Archive for the ‘தண்ணீர்’ Category

2023 மிக்ஜாம் புயல் 2015ஐ மீறி சென்னை மக்களை பாதித்தது – விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் பேரிடர் எதிர்ப்பு-தடுப்பு-கட்டுப்பாட்டு முறைகள் ஏன் பலனிக்கவில்லை? (3)

திசெம்பர் 7, 2023

2023 மிக்ஜாம் புயல் 2015 மீறி சென்னை மக்களை பாதித்ததுவிஞ்ஞானம்தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் பேரிடர் எதிர்ப்புதடுப்புகட்டுப்பாட்டு முறைகள் ஏன் பலனிக்கவில்லை? (3)

பாதிக்கப் பட்ட மக்களின் கோரிக்கை: நிவாரணப் பணி என்ற பெயரில், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், படகுகளை எடுத்துச் சென்று, போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவதால், மீட்பு பணி தாமதமாவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூறியதாவது: :வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நிற்பதால், வெளியில் செல்ல முடியவில்லை. மொபைல் போன் இணைப்பு இல்லை; மின்சாரம் இல்லை. குடிநீர் மற்றும் உணவுக்கு சிரமப்படும் நிலை உள்ளது. தண்ணீர் வடிந்த பகுதிகளில், பொருட்கள் விலை கடுமையாக உள்ளது. விலையை கட்டுப்படுத்த, அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழை நீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள, அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக குடிநீர், உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர்கள் கூறினர்.

சில இடங்களுக்கு ஆவின் பால் இலவசமாக சப்ளை என்று அறிவிப்பு: செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்பகுதி மக்களுக்கு நாளை (7 ம் தேதி) 20 ஆயிரம் ஆவின் பால்பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்து உள்ளார்[1]. 15 வது மண்டல மழை நிவாரணப்பணி பொறுப்பாளரான அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்[2].

1960களிலிருந்து நிலை மாறவில்லை: இந்த 21ம் நூற்றாண்டிலேயே, இத்தனை விஞ்ஞான-தொழிற்நுட்ப முன்னேற்ற வசதிகள் இருந்தாலும், சில நாட்களில் பெய்த மழையில் சிங்காரச் சென்னையில் உள்ள மக்கள் பலவிதங்களிலும் அவதியுற்றதை கவனிக்கலாம். 1960களிலிருந்து சென்னையில் வசித்து, பல புயல்கள், பெரும் மழை, சுழற்காற்று, வெள்ளம் என்றெல்லாம் பார்த்து, அனுபவித்து அவதியுற்று, ஏன் பொருட்சேதமும் ஏற்பட்டு, இன்றும் இத்தகைய அலங்கோலங்களைப் பார்க்கும் பொழுது, ஆட்சி, அதிகாரம், மக்கள்-தொடர்பு சேவை பொறுப்பு முதலியவற்றில் இருப்பவர்கள் இந்த 60-70 ஆண்டுகளில் தரமிழந்து, மோசமாகி விட்டார்கள் என்று தான் தெரிகிறது. அவர்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளாமல், வாய்-சவடால் மூலம் ஏமாற்றி வந்ததும் மெய்ப்பிக்கப் படுகிறது. இவர்கள் எல்லோருமே நன்றாக சகல வசதிகளுடன் வீடுகளில் இருந்து வருவதால், நிச்சயமாக கஷ்டப் படும் பொது மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை, கவலை கொள்ளமாட்டார்கள் என்பதும் வெளிப்படுகிறது. அக்கஷ்டங்களை அனுபவிக்காத வரைக்கும் அவர்களுக்கு அந்த உணர்வும் வராது. வேண்டுமென்றால், வாய்பேச்சில் சமாளிக்கப் பார்ப்பார்கள்.

மழைநீர், வெள்ளநீர் கட்டுப்படுத்தும், முறைப்படுத்தும் மற்றும் கற்றும்நீக்கும் வழிகளில் முன்னேற்றம் இல்லை: மழைத் தண்ணீர் தாழ்வாக உள்ள பகுதிகளில் சாலைகளில் தேங்குவது, வீடுகளில் நுழைவது, சுரங்கப்பாதைகளில் நீர் நிற்பது, போக்குவரத்து பாதிப்பது, பொது போக்குவரத்து நிறுத்தப் படுவது, முதலியவை தொடர்ச்சியாக மழைகாலங்களில் நடந்து வருகிறது என்றால், அத்துறைகளில் உள்ள பொறுப்பானவர்கள் ஏன் முன்னேற்றம் அடையவில்லை, பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்ற முக்கியமான கேள்விகள் எழுகின்றன. அதிலும் குறிப்பிட்ட இடங்கள், சுரங்கப்பாதைகள், சாலைகள் மட்டும் திரும்ப-திரும்ப பாதிக்கப் படுவது, அவர்களது இயலாமை மட்டுமல்லாது, இது வரை செய்து வந்த பணிகளின் மீதும் சந்தேகம் எழுகின்றது. இது வரை பலநூறு கோடிகள் செலவழிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், அதே இடங்களில் அதே பிரச்சினைகள் மறுபடி-மறுபடி ஏற்படுகின்றன. இதனால், பெரும் பேச்சு, அறிக்கைகள், ஊடகங்களில் திணிக்க்ப்படும் வாக்குறுதிகள் எல்லாமே பொய்த்து போய் விடுகின்றன.

21ம்நூற்றாண்டிலேயே நவீன வசதி சேவைகள் முடங்குவது கேவலமான விசயம்; மின்சாரம் இல்லை, இன்டெர்நெட் இல்லை, மொபைல் சேவை (நெட்வொர்க்) இல்லை என்று ஒருபக்கம் விஞ்ஞான-தொழிற்நுட்ப முன்னேற்றங்கள் இளித்து விட்டன.  இவற்றுடன் சம்பத்தப் பட்டவர்களின் இயலாமை அவர்களது உதவாக்கரை தன்மையினைத் தான் அப்பட்டமாக மெய்ப்பித்துள்ளது. இந்த ஒருவாரத்தில் 29-11-2023 / 30-11-2023 மற்றும் டிசம்பர் 4 முதல் 6 வரை ஏற்பட்டுள்ள இழப்பிற்கு, சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் என்ன இழப்பீடு கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ 5-12-2023 அல்லது 06-12-2023 அன்று மின்சார சப்ளை வந்து, மொபைலுக்கு சார்ஜ் போட்டு, புகார் கொடுத்தாலும், “நாங்கள் பிரியாரிடி பேசிஸில் வேலை செய்கிறோம், ஐந்து மணி நேரம் ஆகும்,” என்று பதில் கொடுத்தது தான். 10 மணி நேரங்கள் கழித்தும் ஒன்றும் நடக்கவில்லை. அதாவது, மக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு இரண்டு நாட்கள் வைக்கப் பட்டிருக்கிறார்கள். 07-12-2023 அன்று வருமென்று எதிர்பார்க்கப் படுகிறது என்கின்றனர்.

