நுாற்றாண்டுக்கும் முன்பிருந்தே வீதி உலாவில் வந்த உத்தமத் தெய்வம். இந்த மாபெரும் தெய்வத்தை, தமிழகத்தை ஆண்ட பெருமன்னர்கள் எல்லாம் வந்து கண்டு, பக்திப் பெருக்கோடு வணங்கி சென்றிருக்கின்றனர். இத்தெய்வத்தை தாங்கி உலா வருவதற்காக, அருமையான வேலைப்பாடுகள் அமைந்த வெள்ளியினால் செய்யப்பெற்ற ரிஷப வாகனத்தை கொடுத்தான், விஜயநகர மாமன்னன் கிருஷ்ண தேவராயன்.”

கம்பீரமாக உலா வரும் 500 வருட சிலை: ஆர். நாகசாமி எடுத்துக்காட்டுவது, “பல கோடி ரூபாய் பெருமானமுள்ள அந்த வாகனம், இன்றும் அக்கோவிலில் உள்ளது. இந்த சோமாஸ்கந்த பெருமான், அதன் மீது தான் இன்றும் கம்பீரமாக உலா வருகிறார். கிருஷ்ண தேவராயன், இக்கோவிலில் உள்ள மாபெரும் தெற்கு கோபுரத்தை கட்டுவித்து, அக்கோபுர வாயிலின் வழியாக வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் உருவை உலாவாக எழுந்தருளச் செய்து, பக்திப் பெருக்கோடு வணங்கினான். இவ்விழாவானது, இன்றைக்கு சரியாக, 500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போதும் இக்கோபுர வாயில் வழியாக வெளிப்போன இப்பெருமானை, பக்தி பெருக்காலே வணங்கிய அடியார்கள் கோடான கோடி பேராவர். அக்கோபுரம் கட்டிய, 25 ஆண்டுகளுக்குள் மற்றும் ஒரு சிறந்த நிகழ்ச்சி இங்கு நடந்தது. சேக்கிழார் பெருமான், திருத்தொண்டார் புராணம் என்னும் பெரிய புராணத்தை எழுதினார். அந்த அற்புத காப்பியத்தை அப்படியே சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்த ஒரு கவிஞன், ‘உபமன்யு பக்த விலாசம்என்ற பெயரில், சோமாஸ்கந்தர் முன்னிலையில் இவ்விழாவிலே அரங்கேற்றினான். அதைப் போற்றிய அன்றாண்ட மன்னன், அக்கவிஞனுக்கு சிறப்பு செய்ததை குறிக்கும் கல்வெட்டானது இக்கோவிலில் இன்றும் உள்ளது.மகா சுவாமிகள், அக்கல்வெட்டைப் பற்றி பெருமையாக குறிப்பிடுவார். அவர் போன்ற எத்தனையோ முனிவர்கள் எல்லாம், உச்சிமேல் கரம் கூப்பி வணங்கி பேறு பெற்ற பெருந்தெய்வம் இந்த சோமாஸ்கந்த மூர்த்தி”.

சோமாஸ்கந்த மூர்த்தியை மாற்ற திட்டம்: ஆர். நாகசாமி எடுத்துக்காட்டுவது, “ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, காஞ்சி மாநகருக்கே அருள்பாலித்த இத்தெய்வ உருவுக்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. நமது நாளிதழில், 2016 ஜன., 4ல் ஒரு செய்தி வெளிவந்தது. அச்செய்தியில், இவ்வுருவத்தின் ஒரு கரத்திலுள்ள விரலில் சிறு பின்னம் ஏற்பட்டிருப்பதாலும், பீடத்தில் சற்று அசைவு உள்ளதாலும் இதை வழிபடாது, வேறு சிலை செய்து வைக்க வேண்டும் என்று, அரசின் தலைமை ஸ்தப்தி முத்தையா ஸ்தபதியாரின் அறிவுரைப்படி, இந்த சிலையை ஒதுக்கிவிட்டு புதிய சிலையை செய்து வைக்க அவரே எற்பாடு (கான்ட்ராக்ட்) செய்துள்ளதாகவும், ஊர் மக்கள் இதை எதிர்த்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது[1]. அக்கோவில் அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி, இத்தகவலை அறிக்கையாக வெளியிட்டதாகவும் செய்தி வந்துள்ளது. இதை மாற்றுவதற்கு, முத்தையா ஸ்தபதியார் கூறுவதற்கான காரணம், ஆகம சாஸ்திரத்தின் படியும் சிற்ப சாஸ்திரத்தின் படியும், பின்னமான மூர்த்தியை பூஜிக்கக் கூடாது என்பது கொள்கை என்று கூறி உள்ளார்”.