மின்சார வெட்டு, தடை போன்றவை தொடர்வது: மின்சாரத்தை வைத்து வியாபாரம் செய்வது, அரசியல் விளையாடுவது என்றெல்லாம் ஒரு பக்கம் இருக்கும்நிலையில், இப்படியும் நடப்பது வேடிக்கை தான். மின்சாரத்தை நம்பித்தான், இன்றைக்கு எல்லா மக்களும் வாழ்கிறார்கள். மின்சாரம் இல்லையென்றால், நீர் கிடைக்காது; நீர் கிடைக்கவில்லை என்றால் என்னாகும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. வீட்டு உபயோகப் பொருட்கள்-கருவிகள் வேலை செய்யாது; சமைக்க மிக்க கஷ்டப் பட வேண்டியிருக்கும். இரவில் பேன் / மின்-விசிறி இல்லாமல் தூங்க முடியாது; கொசுக்கள் கடிக்கும்; குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெருங்கஷ்டங்களுக்கு உள்ளாவார்கள். பிறந்த குழந்தைகள், மாத குழந்தைகள், சிறு குழந்தைகள் அழுது கொண்டே இருக்கும். இதனால்,பெற்றோர்களும் கவலையுன் அவர்களைத் தேற்றிக் கொன்டிருக்க வேண்டும். ஒரு இரவு இப்படி கழித்து, இன்னொரு இரவையும் அது போல கழிப்பது என்பது, பெரிய கொடுமை.

பால் விநியோகம் நிறுத்தம்பாதிப்பு, ரேஷன் முறையில் கொடுப்பது முதலியன: இன்னொரு பக்கம் பால் சப்ளை இல்லை. ஒட்டு மொத்த சென்னைவாசிகள் ஆவின் பாலை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பால் விநியோகம் இல்லை. அதாவது, அங்கங்கு இருக்கும் டிபோக்களுக்கே பால் வரவில்லை என்கிறார்கள். 06-12-2023 அன்று பெரிய வரிசையில் நின்று அரை லிட்டர் பால் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பால் விற்பவர்களும் அடாவடித் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அதிக விலைக்கு விற்பது, மீதி சில்லரை சரியாகக் கொடுக்காதது என்றெல்லாம் செய்துள்ளனர். இத்தனை அவதி, கஷ்டம், துன்பம் என்றெல்லாம் இருக்கும் நிலையிலும், இவ்வாறெல்லாம் நடந்து கொள்ள இவர்களுக்கு எப்படி மனம் இருக்கிறது என்பது ஆய்வுக்குரியது. லட்சக் கணக்கில் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என்று கஷ்டப் பட்டுள்ளனர். பிறகு என்ன சித்தாந்தம் பேசி என்ன செய்து சாதிக்கப் போகிறார்கள்.

விஞ்ஞானம்தொழிற்துறை முன்னேற்றம் இருந்தும், இவற்றில் முன்னேற்றம் ஏன் இல்லை?:

  • பொதுப்பணித் துறை, குடிநீர்-வடிகால் வாரியம், சாலைத்துறை, மின்சார வாரியம், இத்தறைகளுக்கு அமைச்சர்கள், பெரிய-பெரிய அதிகாரிகள், தொழிற்நுட்ப வல்லுனர்கள், பலநிலைகளில் வேலை செய்யும் லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள் என்று எல்லோரும் பொறுப்பேற்பார்களா?
  • இந்த 60-70 ஆண்டுகளில் அவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள். விஞ்ஞான-தொழிற்நுட்பங்க்ளை அறிந்து தத்தமது  சேவைகளில் சிறந்தார்கள்?
  • பொது மக்கள் முன்னர் வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால், தத்தம் கார்களில் வலம் வருவார்களா?
  • இணைப்புகளுக்கு லஞ்சம் கேட்பார்களா?
  • கொடுக்கவில்லை என்றால், இணைப்புகள் கொடுப்பார்களா? 2024ல் இவையெல்லாம் நடக்காமல் இருக்குமா?

கொஞ்சம் மனிதத்தன்மை இருந்தாலே, ஒவ்வொரு மனிதனும் கொஞ்சமாவது, மனசாட்சியுடன் யோசிப்பான், அயோக்கியத் தனம் செய்ய யோசிப்பான், லஞ்சம் வாங்கத் தயங்குவான்……ஆனால், நடந்து கொண்டு தானே இருக்கின்றன… இன்னும் சில நாட்களில் எல்லாமே சரியாகி, இயல்பு நிலைகளுக்கு வந்து விட்டால், பிழைப்புக்கு-வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால், மறந்தும் விடுவர். டிவி-மொபை சேவை தொடங்கியவுடன் டிவி-சீரியல், சினிமா என்றும் பார்க்க ஆரம்பித்து விடுவர். அரசியல்வாதிகள், சிலை திறப்பு, மணிமண்டம் கட்ட அடிக்கல் நாட்டுவது என்று கிளம்பி விடுவர்.

© வேதபிரகாஷ்

07-12-2023


[1] தினமலர், 20 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன், மாற்றம் செய்த நாள்: டிச 06, 2023 23:23.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3497602

2023 மிக்ஜாம் புயல் 2015ஐ மீறி சென்னை மக்களை பாதித்தது – விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் ஏன் பாடம் கற்க முடியவில்லை? (2)

திசெம்பர் 7, 2023

2023 மிக்ஜாம் புயல் 2015 மீறி சென்னை மக்களை பாதித்ததுவிஞ்ஞானம்தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் ஏன் பாடம் கற்க முடியவில்லை? (2)

அதிக விலைக்கு விற்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப் படும்: சென்னையில் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்[1]. அதிகளவு பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்[2]. ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்[3]. ஆவின் பாலின் தேவை 4 மடங்கு அதிகரித்துள்ளது[4]. சென்னையில் வழக்கமாக 15 லட்சம் லிட்டர் பால் தேவை இருக்கும் நிலையில் தற்போது 60 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது[5]. இருப்பினும் ஆவின் பால் விநியோகத்தை சீராக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பால் அனுப்பி வைக்கப்படுகிறது[6]. ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பில் உள்ளது. ஆவின் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு தடையின்றி விற்பனை செய்ய வேண்டும். பால் சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். அதேபோல் ஆவின் முகவர்கள், விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பால் விநியோகம் பாதிப்பு பற்றி அரசு அதிகாரிகளின் விளக்கம்: இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறும்போது, “அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் மழைநீர் பாதிப்பு ஏற்பட்டது. இதுதவிர, மழையால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால், பால் விநியோகம் பாதித்தது. புதன்கிழமை ஆவின்பால் விநியோகம் சீராகிவிடும்” என்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டிப் போட்ட, ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ஒரு லிட்டர் பால், 200 ரூபாய்; குடிநீர் கேன், 250 ரூபாய்; படகில் மீட்க, 2,500 ரூபாய். வெள்ளக்காடாக கிடக்கும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் நிலவரம் இதுதான். வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு, ஒரு வேளை உணவு கிடைப்பது கூட அரிதாகிப் போன நிலையில், நிவாரணம் என்ற பெயரில் போட்டோவுக்கு மட்டும், ‘போஸ்’ கொடுக்கும் அரசியல் மற்றும் சுய விளம்பரப் பிரமுகர்களால், மீட்புப்பணிகள் தாமதமாகி வருகின்றன.

மழைநீர் நிற்குமிடங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு: வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், முடிச்சூர் உட்பட பல பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை, வெள்ளம் புகுந்துள்ளது. தரை தளத்தில் வசிப்போர், மேல் தளங்களில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். புயல் முன்னெச்சரிக்கையாக, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், இரண்டு நாட்களுக்கு தேவையான குடிநீர், அரிசி, காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைத்திருந்தனர். தற்போது, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். வெள்ள நீர் வடியாததால், வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை. இதனால், பால், குடிநீர், காய்கறிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாலுக்கு மக்கள், மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் பரிதாப நிலை காணப்படுகிறது. ஆனால், வழக்கம்போல் பால் வினியோகம் நடப்பதாக, ஆவின் தரப்பிலும் அதன் அமைச்சராலும் சொல்லப்படுகிறது.

சேவை செய்கிறோம் என்று விளம்பரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் முதலியோர்: கள நிலவரமே தெரியாமல் அதிகாரிகளும், அமைச்சர்களும் இருப்பதாக, பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரு பக்கம், அரசியல்வாதிகள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பால் பாக்கெட்டுகளை முகவர்களிடம் மொத்தமாக வாங்கிக் கொள்கின்றனர். இதனால், வீடுகளுக்கு பால் கிடைக்கவில்லை. இவர்கள் பெரும்பாலும் விளம்பரத்திற்காக சேவை செய்வடு போலவே தெரிகிறது. ஏனெனில் கொடுக்கும்பொழுது செல்வி எடுத்துக் கொள்வது, போட்டோ-வீடியோ எடுப்பது, பேட்டி காண்பது போன்றவையும் சேர்ந்துள்ளது. குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், பால் வினியோகம் முற்றிலும் தடையாகி உள்ளது. ஆவின் மட்டுமின்றி, தனியார் பால் பாக்கெட்டுகளும் கிடைக்காததால், விலை தாறுமாறாக ஏறி விட்டது[7]. ஒரு லிட்டர் பால், 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது[8].

பாலைத் தொடர்ந்து, குடிநீர் விலையும் ஏறிவிட்டது: அதேபோல், குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது[9]. மழைக்கு முன்பு, 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட, 25 லிட்டர் குடிநீர் கேன், 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது[10]. காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பல கடைகளில் தண்ணீர் புகுந்ததால், பொருட்கள் சேதமடைந்துள்ளன. இன்னமும் முழு அளவில் கடைகள் திறக்கப்படவில்லை. ஒன்றிரண்டு கடைகள் திறந்திருக்கும் நிலையில், பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. இதனால், அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நடந்து செல்ல முடியாத பகுதிகளுக்கு, படகுகள் வழியாக சென்று, உணவு பொட்டலங்கள் வழங்குவது, வெளியில் வர விரும்புவோரை அழைத்து சென்று, நிவாரண முகாம்களில் தங்க வைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், முப்படை வீரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், அவர்கள் செல்லாத பகுதிகளுக்கு, சிலர் தனிப்பட்ட முறையில் படகுகளை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் ஒரு குடும்பத்தை மீட்க, 2,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

அதிகமாக வாங்கி வைக்க வேண்டாம் என்று அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை: பேரிடா் காலத்தைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருள்களைக் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா எச்சரித்தார்[11]. இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது[12]: “அத்தியாவசியப் பொருள்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். பால் விநியோகத்தைப் பொருத்தவரை சென்னையில் 19 லட்சம் லிட்டா் வழக்கமாக விநியோகிக்கப்படும்[13]. புதன்கிழமை 14 லட்சம் லிட்டா் வழங்கப்பட்டது. வியாழக்கிழமைமுதல் இயல்பான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்படும்[14]. 8 மாவட்டங்களிலிருந்து 6,650 கிலோ பால் பவுடா் விநியோகிக்கப்படுகிறது. 50 ஆயிரம் குடிநீா் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. சென்னை குடிநீா் வாரியம் மூலம் 15 ஆயிரம் 20 லிட்டா் கேன்கள் தயாரித்து விநியோகிக்கப்படுகிறது. 34,000 ரொட்டி பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. வியாழக்கிழமை 50,000 ரொட்டி பாக்கெட்டுகள் பெங்களூரிலிருந்து வரவழைக்கப்படும். தேவைக்கு மேல் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்கள் வாங்கி வைக்க வேண்டாம்[15]. குடிநீா், பால் விநியோகத்தில் தேவைக்கும், கையிருப்புக்கும் இடையே அதிக இடைவெளி உள்ளது[16]. வியாபாரிகள் குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டாம்[17]. அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்கக் கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.[18]

© வேதபிரகாஷ்

07-12-2023


[1] நக்கீரன், பதற்றமடைந்து அதிக பால் பாக்கெட்டுகளை வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்‘ – அமைச்சர் வேண்டுகோள், நக்கீரன் செய்திப்பிரிவு  Photographer, Published on 06/12/2023 | Edited on 06/12/2023.

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/people-should-not-panic-and-buy-more-milk-packets-and-stock-minister-mano

[3] தினகரன், சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல், December 7, 2023, 4:51 am

[4] https://www.dinakaran.com/special-attention-avin-milk-powder-minister-mano-thangaraj/

[5] தமிழ்.ஒன்.இந்தியா, வெள்ளத்தில் கிடைத்தவரை லாபம் .. பாலுக்கு கூடுதல் விலை.. நடவடிக்கை பாயும்.. மனோ தங்கராஜ் வார்னிங், By Jeyalakshmi C, Published: Wednesday, December 6, 2023, 10:56 [IST].

[6] https://tamil.oneindia.com/news/chennai/minister-mano-thangaraj-warns-of-strict-action-if-milk-is-sold-at-a-higher-price-563515.html

[7] தினமலர், ஒரு லிட்டர் பால், 200 ரூபாய்; குடிநீர் கேன், 250 ரூபாய்; படகில் மீட்க, 2,500 ரூபாய். மாற்றம் செய்த நாள்: டிச 06,2023 23:38

[8] https://m.dinamalar.com/detail.php?id=3497645

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கேன் தண்ணீர் ரூ. 200… அரை லிட்டர் பால் ரூ. 100; ஆத்திரம் அடைந்த செம்மஞ்சேரி பொதுமக்கள் சாலை மறியல், WebDesk, Dec 07, 2023 04:31 IST.

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/floods-affected-semmancheri-people-road-block-protest-need-basic-facilities-1812977

[11] தினமணி, கூடுதல் விலைக்கு பொருள்கள்:தலைமைச் செயலா் எச்சரிக்கை, By DIN  |   Published On : 07th December 2023 01:09 AM  |   Last Updated : 07th December 2023 01:09 AM

[12] https://www.dinamani.com/tamilnadu/2023/dec/07/chief-secretary-warns-of-additional-cost-of-goods-4118299.html

[13] எக்ஸ்சாம்.டெய்லி, பால், தண்ணீர் பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கைமுக்கிய எச்சரிக்கை!!, By Sivarangani -December 6, 2023.