காலம் காலமாக இருந்த தெய்வ உருவத்தை ஒதுக்கிவிட்டு புதிது செய்தால், அரசனுக்கும், ஆட்சிக்கும் மட்டுமல்லாது மக்களுக்கும் பேராபத்து[2]:  “தெய்வ உருவங்கள் பின்னமானால் என்ன செய்ய வேண்டும் என, ஆகம நுால்களும், சிற்ப நுால்களும் தெளிவாக கூறியுள்ளன. தெய்வ உருவங்களின் அங்கங்களை பெரும் அங்கம் என்றும், சிறு அங்கங்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றில் தலை, கழுத்து முதல் இடுப்பு வரை உள்ள இரண்டு அங்கங்கள் பெரு அங்கங்கள் என்றும், மற்றவை சிறு அங்கங்கள் என்றும் கூறுகின்றன. தலை அல்லது உடல் பகுதியைத் தவிர மற்ற எந்தப் பகுதியில் பின்னம் ஏற்பட்டாலும் அதை சீர்திருத்தி, அந்த பழைய உருவத்தைத் தான் பயன்படுத்த வேண்டும். இதை மீறி, காலம் காலமாக இருந்த தெய்வ உருவத்தை ஒதுக்கிவிட்டு புதிது செய்தால், அரசனுக்கும், ஆட்சிக்கும் மட்டுமல்லாது மக்களுக்கும் பேராபத்து விளையும் என்று தான் ஆகம சாஸ்திரங்களும், சிற்ப சாஸ்திரங்களும், மதம் முதலிய அனைத்து நுால்களும் கூறுகின்றன[3]; ஏனைய சிற்ப சாஸ்திரங்கள் எதுவாகிலும் இதையே வலியுறுத்துகின்றன. இதே கேள்வி, லண்டன் நடராஜர் வழக்கில் லண்டன் நீதிமன்றத்தால் கேட்கப்பட்டது. ஆகமங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, சிறு பின்னங்கள் இருந்தால் சிலைகளை ஒதுக்கினால் ஆபத்து விளையும் என்று, நான் என் சாட்சியத்தில் காட்டியுள்ளேன்[4].

நீதிக்காக எடுத்த முடிவு: “அந்நுால்களை வாங்கிப் பார்த்த லண்டன் மேல் நீதிமன்றம், அதை ஏற்றுக் கொண்டு தம் தீர்ப்பிலும் இதைக் குறிப்பிட்டுள்ளது. இது, நீதிக்காக அங்கு எடுத்த முடிவு. இங்கு யாம் கேட்பதெல்லாம், எந்த சிற்ப சாஸ்திரத்தில் அல்லது அதே போல் எந்த ஆகம சாஸ்திரத்தில், சிறு பின்னம் உடைய உருவத்தை ஒதுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என ஆராய, அறநிலையத் துறை கடமைப்பட்டு உள்ளது. அறநிலையத்துறை ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில், அரசின் தலைமை ஸ்தபதியார், ஆகமம் என்றே ஒரு சாஸ்திரம் கிடையாது; எல்லாம் எங்கள் சிற்ப சாஸ்திரத்தில் உள்ளது என வாதாடினார். அவ்வாறெனில், ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் இவர் அரசின் ஆலோசகராக எவ்வாறு செயலாற்றுகிறார் என்பது தெரியவில்லை[5].