[14] https://tamil.examsdaily.in/strict-action-to-take-if-milk-and-water-bottle-sale-in-extra-amount-in-tamilnadu/

[15] தமிழ்.நியூஸ்.18, அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை” – தலைமைச் செயலர் எச்சரிக்கை, LAST UPDATED : DECEMBER 6, 2023, 3:00 PM IST.

[16] https://tamil.news18.com/tamil-nadu/strict-action-if-essential-commodities-are-sold-at-higher-prices-1259931.html

[17] நியூஸ்.7.தமிழ், ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!, by Web Editor, December 5, 2023

[18] https://news7tamil.live/aavinpal-will-be-given-free-tomorrow-too-chief-secretary-shivdas-meena-information.html

2023 மிக்ஜாம் புயல் 2015ஐ மீறி சென்னை மக்களை பாதித்தது – விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் இந்நிலை ஏன்? (1)

திசெம்பர் 7, 2023

2023 மிக்ஜாம் புயல் 2015 மீறி சென்னை மக்களை பாதித்ததுவிஞ்ஞானம்தொழிற்நுட்பங்கள் முன்னேறியும் இந்நிலை ஏன்? (1)

05-12-2023 மற்றும் 06-12-2023 நாட்களில் சென்னை மக்களின் அவதி: சென்னைவாசிகளுக்கு மழை, பெரும்-மழை, சூறாவளி, சூறைக்காற்று, வெள்ளம், சாலைகளில் தண்ணீர் தேங்குவது-ஓடுவது; ஏரிகளைத் திறந்து விடுவதால் வெள்ளம் புகுவது, தாழ்வான இடங்களில் வெள்ளம் பாய்வது, வீடுகளில் நீர் வருவது-தேங்குவது, மின்சாரம் துண்டிப்பு, என்பனவெல்லாம் புதியதல்ல. 1950-60களிலிருந்து கவனித்து வருவர்களுக்கு நன்றாகத் தெரிந்த விசயம் தான். ஆனால், 2015ற்குப் பிறகும், அதே நிலை அல்லது அதை விட மோசமான நிலை தொடர்வது திகைப்பாக உள்ளது. இப்பொழுது டிசம்பர் 2023ல் தொடர்மழை காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய தேவையான ஆவின்பால் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டனர்[1]. மேலும், சில இடங்களில் அதிக விலைக்கு பழைய பால் பாக்கெட்டுகளை வாங்கி செல்லும் நிலையும் ஏற்பட்டது[2]. இப்படி கொஞ்சம்-கொஞ்சமாக செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. துரதிருஷ்டவசமாக, இம்முறை ஊடகங்களே விவரங்களை மறைப்பது வேதனையாக உள்ளது. ஏனெனில், இதனால், கஷ்டப் பட்ட, தொடர்ந்து சொல்லொனா இன்னல்களை அனுபவித்து வரும்பொது மக்களின் நிலை, அவர்களது இழப்பு மாறப் போவதில்லை.

05-12-2023 மற்றும் 06-12-2023 நாட்களில் ஆவின் பால் விநோகம் இலாமல் இருந்தது: `மிக்ஜாம்’ புயல் காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 முதல் 5 அடிகள் வரை மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வாக உள்ள வீடுகளில் நீர் புகுந்துள்ளது. மழைநீர் வடியாத நிலையில், பல இடங்களில் போக்குவரத்து முடங்கி, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் கடும்அவதிப்பட்டனர். குறிப்பாக, குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெரும் இன்னலை சந்தித்தனர். சென்னையில் வியாசர்பாடி, எம்கேபி நகர்பகுதி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, செனாய்நகர், கோயம்பேடு, அம்பத்தூர், மயிலாப்பூர் உட்படபல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. இங்கு பழைய மாம்பலம் ஏன் விடுபட்டது என்று தெரியவில்லை. சென்னையில் ஆவின் பாலைபொருத்தவரை 14.75 லட்சம் லிட்டர் பால் தினசரி விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தொடர்மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்களில் 05-12-2023 அன்று காலையில் பால் விநியோகம் மிகக்குறைவாகவே இருந்தது.

ரேஷன் முறையில் ஆவின் பால் விற்கப்பட்ட நிலை: சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் சாலை முழுதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது[3]. பல சுரங்கபாதைகளில் நீர் நிரம்பியதால் மூடப் பட்டன. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே போக்குவரத்து தடைபட்டுள்ள காணத்தால் சென்னை முழுதும் பால் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிகிறது[4]. ஒரு சில இடங்களில் மட்டுமே பால் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பாலை வாங்க பொதுமக்கள் நெடுந்தொலைவு வரை வரிசையில் காத்திருந்தனர். ஆவின் பால் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட் விநியோகமும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறும்போது, “ஆவின் பால் மட்டுமின்றி தனியார் பால் பாக்கெட்டும் கிடைக்கவில்லை. சில இடங்களில் அதிக விலைக்கு பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பால், பழைய பாக்கெட் என்பதால், திரிந்து கெட்டுப்போனது. எனவே, அத்தியா வசிய தேவையான பாலை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்த ஆய்வு: ஒரு பக்கம் இவ்வாறு இர்க்கும்நிலையில், தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார் என்ற செய்திகளும் வந்துள்ளன. சிலபால் பூத்துகளுக்குச் சென்றார். பார்வையிட்டார், என்றெல்லாம் செய்திகள் உள்ளன. இருப்பினும், அவர் என்ன, எத்தகைய ஆய்வு செய்தார் என்று தெரியவில்லை பால் விநியோகம் பாதிக்கப்பட்டதற்கு அமைச்ச்சரும் அதிகாரிகளும் பல காரணங்களைக் கூறினர்.

  1. ஆவின் தொழிற்சாலைகளில் வேலையாட்கள் குறைவாக வேலை செய்தனர். அதாவது, மழை என்பதால் வரமுடியவில்லை.
  2. பால் விநியோக வண்டிகள் சாலைகளில் செல்ல முடியவில்லை. சாலை குண்டு-குழி, நீர் தேக்கம், ஒரு இடத்தில் வண்டி கவிழ்ந்தது முதலியன.
  3. சப்ளை-டிமான்ட் பிரச்சினை – அம்பத்தூர்-சோழிங்க நல்லூர்-மாதவரம் தொழிற்சாலைகளிலிருந்து உற்பத்தி, விநியோகம் குறைந்தது;
  4. குறிப்பாக அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது
  5. அதிக விலைக்கு டிப்போ-காரர்கள், கடைக்காரர்கள் விற்றது;
  6. மக்கள் அதிகமாக வாங்கி வைத்துக் கொண்டது….

 தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்: ஆவின் பால் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்[5]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத மழையால் பால் உற்பத்தியிலும், விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது[6]. குறிப்பாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்த நிலையில் வாகன போக்குவரத்து மிகப்பெரிய சவாலாக இருந்தது[7]. சென்னை மாநகரை பொறுத்தவரையில் வெளி மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு சென்னை அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது[8]. தனியார் பால் நிறுவனங்களை பொறுத்த வரையில் அவர்களும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பால் கொண்டு வருவது வழக்கம்[9]. சென்னை பெருநகர் பகுதியில் கால்நடை இல்லாத காரணத்தால் பால் உற்பத்தி செய்யப்படுவதில்லை[10]. இந்த சூழ்நிலையில் தான் 2 நாட்கள் ஆவின், தனியார் பால் விநியோகஸ்தர்கள் கூட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பால் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிட்டது[11]. அதிலும் குறிப்பாக அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது[12]. அதனால் போர்கால நடவடிக்கை மேற்கொண்டு பால் விநியோகத்தை சீரமைத்து தற்போது ஓரளவுக்கு பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பால் தேவையில் இடைவெளி ஏற்படாமல் தவிர்ப்பதற்கு பால் பவுடர் விநியோகமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் பொதுமக்கள் பால் தொடர்ந்து கிடைக்காதோ என்ற அச்சத்தில் அதிகமான பால் வாங்கும் நிலை உள்ளது. அதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

07-12-2023


[1] தமிழ்.இந்து, தொடர்மழை எதிரொலியால் விநியோகம் பாதிப்பு: சென்னையில் பால் கிடைக்காமல் மக்கள் அவதி, Published : 06 Dec 2023 07:42 AM; Last Updated : 06 Dec 2023 07:42 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1163807-people-are-suffering-due-to-lack-of-milk-in-chennai.html

[3] தினமலர், பால் விநியோகம் முடங்கியது, மாற்றம் செய்த நாள்: டிச 05,2023 06:29

[4] https://m.dinamalar.com/detail.php?id=3496673

[5] தினத்தந்தி, ஆவின் பால் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது ஏன்..? அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம், டிசம்பர் 6, 11:26 pm.

[6] https://www.dailythanthi.com/News/State/why-was-there-difficulty-in-distributing-milk-minister-mano-thangaraj-explained-1085101

[7] சமயம்,  நிலைமை சீராயிடுச்சு.. நாளை முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடையும் இருக்காது.. மனோ தங்கராஜ் சொன்ன குட் நியூஸ்!,  Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 6 Dec 2023, 4:48 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/state-news/minister-mano-thangaraj-says-situation-stabilized-and-there-will-be-no-interruption-in-aavin-milk-supply-from-tomorrow/articleshow/105784396.cms

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், Avian milk : பதற்றமடைந்து தேவையை விட அதிகமாக பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்மனோ தங்கராஜ், Ajmal Khan, First Published Dec 6, 2023, 8:51 AM IST; Last Updated Dec 6, 2023, 8:51 AM IST

[10] https://tamil.asianetnews.com/tamilnadu/mano-thangaraj-requested-that-the-public-should-not-buy-too-much-milk-and-stock-up-kak-s586o8

[11] தமிழ்.ஏபிபி.லைவ், Aavin Milk: நிறுத்தப்பட்ட உற்பத்தி.. இரண்டாவது நாளாக முடங்கியது ஆவின் பால் விநியோகம்! காரணம் என்ன..?, By: முகேஷ் | Updated at : 06 Dec 2023 01:01 PM (IST), Published at : 06 Dec 2023 01:01 PM (IST)

[12] https://tamil.abplive.com/news/chennai/there-has-been-severe-shortage-of-milk-in-chennai-and-its-surrounding-areas-for-more-than-2-days-due-to-cyclone-michuang-154322

மழை, பெரும்மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மா-பள்ளம் பிரச்சினை என்ன? மழைநீர் தேங்குவது ஏன், வெள்ளம் வீடுகளில் புகுவது எப்படி? (3)

திசெம்பர் 2, 2023

மழை, பெரும் மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மாபள்ளம் பிரச்சினை என்ன? மழை நீர் தேங்குவது ஏன், வெள்ளம் வீடுகளில் புகுவது எப்படி?  (3)

சேகர்பாபு கொடுத்த விளக்கம்: அதைத் தொடர்ந்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “வடசென்னையில், முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொசஸ்தலை மழைநீர் வடிகாலுக்காகக் கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது[1]. சென்னையில் சாலை 5,500 கி.மீ நீளம் இருந்தாலும், சென்னையைச் சுற்றி பழைய கால்வாய்களை இடித்து அகலப்படுத்தி, புதிய கால்வாய்களை ஏற்படுத்தியதில் 1,450 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது[2]. அடையாற்றில் வரும் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரால் மாம்பலம் கால்வாயில் நீர் வெளியேறாதது தெரியவந்தது[3]. இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க அறிவுறுத்தினார்[4]. இவ்வாறு இவர்கள் பேசியது, அரசு-ரீதியில் தான் இருந்ததே தவிர, தொடரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் போக்கில் இல்லை.

மின்சாரத்தால் பாதிக்கப் பட்டு, இரண்டு பேர் உயிரிழப்பு: தியாகராயநகர் பகுதியில் பாண்டிபஜார் சிவஞானம் சாலை, பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை ஆகியவணிக பகுதிகளிலும் மழைநீர் தேங்கிபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை புது பெருங்களத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (23), நேற்று முன்தினம் இரவு மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலை வழியாகக் கொட்டும் மழையில் சாலையில் தேங்கிய நீரில் செல்போனில் பேசியபடி சென்றார். அப்போது அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார்[5]. தியாகராயநகர் வாணி மஹால் முன்புறம் உள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மின்விளக்கு கம்பத்தின் அருகே, மின்சாரம் தாக்கி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இசாசுல் (19) உயிரிழந்தார்[6]. “லோடு” அதிகமாகிறது என்று இப்பொழுதெல்லாம் பத்து வீடுகளுக்கு இடையில் ஒரு மின்சார கேபிள் இணைப்புப் பெட்டிகள் வைக்கப் பட்டு வருகின்றன. மின்சார துண்டிப்புப் பிரச்சினை வந்தால், அங்கங்கு ஆர்த்து, சரிசெய்யலாம் என்ற நோக்கில் இவை வைக்கப் படுகின்றன. ஆனால், இவையெல்லாமே அவசரம்-அவசரமாக வைக்கப் பட்டவைப் போலத் தான் இருக்கின்றன. கேபிள்கள், கேபிள் இணைப்புகள் முதலியவை தெரிவது போலத் தான் இருக்கின்றன. சரியாக கதவுகள் மூடப் படுவதில்லை. சாலை இருக்கும் அதே உயரத்தில் இருப்பதாலும், தொடர்ந்து சாலை உயர்த்தப் படுவதாலும், அவை கீழே செல்கின்றன. இதனால், தண்ணீரில் முழுகும் நிலை ஏற்படுகிறது. இதுதான் னின் கசிவு, ஷாக்க்கிற்கு காரணமாகிறது.