பண்டைய வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை இடிப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் வல்லமை கிடையாது[6]: “அதேபோல், பண்டைய வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை இடிப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் இவருக்கு வல்லமை கிடையாது; புதுக்கட்டடங்கள் கட்டுவதில் மட்டும் இவருக்கு வல்லமை உண்டு. பழம்பெரும் கட்டடங்களை புதுப்பிக்க, புதிய விஞ்ஞான முறைகளை உலக விஞ்ஞானிகள் வகுத்துள்ளனர்; அதற்கான பரிசோதனைக் கூடங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துறையில் வல்லமையும், முறையே பயின்றவர்களையும் தான் அப்பணியில் ஈடுபடுத்த வேண்டுமென நான், நம் சென்னை நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தேன். அதை, கனம் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பித்துள்ளனர். வழிபாட்டில் இருக்கும் சிலைகளை அப்புறப்படுத்துவதும், கல் மண்டபங்களை இடிப்பதும், கோவில்களையே முற்றிலும் இடித்து விடுவதும், அரசுத் துறையே அரைகுறை ஆலோசகர்களை கேட்டு செயல்படுவதும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இது குறித்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி, கோவில்களுக்கு ஏற்பட்டு வரும் அவலநிலையையும், சான்றுகளுடனான படங்களையும் கண்டு மனம் பதறி, ஒருவர் கருத்தை மட்டும் கேளாது பல அறிஞர்களையும் கேட்டு, அரசு ஏன் செயல்படக்கூடாது எனவும், நிலைமை சீராகும் வரை எவ்வித புதுப்பிக்கும் திருப்பணியும் மேற்கொள்ளக் கூடாது எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளார். அரசு, மக்கள் நலனுக்காக மேற்கொள்ளும் பணிகளை, இடைத்தரகர்கள் சீரழித்து விடாது பார்த்துக் கொள்வது அதிகாரிகளின் கடமையன்றோ!,” நாகசாமி இவ்வாறு 2016ல் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

பழனி பாலதண்டாயுதபாணி கோவில் சிலை ஊழல்: 1984-ஆம் ஆண்டில் நீதிபதி சதாசிவம் தலைமையில், மடாதிபதிகள், விஞ்ஞானிகள், ஆகம நிபுணர்கள் அடங்கிய குழுவினர் பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நவபாஷானத்தால் ஆன மூலவர் சிலையை ஆய்வு செய்த பின்பு அளித்த பரிந்துரையின்படியே, இன்றளவும் நாளொன்றுக்கு 6 கால பூஜை மட்டுமே மூலவருக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தொன்மையான உற்சவரின் பழையசிலை அகற்றிவிட்டு புதிய உற்சவர் சிலையை செய்ததற்காக ஸ்தபதி அருணாச்சடேஸ்வரர் என்பவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவர் இறந்த பின்னர், விதிகளை மீறி 2004-ஆம் ஆண்டு 200 கிலோ எடையில் மேலும் ஒரு புதிய பஞ்சலோக சிலை செய்ய வேண்டும் என்றும், அதில் 10 கிலோ தங்கம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருத்தணி கோயிலில் இருந்து 10 கிலோ தங்கமும் பெறப்பட்டுள்ளது. சிலையை ஆகம விதியையும் மீறி கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்தபதி முத்தையாவுக்கு சொந்தமான ஸ்வர்ணம் என்ற சிற்பக் கலைக் கூடத்தில் உற்சவர் சிலை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதுடன் நிர்ணயிக்கப்பட்ட 200 கிலோவுக்கு பதில் 221 கிலோ எடையில் சிலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், புதியதாக செய்யப்பட்ட உற்சவர் சிலை கருத்துப் போனதால் கோயிலின் பூட்டிய இருட்டறையில், பூஜையே செய்யாமல், தன்னந்தனியாக 14 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது.