Photo courtesy – The Hindu

1950-60களிலிருந்து தொடர்ந்து இருக்கும் பிரச்சினை: மழைக்காலத்தில் 1950களிலிருந்து, அப்பொழுது மாம்பலம் இப்பொழுது மேற்கு மாம்பலம் என்று அழைக்கப்படுகின்ற இடத்தில், ஒவ்வொரு ஆண்டிலும் பொதுவாக மழை நீர் தெருக்குறளில் தேங்கி நிற்கும். குறிப்பாக மூன்று, ஐந்து, ஏழு என்றெல்லாம் விட்டு ஆண்டுகளில் மழையினால்  அதிக நீர் வரும். வெள்ளம், பெருவெள்ளம், புயல், சுனாமி போன்ற காலங்களிலும் இயற்கையாகவும் மற்றும் சென்னை சுற்றியுள்ள ஏரிகளில் நீர்நிலை தேக்கம் அதிகமாக இருக்கும் பொழுது, அந்த நீரை திறந்து விடுவதாலும் இத்தகைய வெள்ளம் இப்பகுதியில் ஏற்படுகிறது. இதனால் நிச்சயமாக வீடுகளில் 1940-60 என்று பார்த்தால், அக்காலகட்டத்தில் கட்டியுள்ள வீடுகளில் முதலில் ஒரு அடி, 2 அடி 3 அடி என்று, 2000 ஆண்டுகளில் 5 அடிக்கு நீர் தங்க ஆரம்பித்தது. இதனால், அத்தகைய பழைய வீடுகளில் வசித்தவர்கள், பெரும்பாலான மக்கள் மிகவும் அவதிப்பட்டு தான் வந்திருக்கின்றனர். ஏனென்றால் அத்தகைய நீர் வரும்போது அவர்கள் வீடுகளில் இருக்கும் எல்லா பொருள்களுமே மூழ்கிவிட்டு நாசமாகின்றன அதிலிருந்து மீட்கப்படுகின்ற பொருட்கள் என்பது நிச்சயமாக ஒரு 30 இருந்து 50 சதவீதம் கூட உருப்படியாக இருக்காது.

Photo courtesy – The Hindu

மாபள்ளம்,” ஏரிக்கரைத் தெரு பிரிந்திருக்கிறது, ஆறியிருக்கிறது, ஆனால், மழையில் சேர்ந்து விடுகிறது: மாம்பலம் என்பது “மா பள்ளம்” அதாவது இங்கு கிழக்குப் பக்கத்தில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியானது சைதாப்பேட்டை, மாம்பலம் நுங்கம்பாக்கம் வரை பரவி பெரிதாக இருந்தது. அதனால்தான், மாம்பலத்தில் இருந்து ஆரம்பிக்கும் இந்த “ஏரிக்கரை தெரு” என்பது நுங்கம்பாக்கம் வரைக்கும் சென்றது. பிறகு நுங்கம்பாக்கம், மாம்பலம் இடைப்பட்ட பகுதியில் வீடுகள், தெருக்கள், ரயில் தடங்கள் என்று வளர்ச்சி ஏற்பட்ட பொழுது, அது தனித்தனியாக பிரிந்தது, அதாவது “ஏரிக்கரைத் தெரு” இங்கும் உள்ளது, அங்கும் உள்ளது. எனவே இது ஏரிக்கரையில் பகுதியில் அமைந்திருந்த இடமானதால் பள்ளமாக தான் இருந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதாவது 1920 முப்பது நாற்பதுகளில் இந்த இடங்களை வாங்கி வீடு கட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த காலத்தில் அதாவது சுமார் நூறாண்டுகள் முன்பு கட்டப்பட்ட வீடுகள் இப்பொழுது நிச்சயமாக ஐந்து முதல் ஏழு அடி வரை தெருவின் அந்த நிலைக்கு கீழே தான் உள்ளன. அதனால் தான் பழைய வீடுகள் 2000 ஆண்டிலிருந்து ஒவ்வொரு மழை காலத்திலும் மூழ்கி வருகின்றன. ஆனால் நூறாண்டுகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றாலும், டிரைனேஜ் என சொல்லப்படுகின்ற கழிவுநீர்-மழை நீர் எல்லாம் முறையாக நிலத்தடிக்குச் செல்லுத்தப் பட்டு, குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு, வெளியேற்றும் முறை சரியாக செய்யப் படவில்லை.

Photo courtesy – The Hindu

கிழக்கு உயர்ந்து, மேற்கு தேய்ந்த விதம்: 1947க்கு – விடுதலைக்கு முன்னர் தெருக்களில் பூமிக்கு அடியில் பதிக்கப் பட்ட அதே குழாய்கள் தான் இப்பொழுதும் பயன் படுத்தப் படுகின்றன. “வெள்ளக் காரன் காலத்தில் போடப் பட்ட பைப்பு” என்றும் வயதான மக்கள் கூருகின்றனர். இந்த 100 ஆண்டுகளில் மாம்பலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது கிழக்கு பக்கம் மட்டும் தியாகராய நகர் /டி.நகர் / தி.நகர் என்று மற்றும் மேற்கு பக்கம் மேற்கு மாம்பலம் என்றும் அழைக்கப்படுகிறது. எல்லாவித வளர்ச்சி அதே போல கிழக்கு பக்கத்தில் அதிகமாக இருந்து வருகிது, ஆனால் மேற்கு பக்கம் குறைவாகவே உள்ளது. “சரவணா ஸ்டோர்ஸ், குமரன், பொத்தீஸ்” என்றால் இந்தியா முழுவதும் தெரிந்துள்ளது. ஆனால் அசோக் நகர் என்ற குடியிருப்பு உருவானதால், அதை சுற்றிலும் முக்கியமான அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரமுகர்கள், பணக்காரர்கள் என்று இடம் வாங்கி, அதிகமாக வீடுகள் கட்டிக் கொண்டு, குடியேறியுள்ள படியால், அங்கு இருப்பவர்கள் தி.நகர் மற்றும் மவுண்ட் ரோடு செல்ல இந்த மேற்கு மாம்பலம் வழியாகத்தான் செல்ல வேண்டி இருந்தது. அதனால் தான் 1960களில் துரைசாமி ரோடு சப்வே அதாவது தரைக்கீழ் சொல்லும் பாலமாக இருந்தது, அமைக்கப்பட்டது, ஆகையால் இந்த அப்பகுதியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மிக சாதாரணமாக இருக்கிறது.

Photo courtesy – The Hindu

குடிநீர்கழிவு வடிகால் வாரியம் ஏன் முறையாக வேலை செய்யவில்லை?: இது ஒரு பக்கம் இருக்க, நமது பழைய பிரச்சனைக்கு செல்வதானால், இந்த நூறாண்டுகளில் இத்தனை வளர்ச்சிகளில், தெருக்களும் போடப்படுகின்றன. அவற்றின் உயரமும் அதிகமாகி வருகிறது. அதாவது ஒவ்வொரு தடவையும் “ரோடு” போடும் போதும், மூன்று ஐந்து இஞ்சுகள், அங்குலங்கள் உயரமாகி, சென்ற 50-100 ஆண்டுகளில் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது எனலாம். ஆனால் அதே நிலையில் 1920-30 களில் பதிக்கப்பட்ட அந்த குழாய்கள், அதே அளவுக்கு பூமியின் கீழே சென்று விட்டன. ஆனால் ஒவ்வொரு தடவை ரோட் போடும் பொழுது, பாதை மட்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. மழைநீர் செல்லும் பாதைகள் எப்பொழுதாவது உயர்த்திக் கட்டப் படுகின்றன. ஆனால், கட்டிட கழிவுகள், குப்பைகள் மூலம் பெரும்பாலும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சொல்லாமல் அந்த நீர் எப்போதும் தெருக்குறளில் தான் தேங்கி இருக்கும் நிலை இருந்டு வருகிறது. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். இதில் இருக்கும் ஊழல் போன்றவை பற்றி எல்லாம் பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் மக்கள் தான் அவதிபடுகிறார்கள் தவிர, வந்து செல்லும் அரசுத்துறை அதிகாரிகளுக்கு எந்த அக்கரையும் இல்லை என்றே தெரிந்து வருகிறது.