 2004-2018 – 14 ஆண்டுகளா இருட்டில் இருந்த விக்கிரகம் / சிலை: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலையை பரிசோதனை செய்த தொழில்நுட்ப நிபுணர் குழுவினர், 22 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட அந்த சிலையில் 10 சதவீதம் தங்கம் கூட இல்லை, எள்ளவும் வெள்ளி இல்லை என்றும் சிலை ஐம்பொன்னால் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து சிலை செய்வதற்கு கூடுலாக 12 கிலோ தங்கம் எங்கிருந்து வந்தது? அதற்கான ஆவணங்கள் எங்கே?, ஒரு வேளை சில ஆண்டுகளுக்குப் பின் அதை வெளிநாட்டுக்கு கடத்தும் நோக்கத்தில் செய்யப்பட்டதா? என பல்வேறு கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. உற்சவர் சிலைக்காக பழனி கோயிலில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சிலை செய்வதில் கையாடல் நடந்தது தெரிந்தும் 14 ஆண்டுகளாக கோயிலின் தரப்பில் இருந்து எந்தவொரு புகாரும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து நம்பிக்கை மோசடி செய்து தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தலைமை ஸ்தபதி முத்தையாவை அதிரடியாக கைது செய்துள்ளனர்[7]. இந்த வழக்கில் பழனி கோயில் நிர்வாகி கே.கே.ராஜா என்ற மற்றொருவரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஸ்தபதி முத்தையா மீது ஏற்கெனவே, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சிலை செய்ததில் தங்கம் கையாடல் செய்ததாக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது[8].  இதை 2016லேயே நாகசாமி எடுத்துக் காட்டுகிறார். அதாவது, பழைய சிலைக்கு பதிலாக, புதிய சிலை செய்ததில் தான் ஊழல் நடந்தது.

© வேதபிரகாஷ்

15-06-2022


[1]  இதுதான், பிறகு ஊழலாகி மாறி, வழக்குகளில், கைதுகளில் முடிந்துள்ளது.

[2] தினமலர், உயிரோடு ஒன்றிய சிலையை அகற்ற வேண்டாமே,  Updated : பிப் 21, 2016  01:50 |  Added : பிப் 20, 2016  20:24.

[3] எம். முத்தையா ஸ்தபதி, ஆலய நிர்மாண பிம்பலக்ஷண சிற்பநூல், அருள்மிகு கபாளலீஸ்வரர் கோவில், சென்னை, 2003, பக்கம்.161, 260, 289, 278,

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=1461522

[5]  எம். முத்தையா ஸ்தபதி அரசின் தலைமை ஸ்தபதியாக இருந்தார், அந்நேரத்தில் இருந்தாரா, இல்லையா என்று தெரியவில்லை, ஆனால், அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதை, மேலே அடிக்குறிப்பில் கொடுக்கப் பட்டுள்ளது.

[6] டாக்டர் இரா. நாகசாமி, முன்னாள் இயக்குனர், தொல்லியல் துறை (ஓய்வு) –

தினமலர், உயிரோடு ஒன்றிய சிலையை அகற்ற வேண்டாமே,  Updated : பிப் 21, 2016  01:50 |  Added : பிப் 20, 2016  20:24.

[7] தினமணி, பழனி பால தண்டாயுதபாணி கோயில் உற்சவர் சிலை முறைகேடு: தலைமை ஸ்தபதி முத்தையா கைது, By DIN  |   Published On : 25th March 2018 10:02 PM  |   Last Updated : 25th March 2018 10:02 PM.

[8] https://www.dinamani.com/latest-news/2018/mar/25/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2887271.html

இரண்டே நாளில் ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் என்றெல்லாம் அறிவிக்கப் பட்ட சிலை  – வாதிராஜர் ஆனது! (2)

ஜூன் 16, 2022

இரண்டே நாளில் ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் என்றெல்லாம் அறிவிக்கப் பட்ட சிலை  – வாதிராஜர் ஆனது! (2)

சிலைகள் உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளைக்கு சொந்தமானது: 14-06-2022 அன்று சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலைகளில் ஒன்றைப் பற்றி விதவிதமாக செய்திகளை 15-06-2022 அன்று ஊடகங்கள் வெளியிட்டன. அந்நிலையில், சம்பத்தப் பட்ட மடம் என்னவாயிற்று என்று தெளிவு படுத்தியுள்ளது. இரண்டாவ்து சிலை ஶ்ரீவாதிராஜ தீர்த்தர் என்பவருடைது. ஆஞ்சநேயர், வாதிராஜர் சிலைகள், தி.நகர் வாதிராஜ மடத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில், இரண்டு சுவாமி சிலைகள் கிடந்தன. கருங்கல்லாலான இந்த சிலைகளை, பட்டினப்பாக்கம் போலீசார் மீட்டனர். அதில், ஒன்று பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை; மற்றொன்று வாதிராஜர் சிலை.இரண்டையும் மீட்ட போலீசார், காவல்நிலையம் எடுத்து சென்று விசாரிக்கின்றனர். இந்நிலையில், அந்த சிலைகள் உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளைக்கு சொந்தமானது என தெரிய வந்து உள்ளது. தினமலர் மட்டும் தான், இதுவரை, இந்த செய்தியை வெளியிடுள்ளது. இது குறித்து அம்மடத்தினர் தரப்பில் கூறியதாவது:

Sode Mutt, T. Nagar

Sode Mutt, T. Nagar 09-06-2022 function

28 ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள்[1]: “கடந்த 1994ல் நிறுவப்பட்ட இந்த மடம், மூல மடத்தின் பீடாதிபதியால் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு பரம்பரை அறங்காவலர் இல்லை. அம்மடத்தில் கோவில் ஒன்றும் உள்ளது. அதில், 28 ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநயேர் சிலை, வாதிராஜர் பழைய கற்சிலைகள் இருந்தன. இந்நிலையில், அக்கோவில் கும்பாபிஷேம், 9ம் தேதி நடந்தது.இதில், உடுப்பி சோடே ஸ்ரீ வாதிராஜ மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஸ்வவல்லப தீர்த்த சுவாமிகள் பங்கேற்று நடத்தி வைத்தார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மடத்தின் கோவிலில் ஹயக்ரீவர், பஞ்சமுகி ஆஞ்சநேயர், வாதிராஜர் மற்றும் பூதராஜரின் புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழைய கற்சிலைகள் மென்மையான கற்கள் மற்றும் அரிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. புதிய சிலைகளை பிரதிஷ்டை செய்ததால், பழைய சிலைகளை நமது பாரம்பரியத்தின்படி, இயற்கையான வகையில் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய வேண்டும். எனவே, 12ம் தேதி பட்டினபாக்கம் கடற்கரையில் பழைய கற்சிலைகளை விஜர்சனம் செய்தோம். பட்டினப்பாக்கம் கடற்கரையில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநேயர், வாதிராஜர் கற்சிலைகள் எங்கள் மடத்தைச் சேர்ந்தவை. அதில், திருட்டுச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. அந்த சிலைகளை மீண்டும் மரபுப்படி விசர்ஜனம் செய்ய எங்களிடம் ஒப்படைக்க காவல் துறையை கோர உள்ளோம்,” இவ்வாறு அவர்கள் கூறினர்[2].

Installation Ceremony of Dieties, Sri Hayagriva ,Sri Panchamukhi Anjaneya, Bhavi Sameera Sri Vadiraja Gurusaarvabhoumaru, and Sri Bhootharajaru was performed by Sri Vishwavallabha Thirtha Swamiji ,at newly renovated Sri Hayagriva Vadiraja Mandira, T Nagar Chennai , a unit of Sode Sri Vadiraja Matha, on 8th June. Swamiji also performed Brahmakumbhabhishek to the Deities on 9th June. 2022
Sri Vadiraja Tirth

ஆக, இதனால் அறியப் படுவது என்னவென்றால்: செக்யூலரிஸம் என்றுசொல்லிக் கொண்டு, என்ன வேண்டுமானாலும் எய்யலாம், தப்பித்துக் கொள்ளலாம்.