© வேதபிரகாஷ்

02-12-2023

Photo courtesy – The Hindu


[1] தினபூமி, 2 ஆண்டுகளாக செய்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது: அமைச்சர், வியாழக்கிழமை, 30 நவம்பர் 2023 

[2] https://www.thinaboomi.com/2023/11/30/214952.html

[3] தமிழ்.ஏபிபி.லைவ், கோடம்பாக்கம் , மேற்கு மாம்பலம் மழைநீர் தேங்க இதுதான் காரணம் | Chennai Rain, 30-11-2023, 9.00 PM.

[4] https://tamil.abplive.com/short-videos/news/chennai-chennai-rain-precaution-on-chennai-cropration-commissnor-speech-latest-news-watch-video-153430

[5] தமிழ்.இந்து, சென்னையில் கனமழையால் குடியிருப்புகள், சாலைகளில் வெள்ளம்: 2 பேர் உயிரிழப்பு, செய்திப்பிரிவு, Published : 01 Dec 2023 08:02 AM, Last Updated : 01 Dec 2023 08:02 AM.

[6]  https://www.hindutamil.in/news/tamilnadu/1161744-flood-in-chennai-flats-and-roads-4.html

மழை, பெரும்மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மா-பள்ளம் பிரச்சினை என்ன? (1)

திசெம்பர் 2, 2023

மழை, பெரும் மழை, புயல், வெள்ளம் வந்தால், மாம்பலம், பழைய மாம்பலம், மேற்கு மாம்பலம், மாபள்ளம் பிரச்சினை என்ன? (1)

29-11-2023 இரவு 30-11-2023 அன்று சென்னையில் பெய்த மழை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 அல்லது 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது[1]. இந்நிலையில் 30-11-2023 அன்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக மயிலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்[2]. சென்னையில் 30-11-2023 அன்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. ஏற்கெனவே சாலைகள் குண்டும்-குழியாக இருந்ததால், ஆங்காங்கே ஆட்டோ, ஸ்கூட்டர்கள் சிக்கி கொண்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தது.

பலவிதமான செய்திகளும் நிவாரண வேலைகளும்: தி.நகர் பஸ் நிலையத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர்தேங்கி இருந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டார்கள். கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்…. சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். என்றெல்லாம் செய்திகள் கொஞ்சம்-கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்தன. ஆனால், ஊடகங்கள் அமுக்கியே வாசித்தன. வழக்கம் போல காதலியை காதலன் கழுத்தறுத்தான், கஞ்சா விற்பலை, சிலை திறப்பு, முதலியவைதான் முக்கியமாக இருந்தன. இங்கு கஷ்டப் பட்டவர்கள் பொது மக்களும் அந்த கடைநிலை ஊழியர்கள் மற்றும் உண்மையாக தெருக்களில்-சாலைகளில் போராடி வேலை செய்தவர்கள் தாம்.

2015க்கு பிறகு சென்னையில் அதிக கனமழை பெய்துள்ளது: 2015க்கு பிறகு சென்னையில் அதிக கனமழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்பொழுது ஏரி நீரைத் திறந்து விட்டோம்,இப்பொழுதும் திறந்து விடுகிறோம் என்பது அறிவியல் சார்ந்த வேலையுமில்லை, தீர்வும் இல்லை. இது குழந்தைத் தனமானது, அறிவற்றது, ஏன் முட்டாள் தனமானது எனாலாம்.. 2015க்கும்பிறகும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று தான் தெரிகிறது. குடிநீர்-வடிகால் துறையில் இருக்கும் விற்பனர்கள் ஒவ்வொரு ஆண்டும் அறிந்த, உணர்ந்த மற்றும் அனுபவித்த பிரச்சினைகளிலிருந்து, மீண்டு, முன்னேறி, நடந்தவை மறுபடியும் நடக்காமல் இருக்க வழி வகுக்க வேண்டும். பொறியியல் படித்து ஏ.இ, ஜே.இ என்றெல்லாம் பல பதவிகளில் இருப்பவர்கள் இவற்றில் கொஞ்சம் கவனம் செல்லுத்த வேண்டும். எந்த கொட்டத்தில் போஸ்டிங் கிடைத்தால் வசூலில் அதிகம் கிடைக்கும் என்று மட்டும் இருந்து வேலை செய்தால், அவதிபட்டு வரும்மக்களுக்கு எந்த விடிவு காலமும் வராது, தீர்வும் கிடைக்காது. இதனால் தான் கோடிகள் செலவழிப்பதாக கணக்குக் காட்டப் படுகிறது, ஆனால், 70 ஆண்டுகளில் நிலைமை மோசமாகிக் கொண்டுதான் போகிறது.

Photo courtesy – The Hindu

அடையாறு வழியாக கடலுக்குச் செல்லும் மழைநீர் ஏன் தடை படுகிறது?: மழை நீர் தொடர்ந்து சென்று கடலில் கலப்பது என்பது இயற்கையான விசயம். பிறகு, அது அவ்வாறு செல்லாமல், உள்ளேயே தேங்கி நிற்கிறது என்றால், அத்தகைய இயற்கைக்கு மாறாக எதையோ மனிதன் செய்திருக்கிறான் என்று தெரிகிறது. அவ்வாறிருக்கும் பொழுது, அந்த பிரச்சினையைக் கண்டு பிடித்து, சரிசெய்யாமல், மேன்மேலும், இருக்கும் கால்வாய்களை சீரமைப்பது, பெரிது செய்வது என்று திரும்ப-திரும்ப செய்வதினால் என்ன பலன் ஏற்படப் போகிறது என்று தெரியவில்லை. நீரிலைகள் ஆக்கிரமிக்கப் படுவது – அதாவது ஏரிகள்,குளங்கள் தூர்க்கப் பட்டு, குப்பை-மண் போடப் பட்டு, கொஞ்சம்-கொஞ்சமாக ஆக்கிரமிக்கப் பட்டு, அந்த இடம் விற்கப் படுகிறது.இப்படித்தான் கோவில் குளங்கள் காணாமல் போகின்றன, கோவில் நிலங்களும் ஆக்கிரமிக்கப் பட்டு, பட்டா போட்டு விற்கப் படுகின்றன.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்புஎச்சரிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் சென்னையிலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, அணைக்கு வரும் நீரின் வரத்தும் அதிகரிக்கிறது. மேலும், தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் குறித்த முன்னெச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ளது. அதற்கேற்ப சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை செம்பரப்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது[3]. இதனால் சென்னை அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது[4]. மழைநீர்அதிக அளவில் தேங்கிய மேற்கு மாம்பலம் பகுதியில் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன் நேற்று காலை ஆய்வு செய்தார்[5].  அடையாற்றில் வரும் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரால் மாம்பலம் கால்வாயில் நீர் வெளியேறாதது தெரியவந்தது[6]. இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க அறிவுறுத்தினார்[7]. மா.சுப்பிரமணியன் கூறியதாவது, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது[8]. கால்வாய்கள் வழியாக மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[9]. செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 6,000 கனஅடி வரை உபரிநீர் திறந்த போதும், பெரிய அளவில் பாதிப்பில்லை[10]. மாம்பலம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மேற்கு மாம்பலம் பகுதியில் வெள்ளம் சூழந்தது[11]. செம்பரம்பாக்கத்தில் நீர்த்திறப்பு குறைக்கப்பட்டதால் மாம்பலத்தில் வெள்ளம் இனி வடிந்துவிடும்[12]. பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்து, உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது[13]. அடுத்தடுத்த நாட்களில் வரவுள்ள கனமழையையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்[14].