1. அது வாதிராஜர் சிலைதான், எங்களுடையது, பழையது, விசர்ஜனம் செய்யப் பட்டது: உடுப்பி சோடே வாதிராஜ மடத்தின் தி.நகர் கிளை அறிவித்தது.

2. புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், பழைய சிலைகளை நமது பாரம்பரியத்தின்படி, நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய வேண்டும்…

3. ஜூன் 12ம் தேதி பட்டினபாக்கம் கடற்கரையில் பழைய கற்சிலைகளை விதிகளின் படி விஜர்சனம் செய்தோம் – உடுப்பி மடம்.

4. அந்த சிலைகளை மீண்டும் மரபுப்படி விசர்ஜனம் செய்ய எங்களிடம் ஒப்படைக்க காவல் துறையை கோர உள்ளோம் – உடுப்பி சோடே வாதிராஜ மடம்.

5. அதற்குள் அச்சிலை வீரமாமுனிவர், சித்தர், நாயன்மார், முருகன்….. …என்றெல்லாம் கற்பனையில் ஊடகங்கள் கதை விட ஆரம்பித்தன!

6. அது மட்டுமா, தலைப்புகள் – கடத்தப்பட்ட சிலைகள், கரை ஒதுங்கிய மர்மம் ……கடத்தல் சிலிகள் போலீஸார் விசாரணை………., மணலில் புதைந்து கிடந்த சிலைகள் மீட்பு….

7. ஆக தமிழக ஊடகங்களுக்கு ஒன்று என்றால், அதனை ஒன்பதாக ஊதி பெரிதாக்கி, பொய் என்றாலும் கவலைப் படாமல் செய்தியாக்கும் திறமை உள்ளது!

8. அச்சிலை வீரமாமுனிவர் என்ற போது கூட, எந்த இந்துத்துவ வாதியும் பொங்கவில்லை, ஒருவேளை அந்த அறியப் படாத கிறிஸ்தவ மயக்கத்தில் இருந்தனர் போலும்[3].

9. இந்து மதம், இந்துக்கள் நலன், இவற்றையும் மீறிய ஏதோ ஒன்று ‘இந்துத்துவ வாதி’களைக் கட்டுப் படுத்துகிறதா?

10. ராமானுஜர், முருகன், முனிவர், சித்தர், வீரமா முனிவர், மனிதன் என்பதில் உள்ளதும், இந்துத்துவ வாதிகளின் அமைதியும் ஒன்றுதான்! இனி க்ஷீணமான, சேதப் பட்ட சிலை / விக்கிரகத்தை உபயோகப் படுத்தலாமா, கூடாதா என்பதை பார்ப்போம்.

கற்சிலைகளில் ஏற்படும் பிழைகள், தவறுகள், குறைகள், சேதங்கள்: பொதுவாக கற்களில் சிற்பம் செய்யும் போது, சில பிழைகள், தவறுகள், குறைகள் முதலியவற்றால், சேதம் / சேதங்கள் ஏற்படும். சிறந்த கைதேர்ந்த சிற்பி, அதனை / அவற்றை அணிகலன், அலங்கார வேலைப்பாடு, துணி இருப்பது போல, என்று சேர்த்து, மாற்றி வடிவமைத்து, சரிசெய்து விடுவர். கற்களில் உள்ள குறைகளாலும் அத்தகைய பிழைகள், தவறுகள், குறைகள், தேதங்களில் முடிவதுண்டு. அந்நிலையில், அச்சிலைகள் பயன்பாட்டிற்கு ஏற்றுக் கொள்வதில்லை. தூர வைப்பது, புதைப்பது, ஆற்றில் போடுவது என்று அப்புறப்படுத்தி விடுவர். நல்ல சிற்பி செய்யும் போது, கண் திறக்கும் வரை எந்த பிழையும் ஏற்படாது. இப்பொழுது, வியாபார ரீதியில் செய்வதாலும், மிஷின்கள் (machines) பயன்படுத்துவதாலும், கொஞ்சம் கவனம் சிதறினால், தவறினால் குறை ஏற்பnட்டு விடும். இப்பொழுதெல்லாம், குறை ஏற்பட்ட பக்தியை தனியாக செய்து, அடிசிவ் (adhesive) என்கின்ற ரசாயன பசை வைத்து ஒட்டியும் விடுகிறார்கள். ஏமாந்தால், குறைந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். இந்து அறநிலையத் துறையினர், பழைய விக்கிரங்கள் / சிலைகளை மாற்றி புதியதாக வைக்கிறேன் என்று பல கோடி ஊழல்களில் சிக்கியுள்ளதாக செய்திகள், வழக்குகள் உள்ளன.