© வேதபிரகாஷ்

02-12-2023

Photo courtesy – The Hindu

[1] மக்கள் குரல், சென்னையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கன மழை, Posted on November 30, 2023.

[2]https://makkalkural.net/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/

[3] தமிழ்.நியூஸ், செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,000 கனஅடியாக உயர்வு, எழுதியவர் Nivetha P, Dec 01, 2023, 07:58 pm

[4] https://tamil.newsbytesapp.com/news/india/surplus-water-released-from-chembarambakkam-lake-to-3-000-cubic-metres/story

[5] தமிழ்.இந்து, சென்னையில் கனமழையால் குடியிருப்புகள், சாலைகளில் வெள்ளம்: 2 பேர் உயிரிழப்பு, செய்திப்பிரிவு, Published : 01 Dec 2023 08:02 AM, Last Updated : 01 Dec 2023 08:02 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/1161744-flood-in-chennai-flats-and-roads.html

[7] நியூஸ்.டி.எம், மேற்கு மாம்பலம் பகுதியில் வெள்ளம் சூழந்ததற்கு இது தான் காரணம்அமைச்சர்கள் விளக்கம்..!, By: Newstm Admin, Thu, 30 Nov 2023

[8]  https://newstm.in/tamilnadu/this-is-the-reason-for-the-floods-in-west-mambalam-area-the/cid12862721.htm

[9] தமிழ்.ஏபிபி.லிவ்மாம்பலம் மழைநீர் தேங்க இதுதான் காரணம். Entertainment. 30 Nov, 08:29 PM (IST).

[10] https://tamil.abplive.com/short-videos/news/chembarambakkam-lake-filled-due-to-heavy-rain-watch-now-153605?utm_source=desktop&utm_medium=top_nav&utm_campaign=tamil

[11] நியூஸ்,டிக், மேற்கு மாம்பலம் பகுதிகளில் மழை நீர் தேங்கியது ஏன்? : சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் விளக்கம், Written by –Revathi, Last Updated : 2 days 30-11-2023.

[12] https://www.newstig.net/2023/11/30/why-is-rain-water-stagnant-in-west-mambalam-areas-chennai-corporation-commissioner-radha-krishnan-explained/

[13] ஏபிசி.நியூஸ், மழைநீர் தேங்கியது ஏன்?”- அமைச்சர்கள் விளக்கம்!, By santhosh, நவம்பர் 30, 2023 12:53 மணி.

[14] https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/rain-water-ministers-says/53697

Photo courtesy – The Hindu

மூன்று தலைமுறைக்கு இருப்பதும், இல்லாததும்!

மே 16, 2010

மூன்று தலைமுறைக்கு இருப்பதும், இல்லாததும்!

மூன்று தலைமுறைக்குப் பின்னும் வருபவர்களுக்குக் கவலையில்லாமல் கொள்ளயடித்துக் கோடிகளை அள்ளிவைதுள்ள இவர்கள் மக்களைப் பற்றி ஏன் கவலைப் படப்போகிறார்கள்?

பிறப்பொக்குகம் எல்லா உயிர்க்கும் என்றால், இங்கே ஏன் இப்படி தண்ணீர் மொள்ளவேண்டும், அங்கோ பாட்டிலில் தண்ணீரை தயாராக வைத்திருக்க வேண்டும்?

செம்மொழி மாநாட்டுக்காக, கருணாநிதி எழுதிய பாடலை 3 தலைமுறையை சேர்ந்த பாடகர்கள் பாடியிருக்கிறார்கள்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறினார், இப்படி செய்தி!

பாடட்டும், ஆனால், இவர்களது அவலப் பாட்டை யார் பாடுவது? யார் இசை அமைப்பது? இதற்கு ஆஸ்காரா கொடுக்கப் போகிறார்கள்?

இங்கெ குடிநீர் இல்லை, ஆனால் அங்கோ 300 கோடிகள் செலவாம்! தேவையா? இப்படியெல்லாம் எந்த பகுத்தறிவும் கேட்பதில்லை!

அகப்பையுடன் ஊற்று நீருக்கு தவம்: தீராத மூன்று தலைமுறை அவலம்
மே 16,2010,00:00  IST

Important incidents and happenings in and around the world

காளையார்கோவில்: சிவகங்கை அருகே காளையார்கோவில் ஒன்றியம், இலந்தைக்கரை ஊராட்சியிலுள்ள கிராமங்களில் மூன்று தலைமுறைகளாக, கால்வாயில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்க வேண்டிய பரிதாபம் நிலவுகிறது.

இங்குள்ள பழுவூர், விலாங்காட்டூர், கிராம்புலி கிராமங்களில், பழுவூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. உவர்ப்பாக இருப்பதால் சமைக்க, குடிக்க பயன்படுத்த முடியாது. இதனால், பல ஆண்டுகளாக, விலாங்காட்டூர் அருகே நாட்டார் கால்வாயில் ஊற்று தோண்டி, நீண்ட அகப்பையில் தண்ணீர் எடுக்கும் அவலம் உள்ளது. கோடையில் தண்ணீர் வற்றி விடுவதால், நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர் எடுக்கின்றனர். இந்த அவலத்தை போக்க, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில், இந்த ஊராட்சி சேர்க்கப்பட்டது. குழாய்கள் சேதம் அடைந்துள்ளதால், முறையான வினியோகம் இல்லை. ‘கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டவில்லை’ என்ற கதையாக, ஊற்றில் பலமணி நேரம் தவம் கிடக்கும் நிலை இருக்கிறது.

‘காவிரி குடிநீர் சில நாட்கள் மட்டுமே வந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். நாட்டார் கால்வாயில் ஊற்று உள்ள இடங்களை தேர்வு செய்து, சிமென்ட் உரை அமைக்க வேண்டும். குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’ என ஊராட்சி தலைவர் கருப்பையா கூறியுள்ளார்.

செம்மொழி மாநாட்டுக்காக, கருணாநிதி எழுதிய பாடலை “3 தலைமுறையை சேர்ந்த பாடகர்கள் பாடியிருக்கிறார்கள்
தினத் தந்தி – ‎1 மணிநேரம் முன்பு‎

“செம்மொழி மாநாட்டுக்காக, முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய பாடலை 3 தலைமுறையை சேர்ந்த பாடகர்கள் பாடியிருக்கிறார்கள்” என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.