விக்கிரகம், சிலை மாற்றங்களுக்கு / மாறுதலுக்கு உபயோகப் படுத்துவதை தடுக்க வேண்டும்: ஒருவேளை இத்தகைய பின்னப் பட்ட, சேதப் பட்ட, க்ஷீணப்பட்ட சிலைகள், விக்கிரங்கள் முதலியவற்றை மாற்றும் பின்னணியில், சிலை கடத்தல் போன்றவை இருப்பதால், போலீஸார் ‘அலர்ட்’ ஆகி விட்டனர் போலும். ஊடகக் காரர்களும் உசுப்பேற்றி விட்ட மயக்கத்தில் உச்சத்தில் சென்று செய்திகளை போட்டு விட்டனர் போலும். இப்பொழுது, ‘புஷ்’ என்று ஆகி விட்டாலும், நாளைக்கு மற்றவற்றிற்கும், இதே லாஜிக்கை (modus operandi) போல குற்றங்களுக்குப் பயன்படுத்தலாம். கடத்தல், கடல் தாண்டிய குற்றங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அவ்வாறு செய்து, மாற்றி வைப்பது (duplicates / போலிகள் தயாரிப்பது) வெளியாகுமே என்றும் அச்சப் படலாம். இந்த நவீன காலத்தில், எல்லாமே நல்லதிற்கும் உபயோகப் படுத்தலாம், கட்டடற்கும் பயன்படுத்தலாம். ஒழுக்கம், நாணயம், நியாயம், தர்மம் எல்லாம் சும்மா பேசிக் கொண்டு, பணத்திற்காக வேலை செய்து கொண்டு இருந்தால், கோவில், என்றெல்லாம் பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை எனலாம். இரட்டை வேடம் போடுபவர்கள் நிச்சயமாக ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள்.

© வேதபிரகாஷ்

15-06-2022


[1] தினமலர், கடற்கரையில் மீட்கப்பட்டசிலைகள் அடையாளம் தெரிந்தது, Added : ஜூன் 15, 2022  22:58; https://www.dinamalar.com/news_detail.asp?id=3054113

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3054113

[3]  கலெக்டர் கவிதா, ஸ்டாலினுக்கு “அறியப் படாத கிறிஸ்தவம் – தமிழ்நாட்டில் ஒரு வரலாற்று தேடல்,” என்ற புத்தகத்தைக் கொடுத்ததால், இந்து அமைப்பினர், அவருக்கு, “இந்துமதம் பதில் சொல்கிறது,” என்ற புத்தகத்தைக் கொடுத்ததாக, பேஸ்புகில் பதிவுகள் போட்டனர். ஆனால், வேடிக்கை என்னவென்றால், நிவேதிதா லூயி என்ற அடிப்படைவாத கிறிஸ்தவ பெண் எழுதிய அப்புத்தகத்தை வெளியிட்டதே, “கிழக்குப் பதிப்பகம்” தான். அதனுடன் சம்பந்தப் பட்டவர்களும் இந்துத்துவவாதிகள் தான்.